I LOVE TAMIL


Wednesday, December 23, 2009

புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு


கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது.​ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள்,​​ அமைப்புகள்,​​ இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம்.​ ​ மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது.​ இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால்,​​ ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும்,​​ முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான்.​ அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.​ உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது.​ ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது,​​ சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது;​ பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால்,​​ அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது.​ உலக நாடுகள் அனைத்தையும்,​​ ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் -​ கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும்,​​ வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால்,​​ அவற்றோடு சேர்ந்து பூமிக்கும்,​​ கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது.​ இவை ​ -​ நிலக்கரியும்,​​ பெட்ரோலியப் பொருள்களும் -​ சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம்,​​ காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது.​ இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் ​ பெருக்கின.​ இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின.​ கூடவே,​​ காடுகள் அழிக்கப்பட்டதும்,​​ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும்,​​ அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும்,​​ பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன.​ உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று,​​ நீர்,​​ அனைத்தும் ​ மாசுபட்டன;​ ​ மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின.​ வளர்ச்சியும்,​​ முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால்,​​ சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும்,​​ அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் ​ வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது.​ பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து,​​ மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது.​ பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின.​ இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால்,​​ மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை ​ எழுந்தது.​ ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி,​​ அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.​ இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.​ இதையடுத்து ஐ.நா.​ முயற்சியில் 1989,​ 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.​ கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள்,​​ கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா.​ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் ​ உருவாக்கப்பட்டன.​ ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும்,​​ 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன.​ தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது.​ இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா.​ 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா.​ கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது.​ புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும்,​​ இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்;​ வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால்,​​ அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ,​​ கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது;​ ​ என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள்,​​ வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி,​​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது.​ இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன.​ ​ இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.​ இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து -​ இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் -​ வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.​ இந்த 1992-ன் ஐ.நா.​ கோட்பாடு,​​ உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும்,​​ இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது.​ இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா.​ எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.எனினும்,​​ இந்த ஐ.நா.​ கோட்பாடு அடுத்தடுத்த ​ பேச்சுவார்த்தைகளுக்கும்,​​ மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.​ புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும்,​​ உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக,​​ சிறு தீவு நாடுகள்;​ தாழ்நிலைக் கடலோர நாடுகள்;​ சதுப்பு நிலம்,​​ காடுகள் நிறைந்த நாடுகள்;​ ​ ​ இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்;​ வறட்சி -​ பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்;​ நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்;​ எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்;​ எரிபொருள்களை ​(நிலக்கரி,​​ எண்ணெய்)​ எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள்,​​ சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது;​ வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா.​ கோட்பாட்டுக்கு,​​ வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது.​ ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும்,​​ 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் ​ சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது.​ 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு,​​ வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் ​(கரியமில வாயு)​ வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது.​ 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே,​​ புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ ​ உடன்பாட்டின் மையக் கோட்பாடு.​ இதுவே பொதுவான -​ ஆனால் பாகுபடுத்தப்பட்ட -​ பொறுப்புகள் என்று அறியப்பட்டது.​ இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா ​ இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி,​​ இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது.​ இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும்,​​ வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து,​​ கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும்,​​ கோபன்ஹேகனில் குழுமி,​​ ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு,​​ "பூமண்டலம் காப்போம்;​ ​ புவிவெப்பம் ​ தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று,​​ ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது.​ ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ,​​ சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ​ ஏற்க மறுத்தார்.தனிநபர் சராசரிக் கணக்கில்,​​ இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா,​​ தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல்,​​ வளரும் நாடுகள் -​ குறிப்பாக சீனாவும் இந்தியாவும் -​ கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது;​ ​ அது மட்டுமல்ல,​​ வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.வளரும் நாடுகள் ஜி -​ 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.சர்வதேச நிதி நெருக்கடியின்போது,​​ வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது.​ கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில்,​​ அமெரிக்காவையும்,​​ வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.​ ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,​​ பிரேசில்,​​ தென்ஆப்பிரிக்கா,​​ இந்தியா,​​ சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன;​ ​ இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.​ கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது,​​ 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே,​​ கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள்.​ இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள ​(கரியமில வாயு ​ குறைப்புக்கான)​ பொறுப்பு என்பது,​​ வளரும் நாடுகளான இந்தியா -​ சீனாவோ,​​ இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் -​ ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல்.​ கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக,​​ சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. ​பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 -​ 2012-ல் 3000 கோடி டாலரும்,​​ 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.​ ஆனால்,​​ கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!

