I LOVE TAMIL


Wednesday, December 23, 2009

புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு


கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது.​ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள்,​​ அமைப்புகள்,​​ இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம்.​ ​ மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது.​ இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால்,​​ ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும்,​​ முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான்.​ அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.​ உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது.​ ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது,​​ சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது;​ பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால்,​​ அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது.​ உலக நாடுகள் அனைத்தையும்,​​ ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் -​ கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும்,​​ வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால்,​​ அவற்றோடு சேர்ந்து பூமிக்கும்,​​ கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது.​ இவை ​ -​ நிலக்கரியும்,​​ பெட்ரோலியப் பொருள்களும் -​ சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம்,​​ காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது.​ இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் ​ பெருக்கின.​ இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின.​ கூடவே,​​ காடுகள் அழிக்கப்பட்டதும்,​​ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும்,​​ அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும்,​​ பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன.​ உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று,​​ நீர்,​​ அனைத்தும் ​ மாசுபட்டன;​ ​ மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின.​ வளர்ச்சியும்,​​ முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால்,​​ சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும்,​​ அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் ​ வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது.​ பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து,​​ மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது.​ பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின.​ இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால்,​​ மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை ​ எழுந்தது.​ ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி,​​ அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.​ இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.​ இதையடுத்து ஐ.நா.​ முயற்சியில் 1989,​ 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.​ கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள்,​​ கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா.​ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் ​ உருவாக்கப்பட்டன.​ ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும்,​​ 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன.​ தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது.​ இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா.​ 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா.​ கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது.​ புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும்,​​ இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்;​ வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால்,​​ அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ,​​ கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது;​ ​ என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள்,​​ வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி,​​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது.​ இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன.​ ​ இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.​ இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து -​ இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் -​ வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.​ இந்த 1992-ன் ஐ.நா.​ கோட்பாடு,​​ உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும்,​​ இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது.​ இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா.​ எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.எனினும்,​​ இந்த ஐ.நா.​ கோட்பாடு அடுத்தடுத்த ​ பேச்சுவார்த்தைகளுக்கும்,​​ மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.​ புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும்,​​ உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக,​​ சிறு தீவு நாடுகள்;​ தாழ்நிலைக் கடலோர நாடுகள்;​ சதுப்பு நிலம்,​​ காடுகள் நிறைந்த நாடுகள்;​ ​ ​ இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்;​ வறட்சி -​ பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்;​ நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்;​ எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்;​ எரிபொருள்களை ​(நிலக்கரி,​​ எண்ணெய்)​ எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள்,​​ சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது;​ வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா.​ கோட்பாட்டுக்கு,​​ வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது.​ ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும்,​​ 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் ​ சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது.​ 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு,​​ வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் ​(கரியமில வாயு)​ வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது.​ 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே,​​ புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ ​ உடன்பாட்டின் மையக் கோட்பாடு.​ இதுவே பொதுவான -​ ஆனால் பாகுபடுத்தப்பட்ட -​ பொறுப்புகள் என்று அறியப்பட்டது.​ இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா ​ இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி,​​ இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது.​ இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும்,​​ வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து,​​ கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும்,​​ கோபன்ஹேகனில் குழுமி,​​ ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு,​​ "பூமண்டலம் காப்போம்;​ ​ புவிவெப்பம் ​ தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று,​​ ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது.​ ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ,​​ சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ​ ஏற்க மறுத்தார்.தனிநபர் சராசரிக் கணக்கில்,​​ இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா,​​ தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல்,​​ வளரும் நாடுகள் -​ குறிப்பாக சீனாவும் இந்தியாவும் -​ கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது;​ ​ அது மட்டுமல்ல,​​ வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.வளரும் நாடுகள் ஜி -​ 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.சர்வதேச நிதி நெருக்கடியின்போது,​​ வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது.​ கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில்,​​ அமெரிக்காவையும்,​​ வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.​ ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,​​ பிரேசில்,​​ தென்ஆப்பிரிக்கா,​​ இந்தியா,​​ சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன;​ ​ இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.​ கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது,​​ 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே,​​ கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள்.​ இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள ​(கரியமில வாயு ​ குறைப்புக்கான)​ பொறுப்பு என்பது,​​ வளரும் நாடுகளான இந்தியா -​ சீனாவோ,​​ இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் -​ ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல்.​ கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக,​​ சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. ​பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 -​ 2012-ல் 3000 கோடி டாலரும்,​​ 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.​ ஆனால்,​​ கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!

நன்றி: www.dinamani.com - 23.12.2009 

Tuesday, December 15, 2009

தலையங்கம்: எச்சரிக்கை அவசியம்

வ ளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் நட​வ​டிக்​கைக்​கான பரு​வ​நிலை மாநாடு கோபன்​ஹே​க​னில் தொடங்கி ஒரு​வா​ரம் முடிந்த நிலை​யில்,​​ சிறு​சிறு காய்​ந​கர்த்​தல்​க​ளைச் செய்​துள்​ளன வள​ரும் நாடு​கள்.​ அதா​வது,​​ கரி​ய​மில வாயு உள்​ளிட்ட பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் அள​வு​க​ளில் கொஞ்​சம் முன்​பின் இருந்​தா​லும் அவை சரி​பார்க்​கப்​ப​டும் என்​ப​தும் இதில் ஒன்று.​
192 நாடு​க​ளின் பிர​தி​நி​தி​கள் பங்கு கொண்​டுள்ள இந்த மாநாட்​டில்,​​ 77 வள​ரும் நாடு​கள் உள்​ளன.​ வள​ரும் நாடு​கள் தங்​கள் பகு​தியி​லி​ருந்து பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைப்​பது என்​றால்,​​ அதற்​கா​கச் சில தொழில்​து​றை​யி​லும்,​​ அனல் மின்​உற்​பத்​தி​யி​லும் சில மாற்​றங்​க​ளைச் செய்​தாக வேண்​டும்.​ இந்​தத் தொழில்​நுட்ப மாற்​றத்​துக்​காக 1000 கோடி டாலர்​கள் உதவி செய்​வ​தாக ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.​
இந்​தத் தொகை மிகச் சொற்​ப​மா​னது என்று வள​ரும் நாடு​கள் கருத்​துத் தெரி​வித்​துள்​ளன.​ உண்​மை​யைச் சொல்​வ​தென்​றால்,​​ இந்த எதிர்ப்​பின் அள​வைத் தெரிந்​து​கொள்​ளத்​தான் ​ அவர்​கள் இதைத் தெரி​விக்​கி​றார்​கள்.​ எதிர்ப்​பின் அள​வைப் பொருத்து,​​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட வளர்ந்த நாடு​கள் தங்​கள் பங்​குத்​தொ​கையை மேலும் அதி​க​ரித்து,​​ வள​ரும் நாடு​களை நிர்​பந்​திக்​கும்.​ அதற்​கான முதல்​பே​ரம்​தான் இந்த 1000 கோடி டாலர்.​ இது மேலும் உய​ரும் என்​பது நிச்​ச​யம்.​
இதை அறி​வித்​துள்ள ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணைய இயக்​கு​நர் கார்ல் ஃபால்​கன்​பெர்​ஜர் வேறொரு விஷ​யத்​தை​யும் குறிப்​பிட்​டுள்​ளார்.​ அதா​வது,​​ "இந்த மாநாட்​டில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது பங்​குக்​குக் குறைக்​கப் போகும் பசு​மை​இல்ல வாயுக்​கள் அள​வு​க​ளில் சிறு மாறு​பா​டு​கள் இருந்​தா​லும் பர​வா​யில்லை.​ ஆனால் அவற்றை அந்​நா​டு​கள் சொன்​ன​படி செய்​கின்​ற​னவா என்று சரி​பார்க்க வேண்​டி​யது கட்​டா​ய​மா​கும்' என்று கூறி​யுள்​ளார்.​ சரி​பார்ப்​பது என்​ப​தன் வெளிப்​ப​டை​யான பொருள்-​ சொன்​ன​படி செய்​ய​வில்லை என்​றால் இந்த நிதியை நிறுத்​தி​வி​டு​வோம் என்ற மிரட்​டல்​தான்.​
வளி​மண்​ட​லத்​தில் பெரும்​ப​கு​தியை மாசு​ப​டுத்​திய நாடு​கள் வளர்ந்த நாடு​கள்​தான்.​ பல ஆண்​டு​க​ளாக இதைச் செய்​து​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைக் ​ கட்​டுப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் பல​வி​த​மாக முயல்​கின்​ற​னர்.​ 1990-ம் ஆண்டு முத​லாக மாசு​ப​டுத்தி வரும் இந்த வளர்ந்த நாடு​கள்,​​ தற்​போது தொழில்​நுட்​பத்​தின் உத​வி​யால் இந்த மாசு அள​வைக் குறைத்​துக் கொண்​டுள்​ள​தா​கக் கூறு​கின்​றன.​ கியோட்டோ தீர்​மா​னத்​தின்​படி மாசு​அ​ள​வைக் குறைப்​ப​தில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது மாசு அளவை 1990-ம் ஆண்​டின் அள​வுப்​படி நிர்​ண​யிக்க வேண்​டும் என்று குறிப்​பிட்​டி​ருந்​தா​லும்,​​ அமெ​ரிக்கா தனது அளவை 2005-ம் ஆண்டு அள​வின்​படி 17 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்​தத் தன்​னிச்​சை​யான அறி​விப்​பைத் தொடர்ந்து சீனா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 40 சத​வீ​தம் வரை ​(2005-ம் ஆண்டு அள​வுப்​படி)​ குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​தது.​
இந்த இரு நாடு​க​ளை​யும் தொடர்ந்து இந்​தி​யா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 20-25 சத​வீ​தம் ​(அமெ​ரிக்கா,​​  சீனா வழி​யில் 2005-ம் ஆண்டு அள​வின்​படி)​ படிப்​ப​டி​யா​கக் குறைத்​துக்​கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்த அறி​விப்​பைச் செய்​த​வர் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்.​ மாநாட்​டில் கலந்​து​கொண்டு பேசும்​முன்​பா​கவே இத்​த​கைய அறி​விப்பை அமைச்​சர் செய்​த​தற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து,​​ இந்த மாநாட்​டில் கலந்​து​கொள்​ள​வி​ருந்த குழு உறுப்​பி​னர்​கள் இரு​வர் தங்​கள் பய​ணத்தை ரத்து செய்​து​விட்​ட​னர்.​
இந்​தி​யத் தேவை​கள்,​​ இந்​தி​யா​வின் தொழில்​வ​ளர்ச்சி,​​ இங்​குள்ள தொழில்​நுட்​பம்,​​ மக்​கள்​தொகை அனைத்​தை​யும் கணக்​கில் கொண்டு மாநாட்​டில் பேச​வும்,​​ தனக்​கான அளவை நிர்​ண​யிக்​க​வும்,​​ வளர்ந்த நாடு​கள் வழங்​க​வுள்ள உத​வித்​தொ​கையை அதி​க​மா​கப் பெறு​வ​தும்​தான் இந்​தி​யா​வின் முழு நோக்​க​மாக இருக்க வேண்​டுமே தவிர,​​ அமெ​ரிக்கா,​​ சீனாவை அடி​யொட்டி இந்​தி​யா​வும் நடப்​பது சரி​யா​ன​தாக இருக்க முடி​யாது.​ ​
இந்​தி​யா​வுக்​குக் குரல் கொடுக்க வேண்​டிய அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்,​​ இம​ய​ம​லை​யில் பனிப்​பா​றை​கள் வேக​மாக உரு​கு​வ​தற்​கும் பரு​வ​நிலை மாறு​பாட்​டுக்​கும் தொடர்​பில்லை என்று பேசி,​​ பனிப்​பாறை வளர்​வ​தும்,​​ உரு​கித் தேய்​வ​தும் சுழற்சி அடிப்​ப​டை​யில் நடப்​பவை என்று விளக்​க​மும் கூறி​யி​ருக்​கி​றார்.​ இயற்கை ஆர்​வ​லர்​க​ளின் கோபத்​துக்கு ஆளா​கி​யி​ருக்​கி​றார்.​ நம் அமைச்​சர் இப்​ப​டி​யெல்​லாம் பேசு​வ​தைப் பார்த்​தால் நாம்,​​ வளர்ந்த நாடு​க​ளால் ஏமாற்​றப்​பட்​டு​வி​டு​வோமோ என்ற அச்​சம் ஏற்​ப​டு​கி​றது.​ இந்​தியா இரண்டு விஷ​யங்​க​ளில் மிகத் தெளி​வாக இருக்க வேண்​டும்.​
 முத​லா​வ​ தாக,​​ இந்​தி​யா​வின் பசு​மை​இல்ல வாயு வெளி​யேற்​றத்​தைச் சரி​பார்த்​தல் என்​கிற பெய​ரில் அன்​னி​யர்​கள் புகுந்து மேலாண்மை செய்​வதை ஒரு போதும் ஒப்​புக்​கொள்​ளக்​கூ​டாது.​ அதிக உத​வித்​தொகை,​​ சலுகை என்ற பெய​ரில் ஆசை​வார்த்தை காட்​டி​னா​லும் அதற்கு இந்​தியா உடன்​ப​டக்​கூ​டாது.​ அமெ​ரிக்​கா​விலோ அல்​லது சீனா​விலோ நாம் போய் சரி​பார்க்​கும் பணியை மேற்​கொண்​டால் அனு​ம​திப்​பார்​களா என்​பதை யோசிக்க வேண்​டும்.​
இரண்​டா​வ​தாக,​​ வளி​மண்​ட​லம் மாசு​பட்​டதை கணக்​கி​டும்​போது,​​ அந்​தந்த நாட்​டின் மக்​கள் தொகை​யை​யும் கணக்​கில் கொள்ள வேண்​டும்.​ ஏற்​கெ​னவே சொர்க்​க​போ​கத்​தில் இருக்​கும் குறைந்​த​பட்ச அமெ​ரிக்​கர்​க​ளுக்​காக,​​ மக்​கள் தொகை அதி​கம் கொண்ட இந்​தி​யா​வில் 100 கோடி இந்​தி​ய​ரும் தங்​கள் செüக​ரி​யங்​க​ளைத் தியா​கம் செய்ய வேண்​டும் என்று வற்​பு​றுத்​து​வது நியா​ய​மற்​றது.​ இந்​தி​யா​வில் நதி​கள் மாசு​பட்​ட​தற்​கும்,​​ வளி மாசு​பட்​ட​தற்​கும் கார​ணம்,​​ அதி​கப் பணம் கிடைக்​கி​றது என்​ப​தால் வளர்ந்த நாடு​க​ளுக்கு ஏற்​று​மதி செய்​வ​தற்​காக மேற்​கொண்ட தொழில்​க​ளால் ஏற்​பட்​ட​வை​தான்.​ வளர்ந்த நாடு​க​ளுக்​குத் தேவை​யான,​​ ஆனால் ​ அந்​நாட்டு இயற்​கைக்​குப் பாத​க​மான தொழில்​கள் அனைத்​தை​யும் வள​ரும் நாடு​க​ளுக்​குத் தள்​ளி​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைப் பல​வந்​தப்​ப​டுத்​து​கின்​ற​னர்.​ இதைப் புரிந்​து​கொண்டு செயல்​பட வேண்​டும்.​
அமெ​ரிக்​கா​வி​டம் நல்ல பெயர் கிடைக்​கும் என்​ப​தற்​காக அவர்​கள் மனம்​நோ​காத படி நடப்​ப​தால் இந்​தி​யர்​க​ளுக்கு எந்​த​வித நன்​மை​யும் கிடைக்​காது.​ இன்​னும் ஒரு வாரம் இருக்​கி​றது.​ தெளி​வா​க​வும்,​​ முன்​யோ​ச​னை​யு​டன்,​​ எச்​ச​ரிக்​கை​யு​டன் செயல்​ப​டு​வது அவ​சி​யம்.


