I LOVE TAMIL


Monday, November 21, 2011

Yoga vs. regular exercise


Naturopath S R Jindal believes the benefits of yogasanas are manifold and that they score over physical exercise. He lists why yogic exercise is the better option
    Thyroid Patanjali’s Yoga Sutras describe asanas as “sthiram sukam
asanam”, meaning a body position that is “steady, calm and comfortable”. Physical exercise, on the other hand is an activity that works our muscles and needs energy. It is different from yoga asana. Here are the differences:

1 | Physical exercise consumes more oxygen than yogasanas.
2 | The heart has to work harder during physical exercise, but BP and heart rate decrease when you practise asanas.
3 | Physical exercise can overwork joints and even cause rheumatism and stiffness later in life. But asanas encourage flexibility and build stamina.
4 | Physical exercise builds up toxins in the body while asanas eliminate them.
5 | Generally, physical exercises are done quickly causing heavy breathing. Thus the respiratory system is forced to work harder.
6 | Most types of physical exercise develop muscles. The larger the muscle, the more nutrition and oxygen it needs. This means that the organs will get less nutrition and oxygen. Asanas reverse this. They enable the organs to get the greater share of oxygen and nutrition.
7 | Those who practise yoga need less food compared to those who engage in physical exercise.
8 | Unlike exercise, asanas are practised slowly with relaxation and awareness. Asanas balance emotions and help develop a positive attitude to life.
9 | In yoga, body temperature drops, while in exercise, it rises.
10 | Asanas stimulate the parasympathetic nervous system (PNS), which is the source of your relaxation response. It is what helps you wind down after a long day at work. It is what slows your body down. It relaxes muscles, lowers your BP, slows your heart rate and breath, starts your digestive juices flowing, and gets your bladder and bowels ready to do their thing. Exercise stimulates the sympathetic nervous system (SNS) which is involved in energy output. When the SNS is activated, we feel it as being stressed or excited.
11 | Regular practise of asanas harmonise endocrine secretions. The endocrine system works through glands which secrete hormones. When this system malfunctions, we get diabetes, hypothyroidism, obesity and goitre.
But it is advisable to first learn yoga with the help of a trained teacher. 
 
Thanks : www.timesofindia.com - 10.Nov.2011
http://www.timeswellness.com/article/45/20111111201111101743094242b4087f2/Yoga-vs-regular-exercise.html

Thursday, August 25, 2011

சுனாமி பாதிப்பை சமாளிக்க ஜப்பானில் புதுமையான திட்டம்!

சமீபத்தில், ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும், சுனாமியும், அந்த நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. அணு மின் நிலையங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால், அங்கிருந்து கதிர் வீச்சு பரவி, சுற்றுச் சூழலுக்கு பெரும் கேட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, அங்கு கடுமையான மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்களில், மற்ற நாடுகளுக்கு எப்போதுமே முன் மாதிரியாக செயல்படும் ஜப்பானியர்கள், இந்த விஷயத்திலும் அந்த போக்கை பின்பற்றத் துவங்கி விட்டனர். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், மின்சாரத்தை சேமிக்கும் வகையிலுமான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் குளிர்சாதன வசதி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

குளிர்சாதன வசதி இல்லாத நேரத்தில், எப்படி இருப்பது என்பதற்கும், சில ஆலோசனைகளை ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான, காற்றோட்டமான உடைகளை அணிந்து வரும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறுக்கம் இல்லாத டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிந்து வருவதற்கு ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கழுத்தில், "டை' அணிந்து வருவதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பெண் ஊழியர்கள், கால்களை முழுவதும் மறைக்கும் வகையிலான, "ஷூ'க்களை அணிய வேண்டாம் என்றும், சாதாரண செருப்பு மற்றும் ஷூக்களை அணிந்து வரும்படியும் கூறப்பட்டுள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, "கேட்வாக்' நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், 15 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும் என்கின்றனர், ஜப்பான் அதிகாரிகள். தங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்ட போதே, அசராமல் எழுந்து நின்று, சாதித்துக் காட்டிய தன்னம்பிக்கை மிக்கவர்கள் ஜப்பானியர்கள். அவர்களை இந்த சுனாமி என்ன செய்து விடும்?
— ஜோல்னா பையன். 



