I LOVE TAMIL


Thursday, May 5, 2016

மதிய உணவில்கட்டாயம் மோர்

சொல்கிறார்கள்

மதிய உணவில்கட்டாயம் மோர் இருக்கட்டும்!
கோடையை சமாளிக்க வழி கூறும், இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபா, ஆயுர்வேதா டாக்டர் ரேகா ராவ்: காலையில் எழுந்ததும் பல் துலக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க, உடம்பு கூலாகி, வயிற்றில் இருக்கிற கழிவுகள் வெளியேறும்; உடம்பும் சூடு தணிந்து கூலாகத் துவங்கும். மற்ற சீசனில் நாள் ஒன்றுக்கு, எட்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், கோடையில், 21 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். இதனால், உடல் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போகாமல் இருக்கும்.இயல்பாகவே உடல் சூடு அதிகமுள்ளவர்கள், மோரில் அரை டீஸ்பூன் வெந்தயத்தை இரவே ஊற வைத்து, காலையில் குடித்தால், வெப்பத்தால் வருகிற வெள்ளைப்படுதல் கூட சரியாகிவிடும்.
ஒரு நாளைக்கு இரண்டு தடவை, 'ஷவர் பாத்' எடுத்தால், மொத்த உடம்பும் கூலாகும். தலைவலி பிரச்னை இருப்பவர்கள், உடம்புக்கு மட்டுமாவது இரு தடவை குளிக்கலாம். லூசான, காட்டன் துணிகளை அணிவது நல்லது. வெயில் காலத்தில் பெர்பியூமை தவிர்த்து, ஜவ்வாது, பன்னீர் மாதிரியான இயற்கை வாசனைப் பொருட்
களுக்கு மாறலாம்.சர்க்கரை போடாத பிரெஷ் ஜூஸ் அல்லது தினம் ஒரு இளநீர் குடிக்கலாம். பாட்டில் டிரிங்ஸ், அசைவ உணவை முடிந்தவரை தவிர்க்கலாம். மசாலாப் பொருட்களுக்கு நாக்கு ஆசைப்பட்டால் மிளகு, சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த சீசனில் மதிய உணவில் கட்டாயம் மோர் இருக்கட்டும். இது, வியர்வையால் இழந்த தாது உப்புக்களை மீட்டுத் தரும். சூட்டினால் வயிற்று வலி வந்தால், சிறிதளவு புளியைக் கரைத்து, அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து குடித்தால் உடனேசரியாகும்.
நம் உடலில் இருக்கிற உப்புக்கள், வெயிலில் வியர்வையாக வெளியேறும் போது, துளைகளை அடைத்துக் கொள்ளும். இதற்கு, சந்தனாதி தைலம், திரிபலா தைலம், ரிங்கமாலாதி தைலம், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகிய நான்கையும் சம அளவு எடுத்து உடம்பு முழுக்கத் தடவி குளித்தால், துளைகள் திறந்து உப்பு வெளியேறும். சருமத்தில் எந்த பிரச்னையும் வராது; இரவில் நன்றாக தூக்கம் வரும்.
சூட்டுக் கொப்புளம், கட்டிகள் வந்தால், கற்றாழையின் சோற்றுப் பகுதியை அதன் மேல் தடவினால், அப்
படியே அமுங்கிவிடும் அல்லது தேங்காய்ப் பாலில் வெள்ளை மிளகு, சீரகம், கசகசா ஊற வைத்து அரைத்து குளிக்கலாம்.இந்தக் குளியல் முறைகளை செய்ய முடியாதவர்கள், தினமும் எழுந்ததும், சின்ன டர்க்கி டவலை நனைத்துப் பிழிந்து, அடிவயிற்றின் மேல், 15 நிமிடங்கள் வைத்திருங்கள். இது, நம் உடம்பின் சூட்டை வெளியே எடுத்துவிடும். அதனால், வெயிலால் வரும் தலைவலி, எரிச்சல், மூலம், அஜீரணம், கட்டிகள் எல்லாம் பக்கத்தில் வராது; வந்தாலும் போய்விடும்.

www.dinamalar.com -  05.May.2016

other links :  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

http://kolipaiyan.blogspot.in/2010/08/15.html