நன்றி: www.dinamani.com - 23.12.2009 

Tuesday, December 15, 2009

தலையங்கம்: எச்சரிக்கை அவசியம்

வ ளி​மண்​ட​லத்தை மாசு​ப​டுத்​தும் பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் நட​வ​டிக்​கைக்​கான பரு​வ​நிலை மாநாடு கோபன்​ஹே​க​னில் தொடங்கி ஒரு​வா​ரம் முடிந்த நிலை​யில்,​​ சிறு​சிறு காய்​ந​கர்த்​தல்​க​ளைச் செய்​துள்​ளன வள​ரும் நாடு​கள்.​ அதா​வது,​​ கரி​ய​மில வாயு உள்​ளிட்ட பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைக்​கும் அள​வு​க​ளில் கொஞ்​சம் முன்​பின் இருந்​தா​லும் அவை சரி​பார்க்​கப்​ப​டும் என்​ப​தும் இதில் ஒன்று.​
192 நாடு​க​ளின் பிர​தி​நி​தி​கள் பங்கு கொண்​டுள்ள இந்த மாநாட்​டில்,​​ 77 வள​ரும் நாடு​கள் உள்​ளன.​ வள​ரும் நாடு​கள் தங்​கள் பகு​தியி​லி​ருந்து பசுமை இல்ல வாயுக்​க​ளைக் குறைப்​பது என்​றால்,​​ அதற்​கா​கச் சில தொழில்​து​றை​யி​லும்,​​ அனல் மின்​உற்​பத்​தி​யி​லும் சில மாற்​றங்​க​ளைச் செய்​தாக வேண்​டும்.​ இந்​தத் தொழில்​நுட்ப மாற்​றத்​துக்​காக 1000 கோடி டாலர்​கள் உதவி செய்​வ​தாக ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.​
இந்​தத் தொகை மிகச் சொற்​ப​மா​னது என்று வள​ரும் நாடு​கள் கருத்​துத் தெரி​வித்​துள்​ளன.​ உண்​மை​யைச் சொல்​வ​தென்​றால்,​​ இந்த எதிர்ப்​பின் அள​வைத் தெரிந்​து​கொள்​ளத்​தான் ​ அவர்​கள் இதைத் தெரி​விக்​கி​றார்​கள்.​ எதிர்ப்​பின் அள​வைப் பொருத்து,​​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட வளர்ந்த நாடு​கள் தங்​கள் பங்​குத்​தொ​கையை மேலும் அதி​க​ரித்து,​​ வள​ரும் நாடு​களை நிர்​பந்​திக்​கும்.​ அதற்​கான முதல்​பே​ரம்​தான் இந்த 1000 கோடி டாலர்.​ இது மேலும் உய​ரும் என்​பது நிச்​ச​யம்.​
இதை அறி​வித்​துள்ள ஐரோப்​பிய நாடு​க​ளின் ஆணைய இயக்​கு​நர் கார்ல் ஃபால்​கன்​பெர்​ஜர் வேறொரு விஷ​யத்​தை​யும் குறிப்​பிட்​டுள்​ளார்.​ அதா​வது,​​ "இந்த மாநாட்​டில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது பங்​குக்​குக் குறைக்​கப் போகும் பசு​மை​இல்ல வாயுக்​கள் அள​வு​க​ளில் சிறு மாறு​பா​டு​கள் இருந்​தா​லும் பர​வா​யில்லை.​ ஆனால் அவற்றை அந்​நா​டு​கள் சொன்​ன​படி செய்​கின்​ற​னவா என்று சரி​பார்க்க வேண்​டி​யது கட்​டா​ய​மா​கும்' என்று கூறி​யுள்​ளார்.​ சரி​பார்ப்​பது என்​ப​தன் வெளிப்​ப​டை​யான பொருள்-​ சொன்​ன​படி செய்​ய​வில்லை என்​றால் இந்த நிதியை நிறுத்​தி​வி​டு​வோம் என்ற மிரட்​டல்​தான்.​
வளி​மண்​ட​லத்​தில் பெரும்​ப​கு​தியை மாசு​ப​டுத்​திய நாடு​கள் வளர்ந்த நாடு​கள்​தான்.​ பல ஆண்​டு​க​ளாக இதைச் செய்​து​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைக் ​ கட்​டுப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் பல​வி​த​மாக முயல்​கின்​ற​னர்.​ 1990-ம் ஆண்டு முத​லாக மாசு​ப​டுத்தி வரும் இந்த வளர்ந்த நாடு​கள்,​​ தற்​போது தொழில்​நுட்​பத்​தின் உத​வி​யால் இந்த மாசு அள​வைக் குறைத்​துக் கொண்​டுள்​ள​தா​கக் கூறு​கின்​றன.​ கியோட்டோ தீர்​மா​னத்​தின்​படி மாசு​அ​ள​வைக் குறைப்​ப​தில் ஒவ்​வொரு நாடும் தங்​க​ளது மாசு அளவை 1990-ம் ஆண்​டின் அள​வுப்​படி நிர்​ண​யிக்க வேண்​டும் என்று குறிப்​பிட்​டி​ருந்​தா​லும்,​​ அமெ​ரிக்கா தனது அளவை 2005-ம் ஆண்டு அள​வின்​படி 17 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்​தத் தன்​னிச்​சை​யான அறி​விப்​பைத் தொடர்ந்து சீனா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 40 சத​வீ​தம் வரை ​(2005-ம் ஆண்டு அள​வுப்​படி)​ குறைத்​துக் கொள்​வ​தாக அறி​வித்​தது.​