தலையங்கம்: பாழாகும் விளைநிலங்கள்!

சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், உணவு உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்திருப்பதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். உண்மைதான். கடந்த இரு ஆண்டுகளாக உணவு உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. உணவுப் பொருள் கையிருப்பும்கூட வழக்கத்தைவிட அதிகமாகவே உள்ளது.


உணவு மற்றும் விநியோக அமைச்சகத்தின் அறிக்கையில் அரிசி கையிருப்பு 268 லட்சம் டன், கோதுமை கையிருப்பு 371 லட்சம் டன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 639 லட்சம் டன். இந்த அளவு வழக்கமான கையிருப்பாகிய 319 லட்சம் டன் உணவு தானியத்தைப்போல இரு மடங்கு! உணவுப் பொருள்கள் தற்போது கையிருப்பில் உள்ளதென்பது பிரதமருக்கு மட்டுமல்ல, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்திதான்.

இருப்பினும், இந்த வேளையில் நிகழ் நிதியாண்டில் இதுநாள் வரை உர நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உர மானியத்தின் அளவைப் பார்க்கும்போது மலைப்பாக இருப்பதோடு, கவலை தருவதாகவும் இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

இந்த உர மானியம் நேரடியாக உர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்போது, இதனால் நிறுவனங்கள் அடையும் லாபம் அதிகமாகவும், விவசாயி பெறும் நன்மை குறைவாகவும் உள்ளது என்பது முதல் காரணம்.

மானிய விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை மிக அதிகமாகப் போட்டு இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தைப் பாழாக்கி விட்டார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால், இதே உற்பத்தி நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என்று வேளாண் வல்லுநர்கள் தரும் தகவல்கள் இரண்டாவது காரணம்.

யூரியா, பொட்டாசியம், பாஸ்பேட் என அடிப்படை உரங்களுக்காக இந்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியம் 2009-10-ம் ஆண்டில் ரூ. 64,032 கோடி, 2010-11-ம் ஆண்டில் ரூ. 65,836 கோடி என்று உர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டாலும், இவை விநியோகத்துக்கு வந்து, விவசாயிகளைச் சென்றடையும்போது, அரசு நிர்ணயிக்கும் விலையைவிட அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலைதான் இன்றளவும் உள்ளது. இதற்காக எத்தனை புகார்கள், போராட்டங்கள் நடைபெற்றாலும் விவசாயி அதிக விலை கொடுப்பதும், உரங்கள் பதுக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இந்த உர நிறுவனங்கள் தரமான உரங்களைத் தயாரிப்பதில்லை என்கிற புகார்கள் ஒருபுறம், இவை தொழில்நுட்பத்தைப் புதுப்பிக்காமல் பழைய நிலையிலேயே உரங்களைத் தயாரித்து, சுற்றுச்சூழல் மாசுக்குக் காரணமாகின்றன என்பது இன்னொருபுறம். ஆனால், அதுபற்றி அரசு எந்தக் கவலையும் கொள்வதில்லை.


ரசாயனத் துறை மற்றும் உரங்கள் அமைச்சகம் தரும் புள்ளிவிவரத்தின்படி, சந்தை மதிப்பில் யூரியாவின் அதிகபட்ச விலையான ரூ.5,310 (ஒரு டன்) என்பதில் விவசாயிக்கு 27 முதல் 58 விழுக்காடு வரை பயன் கிடைக்கும் வகையில் மானியம் அளிக்கப்படுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த அதிகபட்ச விற்பனை விலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள், எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது அரசுக்கே வெளிச்சம்.

இந்திய விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உர ஆலைகளுக்கே நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவரச் சொல்லப்பட்ட காரணம், இந்தியா முழுவதும் சிதறியுள்ள விவசாயிகளுக்குத் தனித்தனியாக மானியம் நேரடியாகக் கிடைக்கச் செய்வது இயலாது என்பதுடன், அது ஊழலில் போய் முடியும் என்பதுதான். அதனால்தான் உர நிறுவனங்களுக்கே நேரடியாக மானியத்தை அளிக்க முடிவு செய்தது அரசு.