நன்றி: www.dinamani.com - 14 Dec 2009 


Thursday, December 10, 2009

சுற்றுச்சூழல் பாதிப்பு,​பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல்: 100 கோடி மக்கள் இடம்​பெயரும் அபாயம்

கோபன்​ஹே​கன்,​​ டிச.9:​  பரு​வ​நிலை மாறு​பாடு மற்​றும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் வரும் காலங்​க​ளில் மனித சமு​தா​யம் பெரும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தாக ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​ இத​னால் தென்​கி​ழக்கு ஆசியா,​​ மத்​திய அமெ​ரிக்கா,​​ மேற்கு ஆப்​பி​ரிக்​கா​வின் ஒரு பகுதி ஆகிய பகு​தி​க​ளில் வாழும் மக்​கள்​தான் கடும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தா​க​வும் புலம்​பெ​யர்ந்த மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்பு நடத்​திய ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​

பரு​வ​நிலை மாறு​பாடு,​​ சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் இந்த பகு​தி​க​ளில் இருந்து அடுத்த 40 ஆண்​டு​க​ளில் 100 கோடி மக்​கள் இடம்​பெ​யர்வு மற்​றும் புலம்​பெ​ய​ர​லாம்.​ கடந்த 20 ஆண்​டு​க​ளாக இயற்கை பேர​ழி​வு​கள் இரு​ம​டங்கு அதி​க​ரித்​துள்​ளன.​ சமீ​ப​கா​ல​மாக பூகம்​பம்,​​ வறட்சி,​​ வெள்​ளம் ஆகி​யவை மனித சமு​தா​யத்​துக்கே பெரும் சவா​லாக உரு​வெ​டுத்​துள்​ளன.​   மனி​தன் உயிர்​வாழ்​வ​தற்கு அவ​சி​ய​மான காற்று,​​ நீர்,​​ நிலம் ஆகிய சீர்​கே​டும் அதி​க​ரித்து வரு​கி​றது.​ அதே​போல,​​ இந்த நூற்​றாண்​டின் இறு​திக்​குள் புவி​யின் வெப்​ப​நி​லை​யும் 2 டிகிரி சென்​டி​கி​ரேட் முதல் 5 டிகிரி சென்​டி​கி​ரேட் வரை அதி​க​ரிக்க வாய்ப்​புள்​ளது.​

இது​போன்ற கார​ணங்​க​ளால் மனித சமு​தா​யம் அதிக இன்​னல்​களை சந்​திக்க வேண்​டி​யுள்​ளது.​ பசுமை இல்ல வாயுக்​க​ளால் ஏற்​ப​டும் பரு​வ​நிலை மாறு​பாட்​டால் கடல் மட்​டம் உயர்ந்து வரு​கி​றது.​ இது கட​லுக்கு மத்​தி​யில் அமைந்​துள்ள நாடு​க​ளுக்கு அச்​சு​றுத்​த​லாக உள்​ளது.​ கடல் மட்​டம் தொடர்ந்து உய​ரு​மா​னால் கட​லுக்கு மத்​தி​யில் உள்ள நாடு​கள் மூழ்​கிப்​போ​கும் அபா​ய​மும் உள்​ளது.​

இத​னால் இது​போன்ற நாடு​க​ளில் வசிக்​கும் மக்​கள் தற்​போதே எதிர்​கால அபா​யத்தை நினைத்து பிற நாடு​க​ளுக்கு புலம்​பெ​யர ஆரம்​பித்​து​விட்​ட​னர்.​ எங்​கெல்​லாம் சுற்​றுச்​சூ​ழல் அதி​க​ரித்​துள்​ளதோ அந்​நாட்​டைச் சேர்ந்த மக்​கள் அரு​கில் உள்ள நாடு​க​ளுக்கு புலம்​பெ​ய​ரத் தொடங்​கி​யுள்​ள​னர்.​

சில நாடு​க​ளில் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​மிக்க பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​கள் பாதிப்​பில்​லாத பகுதி நோக்கி இடம்​பெ​யர்​கின்​ற​னர்.​ இத​னால் ஓரி​டத்​தி​லேயே அதிக மக்​கள் குவி​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.​ இது மேலும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​புக்கு வழி ஏற்​ப​டுத்​து​கி​றது.​ அது​மட்​டு​மல்​லா​மல் ஓரி​டத்​தில் இருந்து மற்​றொரு இடத்​துக்கு மக்​கள் இடம்​பெ​ய​ரும் போது சில நேரங்​க​ளில் மக்​க​ளி​டையே மோத​லும் தவிர்க்க முடி​யா​த​தாகி விடு​கி​றது.​

  இது எதிர்​கா​லத்​தில் பெரிய பிரச்​னை​யாக உரு​வெ​டுக்க வாய்ப்​புள்​ள​தா​க​வும் புலம்​பெ​ய​ரும் மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்​பின் ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​


நன்றி: www.dinamani.com - 10 Dec 2009

Wednesday, December 9, 2009

கூவம் நதி​யா​கி​றது...