இந்த இரு நாடு​க​ளை​யும் தொடர்ந்து இந்​தி​யா​வும் தனது பசுமை இல்ல வாயு வெளிப்​பாட்​டில் 20-25 சத​வீ​தம் ​(அமெ​ரிக்கா,​​  சீனா வழி​யில் 2005-ம் ஆண்டு அள​வின்​படி)​ படிப்​ப​டி​யா​கக் குறைத்​துக்​கொள்​வ​தாக அறி​வித்​துள்​ளது.​ இந்த அறி​விப்​பைச் செய்​த​வர் மத்​திய சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்.​ மாநாட்​டில் கலந்​து​கொண்டு பேசும்​முன்​பா​கவே இத்​த​கைய அறி​விப்பை அமைச்​சர் செய்​த​தற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து,​​ இந்த மாநாட்​டில் கலந்​து​கொள்​ள​வி​ருந்த குழு உறுப்​பி​னர்​கள் இரு​வர் தங்​கள் பய​ணத்தை ரத்து செய்​து​விட்​ட​னர்.​
இந்​தி​யத் தேவை​கள்,​​ இந்​தி​யா​வின் தொழில்​வ​ளர்ச்சி,​​ இங்​குள்ள தொழில்​நுட்​பம்,​​ மக்​கள்​தொகை அனைத்​தை​யும் கணக்​கில் கொண்டு மாநாட்​டில் பேச​வும்,​​ தனக்​கான அளவை நிர்​ண​யிக்​க​வும்,​​ வளர்ந்த நாடு​கள் வழங்​க​வுள்ள உத​வித்​தொ​கையை அதி​க​மா​கப் பெறு​வ​தும்​தான் இந்​தி​யா​வின் முழு நோக்​க​மாக இருக்க வேண்​டுமே தவிர,​​ அமெ​ரிக்கா,​​ சீனாவை அடி​யொட்டி இந்​தி​யா​வும் நடப்​பது சரி​யா​ன​தாக இருக்க முடி​யாது.​ ​
இந்​தி​யா​வுக்​குக் குரல் கொடுக்க வேண்​டிய அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்,​​ இம​ய​ம​லை​யில் பனிப்​பா​றை​கள் வேக​மாக உரு​கு​வ​தற்​கும் பரு​வ​நிலை மாறு​பாட்​டுக்​கும் தொடர்​பில்லை என்று பேசி,​​ பனிப்​பாறை வளர்​வ​தும்,​​ உரு​கித் தேய்​வ​தும் சுழற்சி அடிப்​ப​டை​யில் நடப்​பவை என்று விளக்​க​மும் கூறி​யி​ருக்​கி​றார்.​ இயற்கை ஆர்​வ​லர்​க​ளின் கோபத்​துக்கு ஆளா​கி​யி​ருக்​கி​றார்.​ நம் அமைச்​சர் இப்​ப​டி​யெல்​லாம் பேசு​வ​தைப் பார்த்​தால் நாம்,​​ வளர்ந்த நாடு​க​ளால் ஏமாற்​றப்​பட்​டு​வி​டு​வோமோ என்ற அச்​சம் ஏற்​ப​டு​கி​றது.​ இந்​தியா இரண்டு விஷ​யங்​க​ளில் மிகத் தெளி​வாக இருக்க வேண்​டும்.​
 முத​லா​வ​ தாக,​​ இந்​தி​யா​வின் பசு​மை​இல்ல வாயு வெளி​யேற்​றத்​தைச் சரி​பார்த்​தல் என்​கிற பெய​ரில் அன்​னி​யர்​கள் புகுந்து மேலாண்மை செய்​வதை ஒரு போதும் ஒப்​புக்​கொள்​ளக்​கூ​டாது.​ அதிக உத​வித்​தொகை,​​ சலுகை என்ற பெய​ரில் ஆசை​வார்த்தை காட்​டி​னா​லும் அதற்கு இந்​தியா உடன்​ப​டக்​கூ​டாது.​ அமெ​ரிக்​கா​விலோ அல்​லது சீனா​விலோ நாம் போய் சரி​பார்க்​கும் பணியை மேற்​கொண்​டால் அனு​ம​திப்​பார்​களா என்​பதை யோசிக்க வேண்​டும்.​
இரண்​டா​வ​தாக,​​ வளி​மண்​ட​லம் மாசு​பட்​டதை கணக்​கி​டும்​போது,​​ அந்​தந்த நாட்​டின் மக்​கள் தொகை​யை​யும் கணக்​கில் கொள்ள வேண்​டும்.​ ஏற்​கெ​னவே சொர்க்​க​போ​கத்​தில் இருக்​கும் குறைந்​த​பட்ச அமெ​ரிக்​கர்​க​ளுக்​காக,​​ மக்​கள் தொகை அதி​கம் கொண்ட இந்​தி​யா​வில் 100 கோடி இந்​தி​ய​ரும் தங்​கள் செüக​ரி​யங்​க​ளைத் தியா​கம் செய்ய வேண்​டும் என்று வற்​பு​றுத்​து​வது நியா​ய​மற்​றது.​ இந்​தி​யா​வில் நதி​கள் மாசு​பட்​ட​தற்​கும்,​​ வளி மாசு​பட்​ட​தற்​கும் கார​ணம்,​​ அதி​கப் பணம் கிடைக்​கி​றது என்​ப​தால் வளர்ந்த நாடு​க​ளுக்கு ஏற்​று​மதி செய்​வ​தற்​காக மேற்​கொண்ட தொழில்​க​ளால் ஏற்​பட்​ட​வை​தான்.​ வளர்ந்த நாடு​க​ளுக்​குத் தேவை​யான,​​ ஆனால் ​ அந்​நாட்டு இயற்​கைக்​குப் பாத​க​மான தொழில்​கள் அனைத்​தை​யும் வள​ரும் நாடு​க​ளுக்​குத் தள்​ளி​விட்டு,​​ இப்​போது வள​ரும் நாடு​க​ளைப் பல​வந்​தப்​ப​டுத்​து​கின்​ற​னர்.​ இதைப் புரிந்​து​கொண்டு செயல்​பட வேண்​டும்.​
அமெ​ரிக்​கா​வி​டம் நல்ல பெயர் கிடைக்​கும் என்​ப​தற்​காக அவர்​கள் மனம்​நோ​காத படி நடப்​ப​தால் இந்​தி​யர்​க​ளுக்கு எந்​த​வித நன்​மை​யும் கிடைக்​காது.​ இன்​னும் ஒரு வாரம் இருக்​கி​றது.​ தெளி​வா​க​வும்,​​ முன்​யோ​ச​னை​யு​டன்,​​ எச்​ச​ரிக்​கை​யு​டன் செயல்​ப​டு​வது அவ​சி​யம்.