உரத்தின் அதிகபட்ச விலையைத் தீர்மானிக்கும்போது, அந்த நிறுவனத்தின் முதலீட்டுக்கு, வரிக் கழிவுகள் நீங்கலாக, 12 விழுக்காடு லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த அடிப்படையில்தான் உர நிறுவனங்களால் இந்த விலைகள் தீர்மானிக்கப்படுகின்றனவா என்பது பரம ரகசியம். அது பற்றிய கேள்விகள் எழாமல் இருப்பதற்காகவோ என்னவோ, உர நிறுவனங்கள் தங்களுக்கு 3 விழுக்காடு லாபம்தான் கிடைக்கிறது என்று தங்களுக்கான ஆதரவுக் குரலைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன, மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

விவசாயியின் நன்மைக்காகவும், உணவு உற்பத்தியை உறுதி செய்வதற்காகவும் உரத்துக்கு அரசு அளிக்கும் மானியத்தை, உர நிறுவனங்கள் அதிகமாகவே பெற்று நன்றாக இருக்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை. இந்த உரத்தை, குறிப்பாக யூரியா உரத்தை, சலுகை விலையைவிடக் கூடுதலான விலைக்கு வாங்கி நிலத்துக்குப் போட்டு, தானும் பாழாகி, நிலத்தையும் பாழாக்கிக்கொண்டு வருகிறார்கள் நமது விவசாயிகள் என்பதும் கசப்பான உண்மை. இதுபற்றி எந்தவிதமான விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது அதைவிடக் கொடுமையான உண்மை.


இந்திய விளைநிலங்களில் யூரியாவின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால், நமது விளைநிலங்களின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது என்கின்றன ஆய்வுகள். இந்தியாவில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3.4 டன் நெல் உற்பத்தியாகிறது என்றால், சீனாவில் இதே ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6.5 டன் நெல் உற்பத்தியாகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய விவசாயிகள் உரத்தை அதிகமாகப் போட்டதுதான் என்கிறார்கள்.

இந்த உர மானியத்தை உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் அதே நேரத்தில், பாரம்பரிய வேளாண்மைக்கு இந்த மானியத்தை கொண்டுபோய்ச் சேர்த்து ஊக்கப்படுத்தவும் பாரம்பரிய வேளாண்மையை மீட்டெடுக்கும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் ஏற்படுத்தவும் தேவையான முயற்சிகளை அரசும், ஊடகங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கி விட்டால், விளைநிலங்கள் முற்றிலும் பாழாகிவிடும் முன்பாக மீட்டு விடலாம். விவசாயியும் மீட்கப்படுவார். விவசாயி வாழ்ந்தால் மட்டும்தான் நாடு வாழும்! 

நன்றி: www.dinamani.com  -  23-Aug-2011






Wednesday, August 3, 2011

ஆக., - 2 ஆடிப்பூரம், 3-ஆடிப்பெருக்கு!