சென் ​னைப் பெரு​ந​க​ரின் அகண்ட சாக்​க​டை​க​ளாக உள்ள கூவம் ஆறு, அடை​யாறு,​ பக்​கிங்​காம் கால்​வாய் மூன்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்தி,​ சிங்​கா​ரச் சென்​னையை உரு​வாக்​கு​வ​தற்​காக சென்னை நதி​கள் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு,​ அதன் தலை​வர் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார் துணை முதல்​வர் மு.க. ஸ்டா​லின்.​ ​ 1967-ல் முதன்​மு​த​லா​கத் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்சி அமைத்​த​போதே,​ கூவத்​தில் பட​கு​வி​டும் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் அன்று பொதுப்​ப​ணித்​துறை அமைச்​ச​ராக இருந்த இன்​றைய முதல்​வர் மு. கரு​ணா​நிதி. அதற்​கா​கக் கட்​டப்​பட்ட பட​குத்​து​றை​க​ளின் சிதைந்த மிச்​சங்​களை இப்​போ​தும் சில இடங்​க​ளில் காண முடி​கி​றது. அப்​போது அவ​ரால் அத்​திட்​டத்தை செய்​து​மு​டிக்க முடி​ய​வில்லை. "மகன் தந்​தைக்​காற்​றும் உதவி' அவர் தொடங்​கிய பணியை நிறைவு செய்​வ​து​தான்.​ ​ இந்த ஆணை​யம் எத்​த​கைய பணி​களை முத​லில் செய்​யப்​போ​கி​றது;​ இதற்​கான மதிப்​பீடு என்ன,​ இச்​செ​ல​வுக்​கான நிதியை எங்​கி​ருந்து பெறப்​போ​கி​றார்​கள் என்ற விவ​ரங்​கள் விரை​வில் இது​பற்​றிய அறி​விப்​பு​க​ளாக வெளி​யா​கும். முத​லில் கூவத்​தைத்​தான் எடுத்​துக்​கொள்ள இருக்​கின்​ற​னர்.​ ​ கூவம் மிக​மிக மோச​மாக மாச​டைந்து,​ கழி​வு​கள் நக​ர​வும் முடி​யா​த​படி தேங்​கிக் கிடக்​கி​றது. கூவத்​தில் உள்ள தண்​ணீரை எடுத்து,​ தெளி​ய​வைத்து,​ வடி​கட்​டிய நீரில் மீன்​களை விட்​டால்,​ 4 மணி நேரத்​தில் மீன்​கள் செத்​து​வி​டு​கின்​றன என்​ப​து​தான் கூவம் குறித்து ஆய்​வு​மு​டி​வு​கள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்​ஸி​ஜன் இல்லை. வெறும் நச்சு உலோ​கக் கலப்​பும்,​ சேறும் சக​தி​யும்​தான் உள்​ளன. அடை​யா​றும் அந்​த​வி​த​மா​கவே படு​மோ​ச​மாக மாச​டைந்து கிடக்​கி​றது. மணப்​பாக்​கம் தடுப்​பணை வரை அடை​யாறு கொஞ்​சம் தூய்​மை​யாக இருந்​தா​லும்,​ சென்னை பெரு​ந​க​ரத்​தில் நுழைந்​த​வு​டன் அதன் மேனி​யில் வெறும் குப்​பை​க​ளும் நச்​சுக் கழி​வு​க​ளும்​தான் கொட்​டப்​ப​டு​கின்​றன. "அடை​யாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்​தது,​ இப்​போ​தும் இருக்​கி​றது ​ என்​பதே நம்ப முடி​யாத விஷ​ய​மாக ஆகி​விட்​டது.​ ​ அடை​யாறு,​ கூவம்,​ பக்​கிங்​காம் கால்​வாய் ஆகி​ய​வற்​றில் 1950 களில் இருந்த நிலை உரு​வா​க​வும்,​ பட​கு​கள் ஓட​வும்,​ நீர்​வாழ் உயி​ரி​னங்​கள் அவற்​றில் காணப்​ப​டும் சூழல் மீண்​டும் வர​வேண்​டும். இது முக்​கி​ய​மான பணி என்​ப​தி​லும்,​ இதை எப்​பாடு பட்​டா​கி​லும் செய்​தாக வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்​து​கள் இருக்க முடி​யாது. இருப்​பி​னும்,​ இத்​திட்​டம் வெற்றி பெற வேண்​டு​மா​னால்,​ இது தேர்​தல் கால அர​சி​யல் பிர​சா​ர​மாக மாறு​வ​தைத் தவிர்க்க வேண்​டும். இப்​ப​டிச் சொல்​லக் கார​ணம் இருக்​கி​றது. ​சென்​னை​யின் நதி​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணிக்கு குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தேவை. இதற்​குள் 3 சட்​டப்​பே​ரவை தேர்​தல்​க​ளை​யும் 2 உள்​ளாட்​சித் தேர்​தல்​க​ளை​யும் சென்னை சந்​திக்க நேர​லாம். இத்​திட்​டம் அர​சி​யல் கட்​சி​யின் சாத​னை​யாக முன்​வைக்​கப்​ப​டு​மா​னால்,​ இத்​திட்​டத்தை எதிர்க்​கட்​சி​கள் குறை​கூ​றும்,​ விமர்​சிக்​கும் என்​ப​தோடு,​ ஆட்சி மாற்​றம் ஏற்​ப​டு​மே​யா​னால்,​ இத்​திட்​டத்தை முற்​றி​லு​மா​கப் புறக்​க​ணிப்​பார்​கள்,​ கிடப்​பில் போடு​வார்​கள். இத​னால் மக்​க​ளுக்​கும் இழப்பு,​ சென்னை நக​ருக்​கும் இழப்பு.சிங்​கப்​பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்​தான். இந்த நதி கூவம் போல மிக​மிக மோச​மா​காத நிலை​யி​லேயே,​ 1977-ம் ஆண்​டில்,​ "சிங்​கப்​பூர் நதி மற்​றும் கலாங் கழி​மு​கத் தூய்​மைத் திட்​டம்' தொடங்​கப்​பட்டு 10 ஆண்டு கால அவ​கா​சத்​தில் முடிக்​கத் திட்​ட​மி​டப்​பட்டு,​ அதன்​படி சிறப்​பா​கச் செய்து முடிக்​கப்​பட்​ட​தன் முழு​மு​தற் கார​ணம்-​ அது அர​சி​யல் வெற்​றி​யாக ஆக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான். சிங்​கப்​பூர் நதி​யின் கரை​யி​லும் கழி​மு​கப் பகு​தி​யி​லும் குடி​யி​ருந்த 26,000 ஏழைக் குடும்​பங்​கள் பார​பட்​ச​மின்றி ஊருக்கு வெளியே குடி​ய​மர்த்​தப்​பட்​ட​னர். 2,800 குடி​சைத்​தொ​ழில் மற்​றும் சிறு​தொ​ழில்​கூ​டங்​க​ளும் ஊருக்கு வெளியே அனுப்​பப்​பட்​டன. நடை​பாதை வணி​கர்​கள்,​ தெரு​வோர உண​வ​கங்​கள் எல்​லா​மும் கழி​வு​நீர் போக்​கி​கள் கொண்ட தனி​யி​டங்​க​ளுக்கு மாற்​றப்​பட்​டன. பிளாஸ்​டிக் பொருள் போன்ற திடக்​க​ழி​வு​கள் சிங்​கப்​பூர் நதி​யில் கலக்​கா​த​படி சிறப்​புத் தடுப்பு அமைப்​பு​கள் கரை​யோ​ரங்​க​ளில் ஏற்​ப​டுத்​தப்​பட்​டன. இதற்​கான திட்​டச் செலவு 20 கோடி டாலர்​கள்.​ ​ கூவத்தை அதன் உற்​பத்தி இடத்தி​லி​ருந்து கழி​மு​கம் வரை சுமார் 65 கி.மீ. தொலை​வுக்​குத் தூய்​மைப்​ப​டுத்​த​வும்,​ அடை​யாறு ​(சுமார் 48 கி.மீ.), பக்​கிங்​காம் கால்​வாய் எல்​லா​வற்​றி​லும் உள்ள ஆக்​கி​ர​மிப்​பை​யும் குடி​சைப் பகு​தி​க​ளை​யும் நீக்க வேண்​டு​மா​னால் மிகக் குறைந்​த​பட்​சம் ஒரு லட்​சம் குடி​சை​களை அகற்றி,​ புற​ந​கர்ப் பகு​தி​யில் மாற்​றி​டம் தந்​தாக வேண்​டும். பல்​வேறு ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட வேண்​டும். தொழில்​நி​று​வ​னம் மற்​றும் மருத்​து​வ​ம​னைக் கழி​வு​கள் இதில் கலப்​ப​தைத் தடுக்க வேண்​டும். இத்​த​னை​யும் செய்ய வேண்​டு​மா​னால்,​ அர​சி​யல் சாய்வு இல்​லாத அர​சின் உறு​திப்​பாடு தேவை. வாக்கு வங்​கி​கள் பற்​றிய எந்த நினைப்​பும் இல்​லா​மல்,​ கட​மை​யைச் செய்​யும் உணர்வு மட்​டுமே இருந்​தால்​தான் இத்​திட்​டம் வெற்றி அடை​யும்.​ ​ மேலும்,​ தமி​ழ​கத்​தின் தலை​ந​க​ர​மா​கிய சென்னை பெரு​ந​க​ரின் நதி​க​ளுக்கு மட்​டும் ஆணை​யம் அமைத்​தி​ருப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஏன் தமி​ழக நதி​கள் ஆணை​யம் என ​ அமைக்​க​வில்லை என்​பது சற்று வருத்​தம் தரு​கி​றது. தமி​ழ​கத்​தின் நதி​கள் அனைத்​துமே ஏறக்​கு​றைய கூவம்,​ அடை​யாறு போல தூய்மை கெட்​டுப்​போய் கிடக்​கின்​றன. மணல்​கொள்​ளை​யா​லும் தொழில்​து​றைக் கழி​வு​க​ளா​லும் மேனி மெலிந்து,​ நோயுற்​றுக் கிடக்​கின்​றன. இவற்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்​து​வது தமி​ழக அர​சின் பணி​தானே?​​ ​ வாஷிங்​ட​னுக்கு ஒரு பொட்​டோ​மேக். லண்​ட​னுக்கு ஒரு தேம்ஸ். பாரீ​சுக்கு ​ ஒரு ரைன். சென்​னைக்கு ஒரு கூவம் என்​கிற நிலை ஏற்​பட வேண்​டும் என்​பது முதல்​வர் கரு​ணா​நி​தி​யு​டைய கனவு மட்​டு​மல்ல. ஒவ்​வொரு சென்​னை​வா​சி​யின் கன​வும்​கூட. நல்​ல​தொரு முயற்சி துணை முதல்​வர் தலை​மை​யில் செயல்​ப​டத் தயா​ரா​கி​றது. இந்த ஆக்​க​பூர்​வ​மான திட்​டம் அர​சி​ய​லாக்​கப்​ப​டக் கூடாது!

Thanks to : www.dinamani.com - 07 Dec 2009

Monday, November 30, 2009

மரணத்தின் 'ஓலகிரி' ஆகாமல் நீலகிரி மாற வழி



அதீத ஆபத்தையும், இழப்பையும் உண்டாக்கியுள்ள, உண்டாக்கி வரும் நிலச்சரிவுகள் எப்படி ஏற்படுகின்றன? என்ற கேள்விக்கு பல விதமான உணர்ச்சிகரமான விடைகள் மிகுந்த ஆத்திரத் துடன் நமக்குக் கிடைத்தாலும், விஞ்ஞானப் பூர்வமான, உணர்வுப் பூர்வமான விடை என்ன? என்பதையும் நாம் அவசியம் பார்க்க வேண்டும்.
பொதுவாக எந்த மலைப் பிரதேசத்திலும், மலைப் பகுதி யின் பரந்த மையப் பகுதிகளில் சரிவு நிகழ்வதே கிடையாது. அதே சமயம் மலையின் சரிவுப் பகுதிகளில் தான் இது அதிகம் நிகழ்கிறது. இதற் கான காரணங்கள் தான் என்னென்ன?முதலாவதாக மலைகளில் மட்டுமே இந்தச் சரிவுகள் நிகழ்வதிலிருந்து நமக்கு ஒரு உண்மை புலப்படும். அதாவது பாறைகளால் உருவாகியுள்ள மலைப் பகுதிகளின் மேல், குறிப்பிட்ட உயரத்தில், ஒரு அடி முதல் 20, 40 அடிகள் வரை என்று மண் மேவியுள்ளது. இது பல நூறு வருடங்களாக இறுகிப் படிந்துள்ளது.இந்நிலையில் மழைக் காலம் துவங்கி மழை விட்டு விட்டோ, தொடர்ந்தோ பெய் யும் போது மழை நீர் உட் புகுந்து, உட்புகுந்து மண் பகுதியை ஆக்கிரமிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு தான் மிக முக்கிய நிகழ்வு.இந்த மழைநீர் சிறிது ஆழம் சென்ற பிறகு தொடர் மழை இல்லை என்றால் மீண்டும் அந்த மண் பகுதி காய்ந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும்.பிறகு சிறிது காலம் கழித்து மழை என்றாலும் கவலை இல்லை.

அப்படி இல்லாமல் தொடர் மழை அதுவும் கனமழை அதுவும், வெயிலே காணாத நிலை என்றால் நிச்சயம் நிலச்சரிவுக்குக் கொண் டாட்டம் தான். எப்படி?15 முதல் 20 அடி உயரத்திலான மண்பகுதிக்குள் மழை நீர் அந்த இடத்தின் மூலமோ பக்கத்து இடங்களின் மூலமோ அடைந்து இந்த அளவு மண் முழுவதுமே ஈரமாக்கப்படும் போது முற்றிலும் இதன் அடிப்பகுதியில் தாங்கும் பாறையின் தொடர்பை இழந்து விடுகிறது. உடனடியாக மரம், செடி, வீடுகளுடன் சரிவை அடைகிறது. இது தவிர்க்க இயலாத ஒன்று.காரணம் மரம், செடி, வளர்க்கும் போதோ, வீடுகள் கட்டும் போதோ அந்த இடத்தின் மண் ஆதிக்க உயரம் என்ன என்பதை யாரும் அறிய முற்படுவதே இல்லை.அவசரம், மேலும் அறியாமை, குருட்டு நம்பிக்கை இதற்கான காரணங்கள். ஆக மழை தொடர்ந்து தாக்கும் போது ஈரமான முழுப் பகுதியும் பாறைகளுடனான தொடர்பை இழந்துவிடுகிறது. சரிகிறது.


நிலைமை இப்படி இருக்க, தற்போதைய சரிவுகளின் தீவிரத்திற்கான மற்ற காரணங் களோ மிக மிக பயமூட்டுவதும், சிந்திக்க வைப்பதுமானது. அது என்ன?அதுதான் 2004க்குப் பிறகான, அதாவது சுனாமி தாக்குதலுக்குப் பிறகான புவிநிலை. அப்போது கடலுக்கடியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப் பும் அதனால் வெளியான 1400 கி.மீ., நீள 200 கி.மீ., அகல 5000 அடி உயர தீவு வடிவான லாவா, கேம்மா, வெளிப்பட் டால் உருவான கடலடித் தீவின் போது தென் ஆசியப் பகுதி முழுவதும் ஏற்பட்ட நிலத்தடி அதிர்வு மறுக்க முடியாத மாபெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது என்பது உண்மையே.கடந்த பல மாதங்கள் முன், கூட இதே நீலகிரி பகுதியில் வெப்ப வாயும், புகையும், சத்தமும் கூடிய வெடிப்பு ஏற்பட்டு பலமுறை கிலி உண்டாக்கியது நினைவுக்கு வரலாம்.


இதே போல் பல இடங்களிலும் கூட, இன்றைய தேதி வரையிலும் கூடத் தொடரும் நிலநடுக்கம் என்ற செயலால் பூமியின் மேற்பரப்பு முழுவதுமே நடுக்கத்துக்கும் சிறு சிறு அசைவுக்கும் ஆட்பட்டே வருகிறது என்பதே உண்மை. இவ்வகை நடுக்கம் என்பது பாறை மீது படிந்திருக்கும் மண்பகுதியை தளர்த்தவும், மழை நீர் உட்புக எளிமைப் படுத்தவும் உதவுகிறது என்பதும் பேருண்மை.