நன்றி: www.dinamani.com - 14 Dec 2009 


Thursday, December 10, 2009

சுற்றுச்சூழல் பாதிப்பு,​பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல்: 100 கோடி மக்கள் இடம்​பெயரும் அபாயம்

கோபன்​ஹே​கன்,​​ டிச.9:​  பரு​வ​நிலை மாறு​பாடு மற்​றும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் வரும் காலங்​க​ளில் மனித சமு​தா​யம் பெரும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தாக ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​ இத​னால் தென்​கி​ழக்கு ஆசியா,​​ மத்​திய அமெ​ரிக்கா,​​ மேற்கு ஆப்​பி​ரிக்​கா​வின் ஒரு பகுதி ஆகிய பகு​தி​க​ளில் வாழும் மக்​கள்​தான் கடும் பாதிப்​புக்​குள்​ளாக உள்​ள​தா​க​வும் புலம்​பெ​யர்ந்த மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்பு நடத்​திய ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​

பரு​வ​நிலை மாறு​பாடு,​​ சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பால் இந்த பகு​தி​க​ளில் இருந்து அடுத்த 40 ஆண்​டு​க​ளில் 100 கோடி மக்​கள் இடம்​பெ​யர்வு மற்​றும் புலம்​பெ​ய​ர​லாம்.​ கடந்த 20 ஆண்​டு​க​ளாக இயற்கை பேர​ழி​வு​கள் இரு​ம​டங்கு அதி​க​ரித்​துள்​ளன.​ சமீ​ப​கா​ல​மாக பூகம்​பம்,​​ வறட்சி,​​ வெள்​ளம் ஆகி​யவை மனித சமு​தா​யத்​துக்கே பெரும் சவா​லாக உரு​வெ​டுத்​துள்​ளன.​   மனி​தன் உயிர்​வாழ்​வ​தற்கு அவ​சி​ய​மான காற்று,​​ நீர்,​​ நிலம் ஆகிய சீர்​கே​டும் அதி​க​ரித்து வரு​கி​றது.​ அதே​போல,​​ இந்த நூற்​றாண்​டின் இறு​திக்​குள் புவி​யின் வெப்​ப​நி​லை​யும் 2 டிகிரி சென்​டி​கி​ரேட் முதல் 5 டிகிரி சென்​டி​கி​ரேட் வரை அதி​க​ரிக்க வாய்ப்​புள்​ளது.​

இது​போன்ற கார​ணங்​க​ளால் மனித சமு​தா​யம் அதிக இன்​னல்​களை சந்​திக்க வேண்​டி​யுள்​ளது.​ பசுமை இல்ல வாயுக்​க​ளால் ஏற்​ப​டும் பரு​வ​நிலை மாறு​பாட்​டால் கடல் மட்​டம் உயர்ந்து வரு​கி​றது.​ இது கட​லுக்கு மத்​தி​யில் அமைந்​துள்ள நாடு​க​ளுக்கு அச்​சு​றுத்​த​லாக உள்​ளது.​ கடல் மட்​டம் தொடர்ந்து உய​ரு​மா​னால் கட​லுக்கு மத்​தி​யில் உள்ள நாடு​கள் மூழ்​கிப்​போ​கும் அபா​ய​மும் உள்​ளது.​

இத​னால் இது​போன்ற நாடு​க​ளில் வசிக்​கும் மக்​கள் தற்​போதே எதிர்​கால அபா​யத்தை நினைத்து பிற நாடு​க​ளுக்கு புலம்​பெ​யர ஆரம்​பித்​து​விட்​ட​னர்.​ எங்​கெல்​லாம் சுற்​றுச்​சூ​ழல் அதி​க​ரித்​துள்​ளதோ அந்​நாட்​டைச் சேர்ந்த மக்​கள் அரு​கில் உள்ள நாடு​க​ளுக்கு புலம்​பெ​ய​ரத் தொடங்​கி​யுள்​ள​னர்.​

சில நாடு​க​ளில் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​மிக்க பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​கள் பாதிப்​பில்​லாத பகுதி நோக்கி இடம்​பெ​யர்​கின்​ற​னர்.​ இத​னால் ஓரி​டத்​தி​லேயே அதிக மக்​கள் குவி​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.​ இது மேலும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​புக்கு வழி ஏற்​ப​டுத்​து​கி​றது.​ அது​மட்​டு​மல்​லா​மல் ஓரி​டத்​தில் இருந்து மற்​றொரு இடத்​துக்கு மக்​கள் இடம்​பெ​ய​ரும் போது சில நேரங்​க​ளில் மக்​க​ளி​டையே மோத​லும் தவிர்க்க முடி​யா​த​தாகி விடு​கி​றது.​

  இது எதிர்​கா​லத்​தில் பெரிய பிரச்​னை​யாக உரு​வெ​டுக்க வாய்ப்​புள்​ள​தா​க​வும் புலம்​பெ​ய​ரும் மக்​க​ளுக்​கான சர்​வ​தேச அமைப்​பின் ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​


நன்றி: www.dinamani.com - 10 Dec 2009

Wednesday, December 9, 2009

கூவம் நதி​யா​கி​றது...