குருஷேத்ர போர்க்களத்தில், தன் உறவினர்கள் மீது, அர்ஜுனன் அம்பு விட தயங்கிய நேரத்தில், "அர்ஜுனா... தர்மம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அங்கே உறவுகளுக்கு இடமில்லை. இந்த உலகமே நான் தான். கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே! உடல் தான் அழியும், அதற்குள் இருக்கும் ஆத்மா, தன் வினைகளுக்கேற்ப இன்னொரு பிறவியை எடுக்கும். எவனொருவன் என்னைச் சரணடையும் சரணாகதி தத்துவத்தைக் கடைபிடிக்கிறானோ, அவனே பிறவியைக் கடந்த நிலையை அடைவான்...' என்றெல்லாம் போதித்தார்.
இந்த நிகழ்வு நடந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன; ஆனால், உலக மக்களிடையே மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. சரணாகதி தத்துவத்தை அவர்களுக்கே உரித்தான எளிய நடையில் கற்பிக்க, திருமால் முடிவெடுத்தார். அதற்காக, தன் மனைவி லட்சுமியிடம், "நீ பூலோகம் சென்று, இறைவனைச் சரணடைந்தால் தான் முக்தி நிலை கிடைக்கும்...' என்ற தத்துவத்தைப் போதிக்கும் வகையில் ஒரு பிறப்பை எடு...' என்றார்.
லட்சுமி மறுத்து விட்டாள். "ஏற்கனவே, சீதையாக அவதாரம் எடுத்து, என்னைத் தாங்கள் படுத்திய பாடு போதாதா... இனியும் மனிதப் பிறவியா? வேண்டாம் சாமி; ஆளை விடுங்கள்...' என, ஒதுங்கிக் கொண்டாள். தன் இன்னொரு மனைவி பூமாதேவி பக்கம் சுவாமி திரும்பினார்; அவர் பார்வைக்கென்றே அவள் காத்திருந்தது போல், உடனே சம்மதித்து விட்டாள்.
"எங்கே போய் பிறக்கப் போகிறாய்?' என்று கேட்டதற்கு, "உங்கள் முடிவுப்படி தான் எல்லாம் நடக்கப் போகிறது; எனவே, அதெல்லாம் உங்கள் கையில்...' என்று பிறக்கும் முன்பாகவே, திருமாலிடம் சரணடைந்து விட்டாள் அவள்.
பூலோகத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் அழகிய தலத்திலுள்ள துளசி வனத்தில், விஷ்ணுசித்தர் எனும் பக்தரின் பார்வையில் படும்படி குழந்தையாகப் படுத்திருந்தாள். இவரையே, "பெரியாழ்வார்' என்கிறோம். அவர், அவளைத் தன் மகளாக ஏற்று, "கோதை' என பெயர் சூட்டி வளர்த்தார். "கோதை' என்றால், "நல்வாக்கு தருபவள்' என்று பொருள். ஆம்... அவள் திருமாலை வணங்க, "மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...' எனத் துவங்கும், "திருப் பாவையை' நமக்கெல்லாம் அருளியிருக்கிறாள்; இதை, "வேதத்தின் சாரம்' என்பர். வேதத்தைக் கற்றுக் கொள்ளும் தகுதி எல்லாருக்கும் இல்லை. அதை எளிமைப்படுத்தி, முப்பது பாடல்களுக்குள் அடைத்து விட்டாள் கோதை.
எல்லாருக்கும் நல்ல பெயரை சூட்டியுள்ளனர் நம் பெற்றோர்; அந்த பெயருக்கேற்றாற் போல் நாம் நடந்து கொள்ள வேண்டும். அரிச்சந்திரன் என்று பெயர் வைத்துக் கொண்டவன், பொய் சொன்னால் நன்றாக இருக்குமா? ஆனால், கோதை, தன் பெயரின் பொருளுக்கேற்ப, நல்வார்த்தைகள் கொண்ட பாடல்களைத் தந்து, உலகமே இறைவனை அடைய வழிகாட்டினாள். அவளது அவதார நாளே ஆடிப்பூரம். இந்த நன்னாளில், ஆண்டாளைப் போல நாமும், நம் பெற்றோரின் பெயர் காக்க உறுதியெடுக்க வேண்டும்.
இவ்வாண்டில், ஆடிப்பூரத்திற்கு மறுநாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதுண்டு. குறிப்பாக, புதுமணத் தம்பதியர் காவிரியில் நீராடி, அந்த அன்னைக்கு பூ, பழம் முதலானவை அளித்து வழிபட்டு வருவர்.

அகத்தியரால் நமக்கு அளிக்கப்பட்ட வரமே காவிரி. மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பர். அகத்தியர் உருவத்தில் சிறியவர் என்றாலும், நமக்கு அவர் அளித்த நதியோ மிக நீண்டது. ஏராளமான மக்களுக்கு உணவளித்து தாகம் தீர்க்கும் புண்ணிய நதி இது. நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே, ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னோர் உருவாக்கினர்.
இந்த திருவிழாவை தமிழகமே கொண்டாட வேண்டும். காவிரி மட்டுமல்ல, தமிழகத்தின் பிற நதிகளும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை. நதிகளை அழிப்பதன் மூலமே எதிர்கால சந்ததிக்கு நாம் இன்னலை ஏற்படுத்திய பாவத்திற்கு ஆளாவோம். ஆடிப்பூர நன்னாளில், அவதரித்த பூமித் தாயையும், ஆடிப்பெருக்கு நன்னாளில், பெருக்கெடுக்கும் காவிரி தாயையும் வணங்கி, அவர்களின் நல்லருள் பெறுவோம்.
 