ஆக இவற்றுடன் மலைப் பகுதிகளில் முக்கியமாக பாறைகளுக்கு வெடி வைத் தல், மழை நேரங்களில் அதிக பாரத்துடனான வாகன ஓட்டம், கட்டுமானப் பொருட் களுடனான சவாரி என்பவையும் சரிவுக்கு சலாம் போடுகின்றன.அதிர்வால் ஏற்பட்ட பாறைச் சரிவை நீக்க மீண்டும் வெடிகளையே வெடிக்கின்றனர் என்பது வேடிக்கை தான்.இந்நிலையில் மழைச் சரிவுகளில் மரங்கள் வளர்ப்பது என்பது நல்லது என்ற கூற்றை விட உயரம் குறைந்த பயிர் களை வளர்ப்பதே சாலச்சிறந் தது.ஏனென்றால் மழைக்காலங் களில் மிகவும் ஆபத்தைச் சந்திக்கப் போகும் சரிவுப் பகுதிகளில் மழை நீருடன் கனமான மரங்களும் சேரும்போது மண்பகுதி அடியோடு, மிகுந்த, பாதிப்போடு, வேகத் தோடு சரியும் என்பதுடன் இதன் விழும் தொலைவும் கூடும் என்பதே நிஜம். அங்கும் புதியசரிவை கனமான பெரிய மரங்கள் உண்டாக்கும்.


தீர்வுகள் தான் என்ன?மலைப்பகுதிகளின் சரிவுப் பகுதிகளில் மழைநீர் நிற்கும் நேரத்தையும் மிகவும் குறைப்பது. அதற்கான சரியான வடிகால் பகுதிகளை அமைப்பது. இதன் மூலம் குறுகிய அளவிலான ஆழத்தை நீர் அடையும் போதே, நிலம் காக்கப்படும்.குறிப்பாக மழைப்பாதைகளின் மேற்புறங்களில் கசிவுநீர் செங்குத்தாக விழாமல் பக்கவாட்டுப்பகுதிகளில் கடத்தி விழ வைப்பது.எந்த வகையிலும் மழைநீரை அதிகம் உட்புறம் எடுத்துச் செல்லும் படியான வகையிலும், ஈரத்தை நிறுத்தி வைக்கும் வகையிலும் இல்லாமல் இருக்க மரம், தாவரம் சாலைச் சரிவுகளில் வளர்ப்பதை தடுப்பது. பாறை மீது மண் இல்லாத நிலை ஏற்படும் வரை சரிவும் நீடிக்கும். அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. கட்டுப்பாடு தேவை ரயில் பாதையை தடை செய்து விஞ்ச் அமைப்பது. தனித்த பாறைகளை அகற்றுவது. சாலைகளை அதிக கனத்துடன் அமைக்காதிருப்பது. மினி பஸ் விடுவது.


மழை சீசன்களில் வாகனத்தைக் குறைப்பது. இடிதாங்கிகளை அமைப்பது, 50 சதுர கி.மீ., கட்டடப்பகுதி என்றால் பெரும்பாலான பகுதி கட்டட அடியில் ஈரத்தை தொடர்ந்து காத்து வருவது ஆபத்தை உண்டாக்கிறது. இதன் மூலம் அதிக வெயிலில் மண் இறுகி மீண்டும் கூடுதல் பலம் பெறும் வாய்ப்பு தடையாகிறது. அடைமழையின் போது மண்ணின் தளர்வு நிலை தடுக்கப்பட வேண்டும். எனவே கட்டுமானத்துக்குத் தடை அவசியம். மலைப்பகுதிகளில் வெடி வெடிப்பதை தடுப்பதன் மூலம் காய்ந்த மண் பகுதியின் இறுக்கம் பாதுகாக்கப்படும். இல்லையேல் தளர்ந்து விடும்.இப்பகுதிகளில் கட்டடம் கட்டும் முன்பாக கட்டடத் திற்கான மொத்தப்பரப்பின் அடித்தளத்திற்காக மண் ஆழத்தையுமே பார்ப்பது என்பது இயலாத காரியம் எனவே சாய்வுப் பகுதிகளை கட்டடம் கட்டும் பகுதியாக அனுமதிக்காமல் இருப்பது.


டன் பாறையை உடைத்தும், அடித்தளமிடல் வேண்டும். தொடர்ந்து வந்த பாதிப்புகளால் சுற்றுலா பயணிகளின் வரவு மிக குறையும் போது பேராசையால் முதலீடு செய்த பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து நட்டமும், ஈ ஓட்டும் நிலையும் தான் ஏற்படும்.முதலீடு விரையமாகும். பெரிய கட்டடங்களின் முதலீட்டுக்கும், பாதுகாப்புக்கும் உறுதியே கூற முடியாது.உறுதியான கட்டடங்களுக்கும், மரங்களுக்கும், மேலிருந்து சரியும் கட்டடம் மற்றும் மரங்கள் இழப்பை ஏற்படுத்துகின்றன.ஓட்டல் பிற தங்குமிட கழிவு நீர் வடிகாலை கசியாத குழாய் மூலம் தூரத்தில் வெளியேற்றுவது அவசியம்.இனி, சிந்தித்து செயல்படுவதின் மூலமே நீலகிரி, "மரணத்தின் ஓலகிரி' ஆகாமல் தடுக்கப்படும்.
- எ.ஆர்.நாகராஜன்,
வானியல், புவியியல்
ஆய்வாளர்.

நன்றி : http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5788 - 30.11.2009


Tuesday, November 24, 2009

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தபால் துறையின் இருப்பிடச் சான்று போதும்

சென்னை, நவ. 23:  ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக, உணவுத் துறை புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி, முகவரிச் சான்றுக்கு அடையாளமாக தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்றைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இருப்பிடச் சான்று வழங்கும் திட்டத்தை தபால் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
  விண்ணப்பத்துடன் ரூ. 250 கட்டணம் செலுத்தினால், தீவிர விசாரணை மற்றும் நேரடி களஆய்வுக்குப் பிறகு நாம் வசிக்கும் முகவரிக்கான சான்று அட்டை வழங்கப்படும்.
  ரேஷன் கார்டுக்கு...  ரேஷன் கார்டு பெறுவதற்கு இந்த இருப்பிடச் சான்றை ஆதாரமாகக் காட்டலாமா? என்ற கருத்து உணவுத் துறையில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
  இந்த நிலையில், தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அட்டையை, ரேஷன் கார்டு பெறுவதற்கான முகவரி ஆதார ஆவணங்களில் ஒன்றாகப் பயன்படுத்தலாம் என உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
  தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அட்டைக்கு விண்ணப்பிக்க நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்றால் போதுமானது.
  வேறு என்னென்ன...  இருப்பிடச் சான்றுக்கு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை, சொந்த வீடாக இருப்பின் அதன் சொத்து வரி ரசீது, மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, தொலைபேசி கட்டணம் செலுத்திய ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்கம், குடிசை மாற்று வாரியம் என்றால் அதன் ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களில் இப்போது தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அடையாள அட்டையும் இணைந்துள்ளது.
  இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ""இருப்பிடச் சான்று இருந்தாலும், பழைய கார்டில் பெயர் நீக்கத்துக்கான சான்று அவசியமாகும். அது இல்லாமல் இருப்பிடச் சான்றை மட்டும் காட்டினால் ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பம் நீக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.


நன்றி : www.dinamani.com - 24 Nov 2009


முதல்​மு​றை​யாக இரவு நேரத்​தில் அக்னி-​2 சோதனை

பல​சூர்,​ நவ. 23: அணு ஆயு​தங்​களை ஏந்​திச் செல்​லும் திற​னு​டன் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்ள அக்னி-​2 ஏவு​க​ணைச் சோதனை முதல் முறை​யாக இரவு நேரத்​தில் திங்​கள்​கி​ழமை நடத்​தப்​பட்​டது.

   ஒ​ரி​சா​வில் பல​சூ​ரில் உள்ள ஏவு​க​ணைத் தளத்​தில் இருந்து திங்​கள்​கி​ழமை இரவு 7.50 மணிக்கு இந்த சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.
   இது குறித்து மத்​திய பாது​காப்பு மற்​றும் மேம்​பாட்டு கழக ​(டிஆர்​டிஓ)​ வட்​டா​ரங்​கள் கூறி​ய​தா​வது:​
    20 மீ. நீள​மும்,​ 17 டன் எடை​யும் கொண்ட இந்த ஏவு​கணை 2 ஆயி​ரம் கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் வகை​யில் உள்​நாட்​டி​லேயே வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு டன் எடை​யுள்ள வெடி​பொ​ருள்​க​ளைத் தாங்​கிச் செல்​லும் திறன் உடை​யது.
    இந்த ஏவு​கணை ஏற்​கெ​னவே ராணு​வத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. அக்னி-​2 ஏவு​க​ணையை முழு​மை​யாக செயல்​ப​டுத்​து​வ​தற்​கான வழி​மு​றை​யில் இந்த சோதனை முக்​கி​ய​மான நிகழ்​வா​கும்.
   சோ​தனை வெற்​றி​க​ர​மாக நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது. இதன் செயல்​பா​டு​கள் குறித்த மற்ற விவ​ரங்​கள் ஆரா​யப்​பட்டு வரு​கின்​றன என டிஆர்​டிஓ வட்​டா​ரங்​கள் தெரி​வித்​தன.
   இ​தற்கு முன்​ன​தாக,​ 700 கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் அக்னி-​1 ஏவு​க​ணை​யும்,​ 3,500 கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் அக்னி-​3 ஏவு​க​ணை​யும் சோதனை செய்​யப்​பட்​டுள்​ளன.


நன்றி : http://dinamani.com - 24.11.2009

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.
  இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.
  தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.
  அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.
  2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.
  இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.
  வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.
  நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
  நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.
  தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
  ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.
  திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.
  மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.
  திறந்தவெளிக்  கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.
  நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.
  கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.
  தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
  இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.
  இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.
  மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.
  நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.

(கட்டுரையாளர்: மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).   
நன்றி : http://dinamani.com - 24 Nov 2009

ஒளியும் இருளும்!

வரப்போகும் ஆண்டுகளில், இந்தியா முழுவதுமே கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் கொதித்தெழும் சம்பவங்கள் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மின் தட்டுப்பாடு என்பது தனிநபரைப் பாதிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தொழிற்சாலைகளையும், விவசாயத்தையும் அல்லவா மிகவும் கடுமையாகப் பாதிக்கப் போகிறது. அதன் தொடர் விளைவாகப் பொருளாதாரம் சீர்குலைந்து, இந்தியாவின் வளர்ச்சி என்பதே தடைபடப் போகிறதே, அதைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தால் எப்படி?