சென் ​னைப் பெரு​ந​க​ரின் அகண்ட சாக்​க​டை​க​ளாக உள்ள கூவம் ஆறு, அடை​யாறு,​ பக்​கிங்​காம் கால்​வாய் மூன்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்தி,​ சிங்​கா​ரச் சென்​னையை உரு​வாக்​கு​வ​தற்​காக சென்னை நதி​கள் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு,​ அதன் தலை​வர் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார் துணை முதல்​வர் மு.க. ஸ்டா​லின்.​ ​ 1967-ல் முதன்​மு​த​லா​கத் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்சி அமைத்​த​போதே,​ கூவத்​தில் பட​கு​வி​டும் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் அன்று பொதுப்​ப​ணித்​துறை அமைச்​ச​ராக இருந்த இன்​றைய முதல்​வர் மு. கரு​ணா​நிதி. அதற்​கா​கக் கட்​டப்​பட்ட பட​குத்​து​றை​க​ளின் சிதைந்த மிச்​சங்​களை இப்​போ​தும் சில இடங்​க​ளில் காண முடி​கி​றது. அப்​போது அவ​ரால் அத்​திட்​டத்தை செய்​து​மு​டிக்க முடி​ய​வில்லை. "மகன் தந்​தைக்​காற்​றும் உதவி' அவர் தொடங்​கிய பணியை நிறைவு செய்​வ​து​தான்.​ ​ இந்த ஆணை​யம் எத்​த​கைய பணி​களை முத​லில் செய்​யப்​போ​கி​றது;​ இதற்​கான மதிப்​பீடு என்ன,​ இச்​செ​ல​வுக்​கான நிதியை எங்​கி​ருந்து பெறப்​போ​கி​றார்​கள் என்ற விவ​ரங்​கள் விரை​வில் இது​பற்​றிய அறி​விப்​பு​க​ளாக வெளி​யா​கும். முத​லில் கூவத்​தைத்​தான் எடுத்​துக்​கொள்ள இருக்​கின்​ற​னர்.​ ​ கூவம் மிக​மிக மோச​மாக மாச​டைந்து,​ கழி​வு​கள் நக​ர​வும் முடி​யா​த​படி தேங்​கிக் கிடக்​கி​றது. கூவத்​தில் உள்ள தண்​ணீரை எடுத்து,​ தெளி​ய​வைத்து,​ வடி​கட்​டிய நீரில் மீன்​களை விட்​டால்,​ 4 மணி நேரத்​தில் மீன்​கள் செத்​து​வி​டு​கின்​றன என்​ப​து​தான் கூவம் குறித்து ஆய்​வு​மு​டி​வு​கள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்​ஸி​ஜன் இல்லை. வெறும் நச்சு உலோ​கக் கலப்​பும்,​ சேறும் சக​தி​யும்​தான் உள்​ளன. அடை​யா​றும் அந்​த​வி​த​மா​கவே படு​மோ​ச​மாக மாச​டைந்து கிடக்​கி​றது. மணப்​பாக்​கம் தடுப்​பணை வரை அடை​யாறு கொஞ்​சம் தூய்​மை​யாக இருந்​தா​லும்,​ சென்னை பெரு​ந​க​ரத்​தில் நுழைந்​த​வு​டன் அதன் மேனி​யில் வெறும் குப்​பை​க​ளும் நச்​சுக் கழி​வு​க​ளும்​தான் கொட்​டப்​ப​டு​கின்​றன. "அடை​யாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்​தது,​ இப்​போ​தும் இருக்​கி​றது ​ என்​பதே நம்ப முடி​யாத விஷ​ய​மாக ஆகி​விட்​டது.​ ​ அடை​யாறு,​ கூவம்,​ பக்​கிங்​காம் கால்​வாய் ஆகி​ய​வற்​றில் 1950 களில் இருந்த நிலை உரு​வா​க​வும்,​ பட​கு​கள் ஓட​வும்,​ நீர்​வாழ் உயி​ரி​னங்​கள் அவற்​றில் காணப்​ப​டும் சூழல் மீண்​டும் வர​வேண்​டும். இது முக்​கி​ய​மான பணி என்​ப​தி​லும்,​ இதை எப்​பாடு பட்​டா​கி​லும் செய்​தாக வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்​து​கள் இருக்க முடி​யாது. இருப்​பி​னும்,​ இத்​திட்​டம் வெற்றி பெற வேண்​டு​மா​னால்,​ இது தேர்​தல் கால அர​சி​யல் பிர​சா​ர​மாக மாறு​வ​தைத் தவிர்க்க வேண்​டும். இப்​ப​டிச் சொல்​லக் கார​ணம் இருக்​கி​றது. ​சென்​னை​யின் நதி​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணிக்கு குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தேவை. இதற்​குள் 3 சட்​டப்​பே​ரவை தேர்​தல்​க​ளை​யும் 2 உள்​ளாட்​சித் தேர்​தல்​க​ளை​யும் சென்னை சந்​திக்க நேர​லாம். இத்​திட்​டம் அர​சி​யல் கட்​சி​யின் சாத​னை​யாக முன்​வைக்​கப்​ப​டு​மா​னால்,​ இத்​திட்​டத்தை எதிர்க்​கட்​சி​கள் குறை​கூ​றும்,​ விமர்​சிக்​கும் என்​ப​தோடு,​ ஆட்சி மாற்​றம் ஏற்​ப​டு​மே​யா​னால்,​ இத்​திட்​டத்தை முற்​றி​லு​மா​கப் புறக்​க​ணிப்​பார்​கள்,​ கிடப்​பில் போடு​வார்​கள். இத​னால் மக்​க​ளுக்​கும் இழப்பு,​ சென்னை நக​ருக்​கும் இழப்பு.சிங்​கப்​பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்​தான். இந்த நதி கூவம் போல மிக​மிக மோச​மா​காத நிலை​யி​லேயே,​ 1977-ம் ஆண்​டில்,​ "சிங்​கப்​பூர் நதி மற்​றும் கலாங் கழி​மு​கத் தூய்​மைத் திட்​டம்' தொடங்​கப்​பட்டு 10 ஆண்டு கால அவ​கா​சத்​தில் முடிக்​கத் திட்​ட​மி​டப்​பட்டு,​ அதன்​படி சிறப்​பா​கச் செய்து முடிக்​கப்​பட்​ட​தன் முழு​மு​தற் கார​ணம்-​ அது அர​சி​யல் வெற்​றி​யாக ஆக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான். சிங்​கப்​பூர் நதி​யின் கரை​யி​லும் கழி​மு​கப் பகு​தி​யி​லும் குடி​யி​ருந்த 26,000 ஏழைக் குடும்​பங்​கள் பார​பட்​ச​மின்றி ஊருக்கு வெளியே குடி​ய​மர்த்​தப்​பட்​ட​னர். 2,800 குடி​சைத்​தொ​ழில் மற்​றும் சிறு​தொ​ழில்​கூ​டங்​க​ளும் ஊருக்கு வெளியே அனுப்​பப்​பட்​டன. நடை​பாதை வணி​கர்​கள்,​ தெரு​வோர உண​வ​கங்​கள் எல்​லா​மும் கழி​வு​நீர் போக்​கி​கள் கொண்ட தனி​யி​டங்​க​ளுக்கு மாற்​றப்​பட்​டன. பிளாஸ்​டிக் பொருள் போன்ற திடக்​க​ழி​வு​கள் சிங்​கப்​பூர் நதி​யில் கலக்​கா​த​படி சிறப்​புத் தடுப்பு அமைப்​பு​கள் கரை​யோ​ரங்​க​ளில் ஏற்​ப​டுத்​தப்​பட்​டன. இதற்​கான திட்​டச் செலவு 20 கோடி டாலர்​கள்.​ ​ கூவத்தை அதன் உற்​பத்தி இடத்தி​லி​ருந்து கழி​மு​கம் வரை சுமார் 65 கி.மீ. தொலை​வுக்​குத் தூய்​மைப்​ப​டுத்​த​வும்,​ அடை​யாறு ​(சுமார் 48 கி.மீ.), பக்​கிங்​காம் கால்​வாய் எல்​லா​வற்​றி​லும் உள்ள ஆக்​கி​ர​மிப்​பை​யும் குடி​சைப் பகு​தி​க​ளை​யும் நீக்க வேண்​டு​மா​னால் மிகக் குறைந்​த​பட்​சம் ஒரு லட்​சம் குடி​சை​களை அகற்றி,​ புற​ந​கர்ப் பகு​தி​யில் மாற்​றி​டம் தந்​தாக வேண்​டும். பல்​வேறு ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட வேண்​டும். தொழில்​நி​று​வ​னம் மற்​றும் மருத்​து​வ​ம​னைக் கழி​வு​கள் இதில் கலப்​ப​தைத் தடுக்க வேண்​டும். இத்​த​னை​யும் செய்ய வேண்​டு​மா​னால்,​ அர​சி​யல் சாய்வு இல்​லாத அர​சின் உறு​திப்​பாடு தேவை. வாக்கு வங்​கி​கள் பற்​றிய எந்த நினைப்​பும் இல்​லா​மல்,​ கட​மை​யைச் செய்​யும் உணர்வு மட்​டுமே இருந்​தால்​தான் இத்​திட்​டம் வெற்றி அடை​யும்.​ ​ மேலும்,​ தமி​ழ​கத்​தின் தலை​ந​க​ர​மா​கிய சென்னை பெரு​ந​க​ரின் நதி​க​ளுக்கு மட்​டும் ஆணை​யம் அமைத்​தி​ருப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஏன் தமி​ழக நதி​கள் ஆணை​யம் என ​ அமைக்​க​வில்லை என்​பது சற்று வருத்​தம் தரு​கி​றது. தமி​ழ​கத்​தின் நதி​கள் அனைத்​துமே ஏறக்​கு​றைய கூவம்,​ அடை​யாறு போல தூய்மை கெட்​டுப்​போய் கிடக்​கின்​றன. மணல்​கொள்​ளை​யா​லும் தொழில்​து​றைக் கழி​வு​க​ளா​லும் மேனி மெலிந்து,​ நோயுற்​றுக் கிடக்​கின்​றன. இவற்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்​து​வது தமி​ழக அர​சின் பணி​தானே?​​ ​ வாஷிங்​ட​னுக்கு ஒரு பொட்​டோ​மேக். லண்​ட​னுக்கு ஒரு தேம்ஸ். பாரீ​சுக்கு ​ ஒரு ரைன். சென்​னைக்கு ஒரு கூவம் என்​கிற நிலை ஏற்​பட வேண்​டும் என்​பது முதல்​வர் கரு​ணா​நி​தி​யு​டைய கனவு மட்​டு​மல்ல. ஒவ்​வொரு சென்​னை​வா​சி​யின் கன​வும்​கூட. நல்​ல​தொரு முயற்சி துணை முதல்​வர் தலை​மை​யில் செயல்​ப​டத் தயா​ரா​கி​றது. இந்த ஆக்​க​பூர்​வ​மான திட்​டம் அர​சி​ய​லாக்​கப்​ப​டக் கூடாது!