நன்றி: www.dinamalar.com - ஜூலை 31,2011

Friday, June 10, 2011

தலையங்கம்: பேச்சைக் குறை...!


மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல். புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.  

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.  

14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது. 2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. 

 இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்! 

 உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன. அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.

செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது.  

அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம். 

 இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட-செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை- பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .  

நன்றி: www.dinamani.com  -  10-Jun-2011

Saturday, May 7, 2011

தலையங்கம்: நீரின்றி அமையாது...

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா உலக வல்லரசாகிறதோ இல்லையோ, மிகப்பெரிய தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்க இருக்கிறது. பனிபடர்ந்த இமயமலைச் சாரலில் உள்ள பல கிராமங்களில்கூட சமீபகாலமாகத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏன்? ஆண்டு முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும் என்று நாம் பூகோளப் பாடத்தில் படித்த சிரபுஞ்சியில் குடிநீர் தட்டுப்பாடு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுதான் எதார்த்த நிலைமை. 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஏறத்தாழ 250 லட்சம் நீர்நிலைகள் இருந்ததுபோக, இப்போது முறையாகப் பாதுகாக்கப்படும் நீர்நிலைகளின் எண்ணிக்கை வெறும் 40,000 மட்டுமே என்கிறது சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கை ஒன்று. 2008-ல் "நாசா' நடத்திய ஓர் ஆய்வின்படி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், பிகார் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிவேகமாகக் குறைந்து வருவதாகவும், அது மழையால் முழுவதுமாக ஈடுகட்டப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவின் மொத்த நீர் வரவு 1,123 பில்லியன் கியூபிக் மீட்டராகத் தேக்கமடைந்திருக்கும் நிலையில், சுமார் 800 பில்லியன் மீட்டர் தேவை அதிகரித்திருக்கிறது. இது மேலும் அதிகரித்தவண்ணம் இருப்பதால் உற்பத்தியாகும் தண்ணீர் நமது தேவைக்குப் பற்றாக்குறையாகவே தொடர்கிறது. இப்போதே இந்தியாவின் பல பகுதிகள் வறட்சிப் பிரதேசங்களாக மாறிவிட்டிருப்பதன் காரணம் இதுதான். 

நகர்ப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் இதற்கு முக்கியமான காரணம். நீர் மேலாண்மை என்பதற்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிட்டதால், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கிரிமினல் குற்றமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. சொல்லப்போனால், மாநில அரசுகளேகூட இந்த ஆக்கிரமிப்பை நடத்தி முன்னுதாரணமாகத் திகழும்போது, பொதுமக்களை மட்டும் குற்றம் சொன்னால் எப்படி?

அநேகமாக எல்லா மாநிலங்களிலும், பல பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது நீர்நிலைகளின் மீதுதான். அரசு அலுவலகங்கள் பல குளங்களையும், ஏரிகளையும் நிரப்பிக் கட்டப்பட்டவை என்பது உலகறிந்த உண்மை. வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை அமைப்பதில் தொடங்கி, நீர்நிலைகளில் மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளராக இருப்பது அரசாங்கம் எனும்போது, அரசியல் செல்வாக்குப் படைத்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்களும் நீர்நிலைகளையும், ஏரிகளையும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க இயலாமல் போய்விட்டது. 