 இன்றைய நிலையில், இந்தியாவின் அதிகபட்ச மின் உற்பத்தித் திறன் ஏறத்தாழ 1,50,000 மெகாவாட். அடுத்த மூன்றே ஆண்டுகளில் நமது தேவை 2,00,000 மெகாவாட்டாக இருக்கும் என்றும், 2020-ல் நமது தேவை 4,00,000 மெகாவாட்டுக்குக் குறையாமல் தேவைப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. நமது அதிகபட்ச உற்பத்தித் திறன் 1,50,000 மெகாவாட் என்றால், அதில் 70 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் தான் உண்மையான உற்பத்தித்திறன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  அரசின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி மற்றும் விநியோகம், அரசு இயந்திரத்தின் மெத்தனத்தையும் சுவீகாரம் செய்து கொண்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நமது மின்வாரியங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் ஒன்றுக்கும் உதவாத பழைய தொழில்நுட்பங்களை இன்னும் கட்டிக்கொண்டு அழுவது. இயந்திரங்களும் பழையன. பராமரிப்போ மிகமிக மோசம். மின் உற்பத்திக்கு ஆகும் செலவில் பாதி, அடிக்கடி நிகழும் மின் தடங்கல்களைச் சரி செய்வதற்குத் தேவைப்படுகிறது. போதாக்குறைக்கு, மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்போ, உலகத் தரத்துடன் ஒப்பிடும்போது மிக மிக அதிகம்.
  நமது மின்வாரியங்கள்தான் திறமையாகச் செயல்படுவதில்லை, ஊழியர்கள் முழுக் கவனத்துடன் பணியாற்றுவதில்லை என்று தனியாருக்கு விநியோகத்தையும், கட்டண வசூலையும் தில்லி போன்ற இடங்களில் கொடுத்துப் பார்த்தபோது, அவர்களும் திறமையாகச் செயல்படுவதாகத் தெரியவில்லை. தனியார்வசம் ஒட்டுமொத்த மின்துறையையும் தாரை வார்த்து விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என்று நினைத்தால், அது பகல்கனவு! 2003-ல் கொண்டு வரப்பட்ட மத்திய மின் சட்டம் பிரச்னையை எந்தவிதத்திலும் சமாளிக்க உதவவில்லை என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே!
  இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே, நமது மின் தேவையைப் பற்றிய கவலை எழுந்தது. அப்போது, டி.டி. கோசாம்பி மற்றும் ஹோமி பாபா என்று இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட, பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவால் அடையாளம் காணப்பட்டு, இதைப் பற்றிய திட்டமிடவும் ஈடுபடுத்தப்பட்டனர்.
 பூமத்திய ரேகையை ஒட்டிய, சூரிய ஒளியை மிக அதிகமாகப் பெறும் தட்பவெப்ப நிலையைக் கொண்ட இந்தியா, தனக்கு இயற்கையாக அமைந்திருக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்பது விஞ்ஞானி டி.டி. கோசாம்பியின் வாதமாக இருந்தது. ஆனால், மிக அதிகமான முதலீடுடைய அணுசக்தியைப் பயன்படுத்துவதுதான், நாளைய அதிகரித்த தேவைக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் உகந்தது என்பது ஹோமி பாபாவின் கருத்து. ஹோமி பாபாவின் கருத்துக்குத் தந்த அதே முக்கியத்துவம் டி.டி. கோசாம்பியின் ஆலோசனைக்கும் தரப்பட்டு, இரண்டு முறைகளையும் நாம் முழுமையாகப் பயன்படுத்தி இருந்தால், இன்றைக்கு நாம் மின்தேவைக்காகப் பயப்பட்டிருக்கத் தேவையில்லை.
 இன்னொரு வேடிக்கை தெரியுமா? நமது மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி அமைச்சகம், 2002 முதல் 2007 வரை நிதிநிலை அறிக்கைகளில் ஆராய்ச்சிக்காகவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும் அளிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் ஆண்டுதோறும் 44 சதவிகிதம் முதல் 76 சதவிகிதத்தைப் பயன்படுத்தாமலே திருப்பி அளித்திருக்கிறது என்கிறது தணிக்கை அதிகாரியின் அறிக்கை. இப்போது, விழித்துக் கொண்டு முழு மூச்சில் சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தியைப் பெருக்கவும், காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி இருக்கிறது, மகிழ்ச்சி!
 இன்னொரு விஷயம். உற்பத்திப் பெருக்கம் எவ்வளவு அவசியமோ, அதே அளவு சிக்கனமும் தேவைதானே. சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் நகரங்களில் உள்ள வியாபார நிறுவனங்கள், விடுதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள், ஷாப்பிங் மால் என்கிற பெயரில் வர்த்தக நிறுவனங்கள் இவையெல்லாம் வீணடிக்கும் மின்சாரம் கொஞ்சநஞ்சமா? இவர்களிடம் அதிக மின் கட்டணம் வசூலித்தால், அதையும் விற்பனை விலையுடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுவார்கள்.
 வியாபாரத்துக்காக, கொள்ளை லாபத்துக்காக  மின்சாரம் ஒருபுறம் வீணாகிறது. ஆனால், வீட்டு உபயோகத்துக்கும், தொழிற்சாலைகளுக்கும், விவசாயத்துக்கும் தினந்தோறும் மின்வெட்டு அரங்கேறுகிறது. கட்டுப்பாடே இல்லாத சந்தைப் பொருளாதாரத்தின் பின்விளைவுகள் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையே அல்லவா சீர்குலைத்து விடும்.
 மின் உற்பத்தியை அதிகரிக்க முடிகிறதோ இல்லையோ, வண்ண வண்ண விளக்குகள், விளம்பரப் பலகைகள், வாடிக்கையாளர்களைக் கவரப் பயன்படுத்தப்படும் அளவுக்கு அதிகமான மின் விரயங்கள் இவையெல்லாம் தவிர்க்கப்பட்டே தீர வேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்து விடும் என்பது நினைவிலிருக்கட்டும்!


Thanks to : www.dinamani.com -  24 Nov 2009 

Monday, November 16, 2009

அபாயத்தின் அறிகுறி!

வளிமண்டலம் மாசடைந்து புவிவெப்பம் அதிகரிப்பது உலகில் வாழும் எல்லா உயிரினங்களையும் பாதிக்கிறது என்பது தெரிந்த விஷயம். நிலத்தில் வாழும் உயிரினங்களைவிட மிகஅதிகமாகப் பாதிக்கப்பட இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான் என்பது பெரிய அளவில் ஏன் நம்மைக் கவலைப்பட வைக்கவில்லை என்பது தெரியவில்லை.


அண்மையில் மீன் மற்றும் மீனளம் (ஃபிஷ் அண்ட் ஃபிஷரீஸ்) என்கிற மேலைநாட்டுப் பத்திரிகை ஒன்றில் படித்த விஷயம், நம்மைத் திடுக்கிட வைக்கிறது. புவிவெப்பமாதல் காரணமாக பல்லுயிர்பெருக்கத்துக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றியும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்வாழ் மீன் இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படவுள்ளன என்பது பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறது அந்தப் பத்திரிகை.

கடல் நீரின் தட்பவெப்பத்தைப் பொறுத்துத்தான் பலவகை மீன் இனங்கள் அந்தந்தப் பகுதியில் காணப்படுகின்றன. தட்பவெப்பம் மாறும்போது, இந்த மீன் இனங்கள் அங்கே வாழ முடியாமல், சாதகமான தட்பவெப்பம் நிலவும் பகுதியை நோக்கி நகர வேண்டும்; இல்லாவிட்டால் அழிந்துவிடும் அபாயம்தான் ஏற்படும்.

குறிப்பாக, பூமத்திய ரேகையையொட்டிய, வெப்பம் அதிகமுள்ள கடல் பகுதியில் காணப்படும் மீன் இனங்கள், புவி வெப்பமாவதைத் தொடர்ந்து குளிர்ப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தாக வேண்டும். அப்போதுதான் தங்களது உடல்வெப்பத்தை தகவமைத்து வாழ முடியும். ஆனால், துருவப் பகுதிகளில் உள்ள குளிரைத் தாங்கி இந்த மீன் இனங்களால் வாழ முடியுமா என்பதும் சந்தேகம்தான்.

துருவப் பகுதிகளில் மீன் இனங்களின் எண்ணிக்கை குறைவு. அப்பகுதிகளில் வாழும் உயிரினங்கள், புவி வெப்பமாதலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் மீன்களின் எண்ணிக்கையே குறைவுதான் என்பதால் பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்பதும் ஆறுதல்.

வெப்ப மண்டலங்களிலும், துருவப் பகுதிகளுக்குக் கீழேயுள்ள பிரதேசங்களிலும் ஏற்பட இருக்கும் புவிவெப்ப மாற்றங்கள், ஏறத்தாழ 60 விழுக்காடு மீன் இனங்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் என்பதுதான் அச்சப்பட வைக்கும் விஷயம். இந்த மாற்றம், கடல் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். கடலின் ஆழத்தில் அல்லது மேற்புறத்தில் வாழும் மீன்கள் எவையாக இருந்தாலும் பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உடனடி பாதிப்பு கடலின் மேற்பகுதியில் வாழும் மீன் இனங்களுக்குத்தான். குறைந்தது 600 கி.மீ. தூரத்துக்காவது இடம் பெயர்ந்தால் மட்டுமே வெப்பப் பகுதியில் வாழும் 90% மீன்இனங்கள் உயிர்வாழ முடியும் என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வுக்கட்டுரை.

இந்தப் பிரச்னை சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களையும் அச்சுறுத்தக் காரணம், மீன் இனங்களுக்கு ஏற்படும் பாதிப்பால் உலகில் உணவுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதுதான்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். மீன்கள் கிடைக்காதென்றால் பல மீனவர் குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நேரும்.

வளர்ந்த நாடுகளில் சுமார் 28 கோடிப் பேர் தங்களது தினசரி உணவில் மீனைச் சேர்த்துக்கொள்கிறார்கள். மீனுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமானால், அதன் நேரடி விளைவாக மாமிசத் தேவை அதிகரிக்கும். உலகம் புதிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பயமுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், புவிவெப்பமாதலால் மீன் வளமும் குறையுமேயானால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். மேலும், மீன் பிடிப்பு குறையக் குறைய இந்தியா தொடங்கி பல்வேறு நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பாதிப்பும், மீனவர்களுக்குத் தொழில்நசிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இப்பொழுதே கடலில் முன்பு போல மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறை நிறையவே இருக்கிறது. இந்நிலையில், புவி வெப்பமடைதலும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பும் கடல்மீன்களுக்கும் அதன் இனப்பெருக்கத்துக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறுமெனில், விளைவுகள் படுமோசமாக மாறிவிடும்.

இதன் உடனடித் தாக்கம் உணவுப் பஞ்சம். தொடர் விளைவு, மீன்களின் இனப்பெருக்கத்துக்கு நிரந்தரப் பாதிப்பு. உலக நாடுகள் ஒன்றுகூடி உடனடியாகத் தீவிர ஆலோசனைகளை நடத்தியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


Thanks to : www.dinamani.com - 16 Nov 2009

கரையும் மலைகள்

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தாலும், 40-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும்!


அதிக அளவு மழை பெய்திருப்பதை நிலச்சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறினாலும், இதை இயற்கையின் பேரிடர் என்பதைக் காட்டிலும், மானுடத்தின் பிழை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

1994-ல் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில், மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவின் போதே, இதற்கான காரணங்களையும், இனிவரும் காலங்களில் எத்தகைய அணுகுமுறை மூலம் இதைத் தவிர்க்க முடியும் என்பது குறித்தும், பல்வேறு அமைப்புகள் கருத்துத் தெரிவித்த பிறகும், அது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வேறு என்னதான் சொல்ல முடியும்?

நீலகிரியில் நிலச்சரிவு என்பதே 1970-க்குப் பிறகுதான் சிறிய அளவில் ஏற்படத் தொடங்கியது.

நீலகிரியில் உள்ள குன்றுகள் அனைத்துமே முழுக்கமுழுக்கப் பாறைகளால் அமைந்தவை அல்ல. பெரும்பாலான குன்றுகள் கால்பங்கு பாறை, முக்கால் பங்கு மண்ணாக இருப்பவை. சில இடங்களில் பாறைகள் பாதி, மண் பாதி கலந்து நிற்கிறது. அந்தந்தக் குன்றுகளில் உள்ள பாறை, மண் விகிதம் மற்றும் கடல்மட்டத்தின் உயரத்துக்கு ஏற்ப தனக்கான தாவரங்களையும் மரங்களையும் நீலகிரி மலை தனக்குத்தானே வளர்த்து செழித்திருந்தது - திப்பு சுல்தானிடமிருந்து பிரிட்டிஷ் அரசின் கைக்கு மாறும்வரை.

பிரிட்டிஷ் அரசின் அன்றைய கோயமுத்தூர் கவர்னர் ஜான் சலைவன் இந்த மலைக்கு முதலில் சென்ற பிரிட்டிஷ் அதிகாரி. மலையின் அழகும், அதன் குளுமையும் பிடித்துப்போனதால், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான கோடை வாசஸ்தலமாக மாற்றினார். சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் அதிகாரிகள் வருவதற்காகவே மலை ரயில் பாதை (இரு தண்டவாளங்களுக்கு இடையே பல்சக்கரங்களுடன் ஒரு தண்டவாளம் இருக்கும் வகையில்) அமைக்கப்பட்டது. கவர்னர் சலைவனின் இந்த ஊடுருவலை மலைவாழ் மக்களான படுகர், தோடா இனத்தவர் எதிர்த்தனர். அந்தப் பழங்குடி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதான் தனது விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடிந்தது.

கோடை வாசஸ்தலம் என்பதோடு, இங்கே தேயிலை பயிரிட முடியும் என்பதையும் கண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக காடுகளை அழித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த மலையின் பாறை - மண் கலப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் கிடைத்த இடங்களையெல்லாம் தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காகக் காட்டை அழித்தனர்.

1970-களில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்ததால் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. எத்தகைய மழையிலும் வேர்களால் மண்ணைப் பிடித்துக் காத்துநின்ற மரங்களும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டபிறகு, மழையில் வெறும் மண் கரைந்தது. நீர் ஊறி, ஓதம் தாளாமல் மண்முகடுகள் சரிந்து, மனிதர்கள் இறப்பது வாடிக்கையானது. நீலகிரியின் பல்லுயிர்ப்பெருக்கம் (பயோ டைவர்சிட்டி) முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.