Thanks to : www.dinamani.com - 07 Dec 2009

Monday, November 30, 2009

மரணத்தின் 'ஓலகிரி' ஆகாமல் நீலகிரி மாற வழி



அதீத ஆபத்தையும், இழப்பையும் உண்டாக்கியுள்ள, உண்டாக்கி வரும் நிலச்சரிவுகள் எப்படி ஏற்படுகின்றன? என்ற கேள்விக்கு பல விதமான உணர்ச்சிகரமான விடைகள் மிகுந்த ஆத்திரத் துடன் நமக்குக் கிடைத்தாலும், விஞ்ஞானப் பூர்வமான, உணர்வுப் பூர்வமான விடை என்ன? என்பதையும் நாம் அவசியம் பார்க்க வேண்டும்.
பொதுவாக எந்த மலைப் பிரதேசத்திலும், மலைப் பகுதி யின் பரந்த மையப் பகுதிகளில் சரிவு நிகழ்வதே கிடையாது. அதே சமயம் மலையின் சரிவுப் பகுதிகளில் தான் இது அதிகம் நிகழ்கிறது. இதற் கான காரணங்கள் தான் என்னென்ன?முதலாவதாக மலைகளில் மட்டுமே இந்தச் சரிவுகள் நிகழ்வதிலிருந்து நமக்கு ஒரு உண்மை புலப்படும். அதாவது பாறைகளால் உருவாகியுள்ள மலைப் பகுதிகளின் மேல், குறிப்பிட்ட உயரத்தில், ஒரு அடி முதல் 20, 40 அடிகள் வரை என்று மண் மேவியுள்ளது. இது பல நூறு வருடங்களாக இறுகிப் படிந்துள்ளது.இந்நிலையில் மழைக் காலம் துவங்கி மழை விட்டு விட்டோ, தொடர்ந்தோ பெய் யும் போது மழை நீர் உட் புகுந்து, உட்புகுந்து மண் பகுதியை ஆக்கிரமிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு தான் மிக முக்கிய நிகழ்வு.இந்த மழைநீர் சிறிது ஆழம் சென்ற பிறகு தொடர் மழை இல்லை என்றால் மீண்டும் அந்த மண் பகுதி காய்ந்து இயல்பு நிலைக்கு வந்துவிடும்.பிறகு சிறிது காலம் கழித்து மழை என்றாலும் கவலை இல்லை.