நகர்ப்புறங்களில் நடக்கும் குடிதண்ணீருக்கான போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, விவசாயிகளின் பாடு அதைவிடத் திண்டாட்டம். சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளாகியும் இன்னும் முறையான நீர் மேலாண்மைக்கான திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் ரூ. 1,20,000 கோடி செலவழித்திருக்கிறோமே தவிர, இன்னும் இந்தியாவிலுள்ள 30% விளைநிலங்கள்தான் பாசன வசதி பெற்றவை என்கிற புள்ளிவிவரம் தலைகுனிய வைக்கிறது. எங்கே போயிற்று இத்தனை கோடி மக்களின் வரிப்பணம் என்று கேள்வி கேட்கக்கூட ஆளில்லாத நிலைமை.

திட்டக் கமிஷன் இப்போதுதான் விழித்துக் கொண்டிருக்கிறது. திட்டக் கமிஷன் உறுப்பினரான மிகிர் ஷா என்பவரை நீர் மேலாண்மைக் கொள்கையை வரையறுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் பணித்திருப்பதாகத் தெரிகிறது. 

விவசாய நீர் மேலாண்மையைப் பொறுத்தவரையில், மகாராஷ்டிரம் இந்தியாவுக்கு முன்மாதிரியாகப் பல பரிசோதனைகளைச் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்தச் சோதனைகள் அனைத்தையுமே செய்பவர்களும், செய்து வெற்றி பெற்றிருப்பவர்களும் காந்தியவாதிகளான மோகன் தாரியா, அண்ணா ஹஸôரே போன்றவர்கள். "பானி பஞ்சாயத்' (தண்ணீர் பஞ்சாயத்துகள்) என்று ஆங்காங்கே அமைக்கப்பட்டு, நீர்நிலைகளைத் தூர்வாருவது, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை நிறைவேற்றுவது, கால்வாய்களுக்கு சிமென்ட் பூசப்பட்டு கசிவைத் தடுப்பது என்று அவை செயல்படுகின்றன.

1960-ல் கிருஷ்ணா நதியின் தண்ணீர் உற்பத்தி 57 பில்லியன் கியூபிக் மீட்டராக இருந்தது. இப்போது, அநேகமாக ஒன்றுமே இல்லாத நிலைமை. 1892-ல் 1,85,000 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர்வரத்து இருந்த சிந்து நதியின் நீர்வரத்து 1990 புள்ளிவிவரப்படி வெறும் 12,300 மில்லியன் கியூபிக் மீட்டர் மட்டுமே. யமுனை நதி அநேகமாக வற்றிவிட்ட நிலைமை. ஆக்கிரமிப்புகளாகவும், கழிவு நீர் கலப்பதாலும் அதை நதி என்று அழைப்பதைவிடச் சாக்கடை என்று அழைக்கலாம் போலிருக்கிறது. 

தட்பவெப்பநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு என்று இமயமலையிலுள்ள பனிச்சிகரங்கள் பாதிக்கப்பட்டு கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா நதிகள் மெல்ல மெல்ல வற்றத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவிலுள்ள நீர்நிலைகளில் 36% நச்சுக் கழிவுகள் கலப்பதால் குடிநீராகப் பயன்படுத்தும் தகுதியை இழந்துவிட்டிருக்கின்றன.

2020-ல் இந்தியாவின் தண்ணீர்த் தேவை சுமார் 1,000 பில்லியன் கியூபிக் மீட்டர்களாகவும், மொத்த நீர்வரத்து வெறும் 700 பில்லியன் கியூபிக் மீட்டர்களாகவும் இருக்கப் போகிறதே, நாம் என்ன செய்யப் போகிறோம்? 

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என்று எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில், அவர்கள் பகுதியிலுள்ள, இன்னும் ஆக்கிரமிப்புக்கு உள்படாத, நீர்நிலைகளையும், கோயில் குளங்களையும் முறையாகத் தூர்வாரிச் செப்பனிட்டுப் பாதுகாத்தாலேகூட ஓரளவுக்கு நாம் சமாளிக்க முடியலாம்.

இனியும் தாமதிக்காமல், அரசு ஆறுகளில் மணல் அள்ளும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தால், மக்கள் மத்தியில் தண்ணீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், சமாளிக்க முடியலாம். 

இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால், நீர்நிலைகள் வற்றுவதுபோல நமது தொண்டைகளும் வற்றக்கூடும்!


நன்றி: www.dinamani.com  -  07-May-2011