தேயிலைத் தோட்டங்களுக்காக மலை அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, சுற்றுலாத் தலமாக மாறியதால் பயணிகள் எண்ணிக்கை பலநூறு மடங்கு அதிகரித்தது. இவர்களுக்காக காடுகள் மறைந்து, கட்டடங்கள் முளைத்தன. உதகை, குன்னூர் இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 500 விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன. சரியான கழிவுநீர் வாய்க்கால்கூட உதகை, குன்னூரில் இல்லை என்பது சிக்கலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.

1994 மரப்பாலம் நிலச்சரிவின் போதே, தொலையுணர் தொழில்நுட்பத்தின் மூலம் மலையின் தன்மையையும், காட்டின் அளவையும் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தொலையுணர் தொழில்நுட்பத்தில் பலபடிகள் முன்னேறியுள்ள நமக்கு, நீலகிரி மலைகளின் வகைகளையும், எத்தகைய காடுகள் அங்கே இருந்தால் நிலச்சரிவு ஏற்படாது என்பதையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

ஆக்கிரமிப்பாலும், காடு அழிப்பாலும் முற்றிலும் மாறிக்கிடக்கும் "ஒத்தக் கல் மண்டூ' என்கிற உதகமண்டலம், குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைகளில் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகள் வழியாக மழை நீர் கீழே இறங்குகிறது என்பதைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் நீர் வெளியேற வாய்க்காலும், மண்கரையாமல் இருக்கக் காடுகளும் வளர்க்க முயல வேண்டும்.

பாறையின்றி மண்மேடுகள் மட்டும் இருக்கும் பகுதிகளில் வீடுகள் கட்டத் தடை விதிப்பதும், போக்குவரத்து வசதி என்ற பெயரில் நீலகிரியில் புதிய சாலைகள் அமைப்பதைக் கைவிடுவதும்கூடப் பயன்தரும்.

நீலகிரி மலையில் சமவெளியாகப் பரந்து கிடக்கும் புல்வெளிகூட, தன் வேர்களால் அந்த மண்மலையைத் பிடித்துக் காத்து நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான், மலையரசி "கரையாமல்' நிற்பாள்; மனிதரையும் அழ வைக்க மாட்டாள்.

Thanks to : www.dinamani.com - 13 Nov 2009

சிக்கலில் "சிங்காரா' காடுகள்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் முக்கியப் பகுதியான சிங்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிப்புறப் பகுதியாகவும் இந்தப் பகுதி அமைந்துள்ளது.
  கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் வனப்பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான யானைகள் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகச் செல்லும் வழித்தடத்தில் முக்கியப் பகுதியாக சிங்காரா அமைந்துள்ளது.
  676 அரிய வகைத் தாவரங்கள், பூச்சிகள் முதல் யானைகள் வரையிலான 173 அரிய வகை உயிரினங்கள் தங்களது வாழ்வாதாரமாக சிங்காரா வனப்பகுதியை நம்பியுள்ளன.
  உயிரியல் மற்றும் சூழலியல் அடிப்படையில் மிகமுக்கியமான பகுதியாகக் கருதப்படும் சிங்காரா பகுதியில், அணுத்துகள்கள் குறித்த உயர் ஆய்வுகளை மேற்கொள்ள "நியூட்ரினோ' ஆய்வுக்கூடத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து அணுசக்தி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 20 நிறுவனங்கள் சார்பாக அணுசக்தித் துறை மூலம் இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  சிங்காரா வனப்பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் ரூ. 917 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள, இந்தத் திட்டத்துக்காக அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு 35 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்படும். இதன் வழியாக சிங்காராவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடப் பணிகளுக்காகப் பல ஆயிரம் டன் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்.
  மேலும், இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் அதற்கு நாளொன்றுக்கு 3.42 லட்சம் லிட்டர் தண்ணீரும், 3 மெகாவாட் மின்சாரமும் தேவைப்படும் என திட்டத்தை உருவாக்கியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
  இவை எல்லாம் நிகழ்ந்தால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் பேராபத்தைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
  நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
  நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டத்தை எவ்விதச் சிக்கலும் இன்றி நிறைவேற்ற ஒத்துழைப்புக் கோரி தமிழக முதல்வரை அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்தார். ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு வலுவாக உள்ள நிலையில் தமிழக அரசு இதில் எந்த முடிவையும் எடுக்க இயலாது என முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாயின.
  வனப்பகுதி நிலங்களை இந்தத் திட்டத்துக்காக அளிக்க வேண்டும் என அணுசக்தித் துறையின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி கடந்த செப்டம்பரில் தெரிவித்தார்.
  ஆனால், "நியூட்ரினோ' ஆய்வுக்கூடம் அமைக்க சிங்காராவே சிறந்த இடம் என மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் கருத்தை மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது.
  இது தமிழக அரசு மட்டுமல்லாது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  இதேபோல, கால் நூற்றாண்டுக்கு முன்னால், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் குந்திப்புழா பகுதியில் நீர்மின் திட்டத்துக்காக அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் அணை கட்டுவது உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியது. பறவைகள் ஆய்வாளர் சலிம் அலி, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் உள்ளிட்ட வல்லுநர்கள் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியை ஆய்வு செய்து, இந்தப் பகுதியில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், இதனை தேசியப் பூங்காவாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அறிக்கை அளித்தனர்.
  இதன் பின்னர் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசு கேரள மாநில அரசை வற்புறுத்தியது. இதையடுத்து, அணை கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
  கால் நூற்றாண்டுக்கு முன்னால், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டத்தை தடுத்த மத்திய அரசு, இன்று தமிழக அரசின் கருத்தையும், மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பது ஏன்?
  1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அமைதிப் பள்ளத்தாக்கின் சூழலியலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறை இன்று சிங்காராவை பாதுகாப்பதில் காணாமல் போனது எப்படி?
  இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அணுசக்தித்துறை வளர்ச்சி தேவைதான் என்றாலும், அதற்காக அடிப்படை வாழ்வாதாரமான சுற்றுச்சூழலை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்பதே உண்மை.
  ஆட்சியாளர்களால் அழிக்கப்பட இருந்த அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போதாவது ஆட்சியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து திருந்துவார்களா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.



Thanks to : www.dinamani.com - 14 Nov 2009

Friday, November 6, 2009

பயன்படாத பயிர்க் காப்பீடு

பி.எஸ்.எம்.ராவ்
நாட்டின் 100 சதவீத உணவுத் தேவையைப் பூர்த்தி  செய்வதுடன், கிட்டத்தட்ட 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இத்தகைய பெருமைமிகு விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால், விவசாயத்தைக் காக்கும் திட்டங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாகவோ போதுமானதாகவோ இல்லை.   

ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகள் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டன. காரீப் பருவத்தில் பயிரிடப்பட்ட பெருமளவு பயிர்கள் மடிந்தன. நஷ்டமடைந்த விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பித்தனர். பல மாதங்களாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை. முதல்வர் ரோசய்யாவும், வேளாண் அமைச்சரும் பலமுறை கடிதம் எழுதிய பிறகும்கூட எதுவும் நடக்கவில்லை. இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசின் பங்குத் தொகை இன்னும் கிடைக்காததே இதற்குக் காரணம்.   

மத்திய அரசு தர வேண்டிய ரூ.358.58 கோடியால் மட்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பெரிய நிவாரணம் கிடைத்துவிடப்போவதில்லை. எனினும், விவசாயிகளின் பிரச்னையில் மத்திய அரசுக்கு உரிய அக்கறையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள இது ஓர் உதாரணமாக அமைந்துவிட்டது.  

ஆந்திர விவசாயிகள் கோரியிருக்கும் மொத்த இழப்பீட்டுத் தொகையே ரூ. 806.07 கோடிதான். நஷ்டத்தில் சிறு துரும்புதான் இது. இதற்குக் காரணம் விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீடு என்கிற பாதுகாப்பின்கீழ் வராததுதான்.  

பயிர்க்காப்பீடு செய்தவர்கள்கூட, அவர்களாக முன்வந்து அதைச் செய்யவில்லை. அவர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதன் விளைவாக, வேறு வழியில்லாமல் இந்தத் திட்டத்தில் அவர்கள் சேர்ந்தார்கள்.   

நடைமுறையில் சிறு விவசாயிகளும், குத்தகைக்கு விவசாயம் செய்வோரும் வங்கிகள் மூலமாகக் கடன் பெறுவதில்லை. இதனால், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த விகிதத்தில் இருக்கிறது. அதுவும், தானாக முன்வந்து காப்பீடு செய்வோர் மிகச் சொற்பம்.  

காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பிரீமியத் தொகை அதிகமாக இருக்கிறது. பருவத்தையும், பயிரையும் பொறுத்து 2 முதல் 20 சதவீதம் வரை பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. கடன்களுக்கு அரசு வழங்கும் வட்டித் தள்ளுபடியைக் காட்டிலும் இது அதிகமானது என்பது வருந்தத்தக்க விஷயம்.  

நாடு விடுதலையடைந்த காலத்திலேயே பயிர்க்காப்பீட்டின் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள். 1947-48-ல் இதுபற்றி ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. இரண்டுவிதமான காப்பீட்டு மாதிரிகளை இந்தக் குழு ஆய்வு செய்தது. பயிர்கள் நாசமாகும்போது, ஒவ்வொரு விவசாயியின் நஷ்டத்தையும் தனித்தனியே கணக்கிட்டு அதன்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முதலாவது மாதிரி. அப்படியில்லாமல், ஒரே மாதிரியான பருவநிலை கொண்ட கிராமம், யூனியன், தாலுகா போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் மொத்த நஷ்டத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு தரலாம் என்பது இரண்டாவது மாதிரி.  

ஒவ்வொரு விவசாயியின் தனித்தனி இழப்பீட்டைக் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படும் எனக் கருதப்பட்டது. தவறான நஷ்டக் கணக்கு காட்டப்படலாம், வேறு மாதிரியான முறைகேடுகளும் சாத்தியம் என்பதால், இந்தியாவில் முதலாவது மாதிரி, நடைமுறைக்கு ஒத்துவராது என முடிவு செய்யப்பட்டது.  

இதையடுத்து இரண்டாவது காப்பீட்டு மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களின் ஒப்புதல் கோரி மத்திய அரசு அனுப்பியது. எனினும், இந்தத் திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் காரணம் காட்டி பல மாநிலங்கள் இதை ஏற்க மறுத்தன. 

1965-ம் ஆண்டில் மீண்டும் இதே திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இதே கதைதான். மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டும் வகையில், மறுகாப்பீடு செய்யும் பணியை மத்திய அரசே செய்யும் எனக் கூறியபிறகும், எந்த மாநிலமும் திட்டத்தை ஏற்க முன்வரவில்லை.  

1970-ல் எச்-4 பருத்திக்கு மட்டும் பிரத்யேகமான காப்பீட்டுத் திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியது. அந்தச் சூழலில் 1972-ம் ஆண்டு காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டது. இதனால், ஜிஐசி எனப்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனம் எச்-4 பருத்திக்குக் காப்பீடு வழங்கும் பணியை ஏற்றது. இதன்பிறகு, நிலக்கடலை, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. எனினும், தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1978-79 வரை அமலில் இருந்த இந்தத் திட்டத்தில், ரூ. 3,110 விவசாயிகள் மட்டுமே சேர்ந்திருந்தனர். மொத்தம் வசூலான பிரீமியத் தொகை ரூ. 4.54 லட்சம். காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 37.88 லட்சம். 

இதன் பிறகு, 1979-ல் விவசாயக் கடன் பெறுவோர் கட்டாயமாகப் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் அறிமுகமானது. 1984-85 வரை ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 6.23 லட்சம் விவசாயிகள் சேர்ந்தனர். இந்தத் திட்டத்தில் ரூ.1 கோடியே 97 லட்சம் பிரீமியத் தொகை வசூலானது. ரூ. 1 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.   

ஒட்டுமொத்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் புதிய திட்டம் 1985-ம் ஆண்டில் அறிமுகமானது. 1999-வரை இந்தத் திட்டத்தில் 7.62 கோடி விவசாயிகள் சேர்ந்தனர். ரூ. 24 ஆயிரத்து 922 கோடி மதிப்பிலான பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் ரூ. 403 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டது. ரூ. 2,365 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.  

இந்த இழப்பீட்டுத் தொகையில் ரூ. 803 கோடியை மாநிலங்களும் மீதியை மத்திய அரசும் வழங்கின. பிரீமியத் தொகையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை மிக அதிகமாக இருந்ததால், பிரீமியத் தொகையை மாற்றியமைக்கத் திட்டக்குழு முடிவு செய்தது.   