அப்படி இல்லாமல் தொடர் மழை அதுவும் கனமழை அதுவும், வெயிலே காணாத நிலை என்றால் நிச்சயம் நிலச்சரிவுக்குக் கொண் டாட்டம் தான். எப்படி?15 முதல் 20 அடி உயரத்திலான மண்பகுதிக்குள் மழை நீர் அந்த இடத்தின் மூலமோ பக்கத்து இடங்களின் மூலமோ அடைந்து இந்த அளவு மண் முழுவதுமே ஈரமாக்கப்படும் போது முற்றிலும் இதன் அடிப்பகுதியில் தாங்கும் பாறையின் தொடர்பை இழந்து விடுகிறது. உடனடியாக மரம், செடி, வீடுகளுடன் சரிவை அடைகிறது. இது தவிர்க்க இயலாத ஒன்று.காரணம் மரம், செடி, வளர்க்கும் போதோ, வீடுகள் கட்டும் போதோ அந்த இடத்தின் மண் ஆதிக்க உயரம் என்ன என்பதை யாரும் அறிய முற்படுவதே இல்லை.அவசரம், மேலும் அறியாமை, குருட்டு நம்பிக்கை இதற்கான காரணங்கள். ஆக மழை தொடர்ந்து தாக்கும் போது ஈரமான முழுப் பகுதியும் பாறைகளுடனான தொடர்பை இழந்துவிடுகிறது. சரிகிறது.


நிலைமை இப்படி இருக்க, தற்போதைய சரிவுகளின் தீவிரத்திற்கான மற்ற காரணங் களோ மிக மிக பயமூட்டுவதும், சிந்திக்க வைப்பதுமானது. அது என்ன?அதுதான் 2004க்குப் பிறகான, அதாவது சுனாமி தாக்குதலுக்குப் பிறகான புவிநிலை. அப்போது கடலுக்கடியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப் பும் அதனால் வெளியான 1400 கி.மீ., நீள 200 கி.மீ., அகல 5000 அடி உயர தீவு வடிவான லாவா, கேம்மா, வெளிப்பட் டால் உருவான கடலடித் தீவின் போது தென் ஆசியப் பகுதி முழுவதும் ஏற்பட்ட நிலத்தடி அதிர்வு மறுக்க முடியாத மாபெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது என்பது உண்மையே.கடந்த பல மாதங்கள் முன், கூட இதே நீலகிரி பகுதியில் வெப்ப வாயும், புகையும், சத்தமும் கூடிய வெடிப்பு ஏற்பட்டு பலமுறை கிலி உண்டாக்கியது நினைவுக்கு வரலாம்.


இதே போல் பல இடங்களிலும் கூட, இன்றைய தேதி வரையிலும் கூடத் தொடரும் நிலநடுக்கம் என்ற செயலால் பூமியின் மேற்பரப்பு முழுவதுமே நடுக்கத்துக்கும் சிறு சிறு அசைவுக்கும் ஆட்பட்டே வருகிறது என்பதே உண்மை. இவ்வகை நடுக்கம் என்பது பாறை மீது படிந்திருக்கும் மண்பகுதியை தளர்த்தவும், மழை நீர் உட்புக எளிமைப் படுத்தவும் உதவுகிறது என்பதும் பேருண்மை.


ஆக இவற்றுடன் மலைப் பகுதிகளில் முக்கியமாக பாறைகளுக்கு வெடி வைத் தல், மழை நேரங்களில் அதிக பாரத்துடனான வாகன ஓட்டம், கட்டுமானப் பொருட் களுடனான சவாரி என்பவையும் சரிவுக்கு சலாம் போடுகின்றன.அதிர்வால் ஏற்பட்ட பாறைச் சரிவை நீக்க மீண்டும் வெடிகளையே வெடிக்கின்றனர் என்பது வேடிக்கை தான்.இந்நிலையில் மழைச் சரிவுகளில் மரங்கள் வளர்ப்பது என்பது நல்லது என்ற கூற்றை விட உயரம் குறைந்த பயிர் களை வளர்ப்பதே சாலச்சிறந் தது.ஏனென்றால் மழைக்காலங் களில் மிகவும் ஆபத்தைச் சந்திக்கப் போகும் சரிவுப் பகுதிகளில் மழை நீருடன் கனமான மரங்களும் சேரும்போது மண்பகுதி அடியோடு, மிகுந்த, பாதிப்போடு, வேகத் தோடு சரியும் என்பதுடன் இதன் விழும் தொலைவும் கூடும் என்பதே நிஜம். அங்கும் புதியசரிவை கனமான பெரிய மரங்கள் உண்டாக்கும்.


தீர்வுகள் தான் என்ன?மலைப்பகுதிகளின் சரிவுப் பகுதிகளில் மழைநீர் நிற்கும் நேரத்தையும் மிகவும் குறைப்பது. அதற்கான சரியான வடிகால் பகுதிகளை அமைப்பது. இதன் மூலம் குறுகிய அளவிலான ஆழத்தை நீர் அடையும் போதே, நிலம் காக்கப்படும்.குறிப்பாக மழைப்பாதைகளின் மேற்புறங்களில் கசிவுநீர் செங்குத்தாக விழாமல் பக்கவாட்டுப்பகுதிகளில் கடத்தி விழ வைப்பது.எந்த வகையிலும் மழைநீரை அதிகம் உட்புறம் எடுத்துச் செல்லும் படியான வகையிலும், ஈரத்தை நிறுத்தி வைக்கும் வகையிலும் இல்லாமல் இருக்க மரம், தாவரம் சாலைச் சரிவுகளில் வளர்ப்பதை தடுப்பது. பாறை மீது மண் இல்லாத நிலை ஏற்படும் வரை சரிவும் நீடிக்கும். அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. கட்டுப்பாடு தேவை ரயில் பாதையை தடை செய்து விஞ்ச் அமைப்பது. தனித்த பாறைகளை அகற்றுவது. சாலைகளை அதிக கனத்துடன் அமைக்காதிருப்பது. மினி பஸ் விடுவது.