இதையடுத்து, 1999-ல் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்கிற புதிய திட்டம் அறிமுகமானது. முன்பிருந்த காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையின் மூன்றில் ஒருபகுதியை காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. புதிய திட்டத்தில் காப்பீட்டு நிறுவனத்தின் பங்களிப்பு நீக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதியாகப் பகிர்ந்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  

இதன் பிறகு வேளாண் காப்பீட்டு நிறுவனம் 2002-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பொதுக் காப்பீட்டு நிறுவனம், நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் நபார்டும் சேர்ந்து இந்த அமைப்பை நிறுவின. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதே இதன் பணி.  

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 19 பருவங்கள் முடிந்திருக்கின்றன. இழப்பீடு கோருவதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்துக்கு இதுவரை ரூ.1,762.46 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் ரூ.801.20 கோடி நிலுவையில் உள்ளது. அதேபோல், தமிழகத்துக்கு ரூ.436.5 கோடி இழப்பீடு கிடைத்திருக்கிறது. இன்னும் ரூ.663.82 கோடி வர வேண்டியுள்ளது.  

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த ஆண்டின் இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.663.82 கோடியாக இருக்கிறது.   

இது இந்தியா முழுவதுமான ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். ஆனால் பலன் பெறுவது என்னவோ வெறும் 11 லட்சம் விவசாயிகள் மட்டுமே. மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவு.  

காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடையவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் முழுக் காரணம் அரசின் வணிக ரீதியான அணுகுமுறைதான்.    

தற்போதைய அனுபவத்தின் மூலமாவது, விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். பயிர்கள் மடிந்த பிறகு, மிகத் தாமதமாக இழப்பீடு வழங்குவது நடைமுறைக்கு ஒவ்வாதது.   உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கி, தொடர்ந்து பயிரிடுவதற்கான வழியை ஏற்படுத்தித் தரவேண்டும். விவசாயத்தின் உண்மையான பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ கணக்கீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவதால் மட்டும் இந்தச் சிக்கல்கள் தீர்ந்துவிடாது. 
நன்றி : www.dinamani.com - 06.11.2009


Monday, October 26, 2009

நாட்டுப்பற்று எங்கே?

விகடன் பொக்கிஷம்


ந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு காலத்தில் மாஸ்கோதான் வழிபடும் கோயி லாக விளங்கியது. ஸ்டாலின்தான் அவர்கள் தலைவணங்கி வந்த கடவுள். புரட்சி, வர்க்கப் போர், முதலாளித்துவ ஒழிப்பு, ரத்தக்களறி ஆகிய வார்த்தைகள் அவர்களு டைய மூலமந்திரங்களாக விளங்கின.

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு சீனாவிலும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமலுக்கு வந்தது. உடனே பீகிங் நகரை மாஸ்கோவுடன் தங்கள் இரண்டாவது கோயிலாகச் சேர்த்துக்கொண்டனர். மாஸேதுங் மற்றொரு கடவுளானார்.
திடீரென்று கம்யூனிஸ்டு சீனா, இந்திய எல்லையில் ஊடுருவி பன்னிரண்டாயிரம் சதுர மைல்களைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டுவிட்டது. இந்த ஆக்கிரமிப்புக் காரணமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, நாட்டில் அதற்கிருந்த சிறிதளவு ஆதரவை யும்கூட இழக்க நேர்ந்தது. கேரளத்தில் நடைபெற்ற மறு தேர்தலிலும் சரி, நாட்டின் பொதுத் தேர்தலிலும் சரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அடியோடு குடை சாய்ந்தது.
''இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதெப்படி?'' என்பதைச் சென்ற வாரம் ஹைதராபாத்தில் கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் யோசிக்க லாயிற்று. சீனா பற்றி மிக நாசூக்கான வகையில் ஒரு தீர்மானம் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பைப் பெரிதுபடுத்தாமலும், அதே சமயத்தில் இந்திய அரசாங்கத்தின் 'சீன'க் கொள்கையை ஆதரித்தும் அத்தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. ஆனால், 'சீனா பலாத்காரமாக இந்திய மண்ணை ஆக்கிரமித்துள்ளது அநியாயம்' என்று கண்டித்து ஒரு வார்த்தைகூடக் காணப்படவில்லை.
''ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பகுதியிலிருந்து சீனப் படைகள் பின் வாங்கி, எல்லையில் ஒரு ராணுவ சூன்யமான பிரதேசம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மேலும் சம்பவங்கள் நடைபெறாமலிருக்கும். இதற்கு ஒப்புக் கொண்டால்தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும்'' என்ற இந்தியப் பிரதமரின் கோரிக்கைக்கு சீனா இணங்க வேண்டுமென்று தீர்மானம் வற்புறுத்தாதது ஏன்? நாட்டின் பாதுகாப்பைவிட, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு சீனாவின் நல்லெண்ணம்தான் முக்கியமாகத் தோன்றுகிறது.

'நம் எல்லை எதுவோ அது நமக்கே சொந்தம். அதை விட்டுக் கொடுக்க மாட் டோம்' என்று புதிர் போடுகிறார் கம்யூனிஸ்டு தலைவர் டாங்கே. ஆனால், எது நம் நாட்டின் எல்லை என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஒருவேளை, சீனப் படங்களில் குறிப்பிட்டுள்ள எல்லையைத்தான் சொல்லுகிறாரோ?

Thanks to : www.vikatan.com - 28.10.2009

Thursday, October 22, 2009

விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?


லேனாவின் ஒரு பக்கக் கட்டுரை
  
பொறுமை என்பது இயலாமையின் மறுவடிவமே. “நான் நன்றாக இல்லை; இவன் மட்டும் நன்றாக இருக்கிறானே; நான் இப்படி வீணாய்ப் போனேனே!’ என்கிற சிந்தனைக் கோணத்தில் உள்ள பொறாமை உணர்வு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அத்துணை ஆண் மக்களும் செல்வ நிலையில் ஒரே மாதிரியாக இல்லை. இவர்களுள் வளர்ந்து உயர்ந்து வாழ்பவர்கள் மூவர் என்றால், மூவருக்கும் அதிர்ஷ்டம் இருந்தது; நல்ல மாமனார் வீடு வாய்த்தது; அவர்கள் கைதூக்கி விட்டார்கள்; இவர்கள பிடித்துக் கொண்டார்கள் என்று நான்காவது மகனோ ஐந்தாவது மகனோ வயிறு எரியலாம்; நாம் தோற்றதற்கான - வளராததற்கான வியாக்யானங்களும் சொல்லலாம்.
ஆனால் நல்ல வாய்ப்புகள் (மாமனார் வீட்டினரால்) கிடைத்தும் அவற்றை நழுவ விட்டுவிட்டு, நல்லுறவைக் கெடுத்துக் கொண்டு தோல்வியை அணைத்துக் கொண்ட மாப்பிள்ளைகளும் உண்டு.
அதே நேரத்தில், எவரது துணையும் ஆதரவும் உதவியும் பக்க பலமும் இன்றி சுயமாக உழைத்து, போராடி முன்னேறிய தனிமகன்களும் உண்டல்லவா? களங்களைக் காரணங்களாக்குகிறவர்கள் மேல் இரண்டு பாராக்களுக்கும் நமக்கு என்ன சமாதானம் சொல்லிவிடமுடியும் - முயற்சியின்மையைத் தவிர? ஆக, அதிர்ஷ்டம் வாய்த்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும், தக்க வைத்துக் கொள்ளவும் ஒருவிதத் திறமையும் முயற்சியும் தேவைப்படுகின்றன.
பல்லக்கில் பயணிக்கிறவனுக்கு அரச குடும்பத்தில் பிறந்த அதிர்ஷ்டம் வாய்த்து இருக்கலாம். ஆனால் அதைத் தூக்க நேருகிறவன் பொறாமைப்பட்டுச் சாகாமல், நானும் ஒரு நாள் பல்லக்கில் பயணிப்பேன் என்று எண்ணி ஏன் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை? இந்த முயற்சியில் உண்மையும் நேர்மையும் இருந்தால் குறைந்த பட்சம் பல்லக்குத் தூக்குகிற வேலையை விட்டுவிட்டு, ஒரு குதிரையிலாவது பல்லக்கிற்கு இணையான உயரத்தில் பயணிக்கலாமே! எல்லாத் திறமைகளும் இருந்தும் வீணாய்ப் போகிறவர்கள் உண்டு. ஏன்? நேர்மை இல்லை; செயல்களைவிட வாய்ப்பேச்சு அதிகம்; உழைப்பு இல்லை. சரியான களங்களில் சரியான நேரத்தில் விதைகளை விதைக்காமல் நம் நிலத்தில் விளைச்சல் இல்லையே என்று ஏங்குபவர்கள் இனியாவது மனமாற்றம் பெறுவார்களா?


Thanks to : www.tamilvanan.com - 18.09.2009



Monday, October 19, 2009

உணவுப் பற்றாக்குறை - காத்திருக்கும் ஆபத்து!

உலகம் வெப்பமயமாகி வரும் சூழல் காரணமாக ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்கள், விஞ்ஞானிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகின்றன.

இதன் காரணமாக ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் வரலாறு காணாத மழை வெள்ளம் என மக்களை அச்சுறுத்தி வருகிறது இயற்கை.

இந்தியாவில் பெருகி வரும் மக்கள்தொகை காரணமாக, விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகி வருகின்றன. இதனால் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போதிய மழை பெய்யாத காரணத்தால், உணவு தானியங்களின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

எனவே, உற்பத்தியைப் பெருக்கும் வகையில் விளைநிலங்களுக்குப் போதிய பாசன நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய நீர் வள கமிஷன் பரிசீலித்து வருவதாக அண்மையில் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். இரண்டு அல்லது மூன்று ஆறுகளை இணைப்பது சாத்தியம் என்றும் அது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாக இருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்பட்சத்தில் வெள்ளச்சேதம் தடுக்கப்படுவதுடன், வேளாண் பயிர்களுக்குக் குறைவின்றி பாசன நீர் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும். இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என நம்பலாம்.

இந்நிலையில், உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும், சீனாவும் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய 2050-ம் ஆண்டில் வேளாண் துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (எப்ஏஓ) தெரிவித்திருக்கிறது.

இத்தாலியின் தலைநகர் ரோமில் அண்மையில் நடைபெற்ற எப்ஏஓ உயர்நிலைக் கூட்டத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ந்து வரும் மக்கள்தொகையால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், எனவே அதற்கு ஏற்ப வேளாண் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், அதற்காக இப்போதே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்காக வேளாண் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலீடுகளை அதிகரிப்பது அவசியம் என்றும், அதற்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் உள்நாட்டில் விவசாயிகளை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான நவீன தொழில்நுட்பங்களின் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்கிறோம்.

ஆனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்ற கேள்வி வரும்போது, சாதகமான பதிலைச் சொல்ல முடிவதில்லை.

பிகார் மாநிலத்தின் கயா, சீதாமாரி ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்திருப்பதாக எழுந்துள்ள புகார்களைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது பாதகமான பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழை காரணமாக, நீரில் மூழ்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட உணவு தானியப் பயிர்கள் கிட்டத்தட்ட முற்றிலும் சேதமடைந்துவிட்டன.

இதனால் உற்பத்தி பெருமளவில் குறையும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, உணவுப் பற்றாக்குறை அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அரசு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருள்களைச் சேதமின்றிப் பாதுகாத்து மக்களுக்கு விநியோகம் செய்ய முனைப்புக் காட்ட வேண்டும்.

வேளாண் உற்பத்திக்குத் தேவையான மின்சாரம், இடுபொருள்களைத் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்கி, தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை
அதிகரிக்க அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Thanks to : www.dinamani.com - 16.10.2009

Saturday, September 26, 2009

இயற்கை வேளாண்மையில் உற்பத்தியான பழைய வெள்ளைப் பொன்னி விற்பனைக்கு தயார்!


வேலூர், செப். 22: ரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளைப் பொன்னி அரிசி விற்பனைக்கு உள்ளதாக இந்திய அரசின் சேவை அமைப்பான இயற்கை வேளாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது.

இதன் ஆலோசகர் கோ. புருஷோத்தமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்கள் பலவித நோய்களால் குறிப்பாக நீரிழிவு, புற்று நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இவற்றுள் மூலகாரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுதான்.

அரிசி, காய்கறிகள், பழங்கள் முதலியன ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இட்டு பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுள் பூச்சி மருந்துகள் தங்கி உணவுப் பொருள் நஞ்சாகின்றன என்று 1980-ம் ஆண்டிலேயே உலக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிவித்தனர்.

இதன்பின் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து இடாமல் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்து மக்களுக்கு அளிக்க வேண்டுமென திட்டமிட்டு செயல்பட தொடங்கியுள்ளன.

இந் நிலையில் வேலூரில் செயல்பட்டு வரும் இயற்கை வேளாண்மை இயக்கம், ஜவ்வாது மலை கிராமங்களில் இயற்கை முறையில் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து இடாமல் மலை வாழை, சாமை, மா, பலா, சிறு தானியங்கள் மற்றும் அரிசி உற்பத்தியை உழவர்கள் மூலம் மேற்கொண்டுள்ளது. இதை மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக இயற்கையில் விளைந்த, நஞ்சு இல்லாத பழைய வெள்ளைப் பொன்னி அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரிசி சமைத்த மறுநாள் வரை சாதம் கெடாமல் உள்ளது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்ண ஏற்ற அரிசியான இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

இந்த அரிசியை வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

முகவரி: கோ. புருஷோத்தமன், இயற்கை வேளாண்மை இயக்கம், 15, மூன்றாவது நெடுஞ்சாலை, அண்ணா நகர் மேற்கு, வேலூர் (தொலைபேசி எண்: 0416-2234898, மொபைல்: 9894784863).

Thanks to : www.dinamani.com - 23 Sep 2009

ஏன் முடியாது?


சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் தடை செய்யப்பட்டு 40 தினங்களாகிவிட்டன. மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த விஷயத்தில் நீலகிரி மாவட்டம்தான் தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. சுப்ரியா சாஹு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது பிளாஸ்டிக்கின் கோரப் பிடியிலிருந்து சுற்றுலாத் தலமான ஊட்டியை முற்றிலுமாக விடுவித்து, தமிழகத்துக்கே அவர் வழிகாட்டினார் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

சென்னையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. உலக அளவில் எடுத்துக்கொண்டால் நூறாயிரம் கோடி டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் டன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் அடுத்த சில நிமிடங்களிலோ, மணித்துளிகளிலோ குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் என்பது தெளிவு.

சென்னையை எடுத்துக்கொண்டால், மாநகரத்தின் மொத்த கழிவுப் பொருள்களில் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் குப்பை பிளாஸ்டிக் பைகள். சட்டப்படி, 20 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகளைத் தயாரிப்பதேகூட குற்றம். ஆனால், இந்தச் சட்டத்தை யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. நடைமுறைப்படுத்துவதாகவும் தெரியவில்லை.

ஒரு பலசரக்குக் கடையிலோ, காய்கறிக் கடையிலோ, வெற்றிலை பாக்குக் கடையிலோ இதுபோன்ற 20 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தரப்பட்டால், பொதுமக்கள் யாரிடம் போய் புகார் செய்வது என்று யாருக்காவது தெரியுமா? அந்தப் புகாரை காவல்துறை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. அரசாவது இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா, மக்களுக்குத் தெளிவான வழிமுறைகளை முன்வைக்கிறதா என்றால் கிடையாது.

பெட்ரோலியக் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் பல உப பொருள்களில் ஒன்றுதான் பிளாஸ்டிக் என்பதுகூட நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். இந்த பிளாஸ்டிக் கண்டுபிடித்தபோது, மனிதன் இயற்கையை வென்றுவிட்டான் என்றும், பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டதால் இயற்கை நமக்கு அளிக்கும் தாதுப் பொருள்களான இரும்பு, செம்பு, தகரம், அலுமினியம் போன்றவை மேலும் பல காலத்துக்குக் கிடைக்கும் என்றும் மனித இனமே பெருமைப்பட்டது. சணலுக்கும் காகிதப் பைகளுக்கும் வேலை இல்லாமல் போவதால், காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படும் என்று மகிழ்ந்தவர்களும் ஏராளம்.

இந்த மகிழ்ச்சி எல்லாம் அரை நூற்றாண்டு காலத்தில் மறைந்து, பிளாஸ்டிக் மனித இனத்துக்கு மட்டுமன்றி, உலகில் வாழும் உயிரினங்களுக்கும் ஏன் உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இறைவனின் படைப்பில் உலகிலுள்ள அத்தனை பொருள்களுமே மண்ணில் மக்கிவிடும் தன்மையன. அதனால் கழிவுகள் மலைபோலக் குவிந்துவிடாமல் உலகம் காப்பாற்றப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருள்கள் மக்கும் தன்மை இல்லாதவையாய் இருப்பதுடன், நிலத்தடி நீர் முறையாகச் சேகரிக்கப்பட முடியாமல் தடுக்கவும் செய்கின்றன. சராசரியாக ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்குக் குறைந்தது 1000 ஆண்டுகள்கூட ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இந்த பிளாஸ்டிக் எரிக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் வாயு புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது எனகிறார்கள்.

பிளாஸ்டிக்கால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான். நீர்நிலைகள், கழிவுநீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், கடற்கரைகள் என்று எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்து நிற்கும் பிளாஸ்டிக்கினால், உலகம் முழுவதுமே பாலைவனமாக மாறிவிடும் அபாயமும் இருப்பதாக விஞ்ஞானிகளே எச்சரிக்கை விடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வளர்ச்சி பெற்ற நாடுகளில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பதுடன் பலரும் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தில்லி, சண்டிகர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உதகமண்டலத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு முழுமூச்சாக பிளாஸ்டிக் தவிர்ப்பு மக்கள் இயக்கமாக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றமேகூட 60 மைக்ரானுக்கும் கீழேயுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைந்திருக்கிறது.

பிளாஸ்டிக்கை முழுமையாகத் தவிர்த்து விடுவதோ தடை செய்வதோ சாத்தியமானதல்ல. மனித இனத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே இன்னும் பல பொருள்கள் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிளாஸ்டிக், கழிவுநீர் ஓடைகளை அடைக்காமல், கண்ட இடங்களில் வீசி எறியப்பட்டு நிலத்தடி நீருக்குத் தடையாக இருக்காமல், கடலில் கலந்துவிடாமல் பாதுகாக்க முடியும். மக்கள் மனது வைத்தால், பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிமைப்படுத்தி நகராட்சி அமைப்புகளுக்கு உதவ முடியும்.

இந்த விழிப்புணர்வை அரசுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. நமக்கும் சமுதாயக் கடமை இருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் முயன்றால்... ஏன் முடியாது?

Thanks to : www.dinamani.com - 25 Sep 2009

Wednesday, September 2, 2009

தண்ணீர்... தண்ணீர்!


பருவமழை பொய்ப்பதால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம். அடுத்து உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய

பிரச்னை குடிநீர். கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

நோக்கி தமிழகம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 92,000 கிராமங்களில் 3,300 கிராமங்களில்கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நிலைமை 160 பேரூராட்சிகளிலும் 52 நகராட்சிகளிலும் உள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் கிராமப்புற மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவதும், அதிகாரிகளை முற்றுகையிடுவதும் அதிக எண்ணிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன.

நாளுக்கு நாள் இதன்பிடி கிராமப்புற மக்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக மாறிக்கொண்டிருக்கிறது.

நகராட்சி, மாநகராட்சிகளில் இத்தகைய குடிநீர்ப் போராட்டம் நடந்தால், இந்தப் போராட்டத்துக்கு அரசியல் மற்றும் அதிகார ஆதரவு கிடைக்கும். ஏனென்றால், இதைக் காரணம் காட்டி இரண்டு லாரிகளில் தண்ணீர் விநியோகம் என்று சொல்லி, ஒரு லாரியை

ஓட்டல்களுக்குத் திருப்பிவிட்டு நாள்தோறும் கணிசமான தொகையைப் பார்க்க முடியும். ஆனால் கிராம மக்களுக்காக குடிநீர் விநியோகம் என்பதை பேரூராட்சிகளால் செய்ய முடியாதே!

மேலும், கிராம மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.

அந்தந்த ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடிநீர்க் கிணற்றிலிருந்து தண்ணீரை மேனிலைத்தொட்டிக்கு ஏற்றி, விநியோகம் செய்யப்படுகிறதே தவிர, இவை

பல இடங்களில் சுத்திகரிக்கப்படுவதுகூட இல்லை. ஆனால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. கிணறுகள் வற்றிவிட்டன.

தமிழக அரசின் கொள்கைப்படி, ஒரு தனிமனிதனுக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு கிராமத்தில் 40 லிட்டர், பேரூராட்சியில் 70 லிட்டர், நகராட்சியில் 90 லிட்டர், மாநகராட்சியில் 135 லிட்டர். இத்தகைய மாறுபட்ட அளவீட்டு முறையே அநியாயமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் குடிநீர்த் தேவை என்னவோ ஒரே அளவுதான். நகர மக்கள் குளிக்க, துணி துவைக்க, தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச, கழிவறைக்குப் பயன்படுத்த என்று எல்லா பயன்

பாட்டுக்கும் சேர்த்துத்தான் மாநகராட்சி மக்களுக்கு அதிகமான அளவும், கிராமத்து மனிதனுக்குக் குறைந்த அளவும் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் கிராமத்து மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த

பட்சத் தேவைகூடப் பூர்த்தியாகவில்லை.

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி வழங்கும் குடிநீரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிப்பதற்குப் பயன்படுத்துவதே இல்லை. இவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க் கேன்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். உள்ளாட்சி விநியோகம்

செய்யும் பெருமளவு குடிநீர், குளியல் மற்றும் நவீன கழிவறைக்கே செலவிடப்படுகிறது என்பது மற்றொரு கசப்பான உண்மை.

அண்மையில் கோவையில் ஒரு தனியார் கல்லூரி நடத்திய ஆய்வு, நீர்க் கசிவுகளும் குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் நீர்த் திருட்டும் மிக அதிகமாக இருப்பதால்தான் மக்களுக்குத் திட்டமிட்ட அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என்கிறது. நீர்த் திருட்டு

இழப்பும்கூட, இத்திட்டத்தில் பயன்பெறும் வழியோர கிராமங்களின் தலையில் விழுகிறது.

கல்வியைத் தத்தெடுத்து வளர்க்கும் அரசியல்வாதிகள், குடிநீர் கேன் விநியோகத்தையும், அதற்கான ஆலைகளையும் தத்தெடுத்து சேவை செய்கிறார்கள். இவர்கள் உள்ளாட்சி விநியோகிக்கும் நீரை அப்படியே கேன்களில் பிடித்து, "பியூர் வாட்டர்' என்ற பெயரில்

அடைத்து விற்கிறார்கள். "பியூரிபைடு ட்ரிங்கிங் வாட்டர்' என்று லேபிள் ஒட்டினால் சட்டப்படி குற்றம். ஆனால் "பியூர் வாட்டர்' என்பது திருட்டுக் குடிநீராக இருந்தாலும் தண்டனை இல்லை.

இதில் வேடிக்கையானதும் வேதனையானதும் என்னவென்றால், ஏரிகளையும் குளங்களையும் அழித்த நகர, மாநகரங்கள், தங்களுக்குத் தேவையான குடிநீரை, உலகத்தில் மழையே பெய்யாவிட்டாலும்கூட தங்களுக்கு மட்டும் கிடைக்கும்படி செய்துகொள்ள முடிகி

றது. ஏனென்றால், ஆட்சியாளர்களின் இருப்பிடமாக நகரம் இருக்கிறது. ஆனால் கிராம மக்கள் அப்படியல்ல. அவர்களது ஏரி மற்றும் நிலத்தடி நீரை அண்டை நகரங்கள் உறிஞ்சுவதால்தான் அவர்கள் கிணறு வற்றிப்போகிறது. அதனால்தான் அவர்கள் தாகத்துக்குத் தண்ணீர் இன்றித் தவிக்கிறார்கள்.

தமிழக அரசு குடிநீர்ப் பிரச்னைக்காக மொத்தம் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ. 21 கோடி வழங்கியுள்ளது. குறைந்த பட்சம், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கைகளில்

மட்டுமாவது நேர்மையாகவும் முறைகேடுகளால் நிதி ஒதுக்கீடு காணாமல் போகாதபடியும் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நகர மக்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வதைச் சற்றே குறைத்துக்கொண்டு, கிராமங்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும்.

ஒரு லிட்டர் குடிநீரை ஒரு ரூபாய்க்கு வாங்கும் சக்தி நகர மக்களிடம் இருக்கலாம். கிராம மக்களிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்குகிற அளவுக்குத்தானே கிராமப்புறப் பொருளாதாரம் இருக்கிறது!

Thanks : www.dinamani.com on 02 Sep 2009