மழை சீசன்களில் வாகனத்தைக் குறைப்பது. இடிதாங்கிகளை அமைப்பது, 50 சதுர கி.மீ., கட்டடப்பகுதி என்றால் பெரும்பாலான பகுதி கட்டட அடியில் ஈரத்தை தொடர்ந்து காத்து வருவது ஆபத்தை உண்டாக்கிறது. இதன் மூலம் அதிக வெயிலில் மண் இறுகி மீண்டும் கூடுதல் பலம் பெறும் வாய்ப்பு தடையாகிறது. அடைமழையின் போது மண்ணின் தளர்வு நிலை தடுக்கப்பட வேண்டும். எனவே கட்டுமானத்துக்குத் தடை அவசியம். மலைப்பகுதிகளில் வெடி வெடிப்பதை தடுப்பதன் மூலம் காய்ந்த மண் பகுதியின் இறுக்கம் பாதுகாக்கப்படும். இல்லையேல் தளர்ந்து விடும்.இப்பகுதிகளில் கட்டடம் கட்டும் முன்பாக கட்டடத் திற்கான மொத்தப்பரப்பின் அடித்தளத்திற்காக மண் ஆழத்தையுமே பார்ப்பது என்பது இயலாத காரியம் எனவே சாய்வுப் பகுதிகளை கட்டடம் கட்டும் பகுதியாக அனுமதிக்காமல் இருப்பது.


டன் பாறையை உடைத்தும், அடித்தளமிடல் வேண்டும். தொடர்ந்து வந்த பாதிப்புகளால் சுற்றுலா பயணிகளின் வரவு மிக குறையும் போது பேராசையால் முதலீடு செய்த பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து நட்டமும், ஈ ஓட்டும் நிலையும் தான் ஏற்படும்.முதலீடு விரையமாகும். பெரிய கட்டடங்களின் முதலீட்டுக்கும், பாதுகாப்புக்கும் உறுதியே கூற முடியாது.உறுதியான கட்டடங்களுக்கும், மரங்களுக்கும், மேலிருந்து சரியும் கட்டடம் மற்றும் மரங்கள் இழப்பை ஏற்படுத்துகின்றன.ஓட்டல் பிற தங்குமிட கழிவு நீர் வடிகாலை கசியாத குழாய் மூலம் தூரத்தில் வெளியேற்றுவது அவசியம்.இனி, சிந்தித்து செயல்படுவதின் மூலமே நீலகிரி, "மரணத்தின் ஓலகிரி' ஆகாமல் தடுக்கப்படும்.
- எ.ஆர்.நாகராஜன்,
வானியல், புவியியல்
ஆய்வாளர்.

நன்றி : http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5788 - 30.11.2009


Tuesday, November 24, 2009

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தபால் துறையின் இருப்பிடச் சான்று போதும்

சென்னை, நவ. 23:  ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக, உணவுத் துறை புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி, முகவரிச் சான்றுக்கு அடையாளமாக தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்றைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இருப்பிடச் சான்று வழங்கும் திட்டத்தை தபால் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
  விண்ணப்பத்துடன் ரூ. 250 கட்டணம் செலுத்தினால், தீவிர விசாரணை மற்றும் நேரடி களஆய்வுக்குப் பிறகு நாம் வசிக்கும் முகவரிக்கான சான்று அட்டை வழங்கப்படும்.
  ரேஷன் கார்டுக்கு...  ரேஷன் கார்டு பெறுவதற்கு இந்த இருப்பிடச் சான்றை ஆதாரமாகக் காட்டலாமா? என்ற கருத்து உணவுத் துறையில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
  இந்த நிலையில், தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அட்டையை, ரேஷன் கார்டு பெறுவதற்கான முகவரி ஆதார ஆவணங்களில் ஒன்றாகப் பயன்படுத்தலாம் என உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
  தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அட்டைக்கு விண்ணப்பிக்க நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் சென்றால் போதுமானது.
  வேறு என்னென்ன...  இருப்பிடச் சான்றுக்கு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை, சொந்த வீடாக இருப்பின் அதன் சொத்து வரி ரசீது, மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, தொலைபேசி கட்டணம் செலுத்திய ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்கம், குடிசை மாற்று வாரியம் என்றால் அதன் ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களில் இப்போது தபால் துறை வழங்கும் இருப்பிடச் சான்று அடையாள அட்டையும் இணைந்துள்ளது.
  இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ""இருப்பிடச் சான்று இருந்தாலும், பழைய கார்டில் பெயர் நீக்கத்துக்கான சான்று அவசியமாகும். அது இல்லாமல் இருப்பிடச் சான்றை மட்டும் காட்டினால் ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பம் நீக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.


நன்றி : www.dinamani.com - 24 Nov 2009


முதல்​மு​றை​யாக இரவு நேரத்​தில் அக்னி-​2 சோதனை

பல​சூர்,​ நவ. 23: அணு ஆயு​தங்​களை ஏந்​திச் செல்​லும் திற​னு​டன் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்ள அக்னி-​2 ஏவு​க​ணைச் சோதனை முதல் முறை​யாக இரவு நேரத்​தில் திங்​கள்​கி​ழமை நடத்​தப்​பட்​டது.

   ஒ​ரி​சா​வில் பல​சூ​ரில் உள்ள ஏவு​க​ணைத் தளத்​தில் இருந்து திங்​கள்​கி​ழமை இரவு 7.50 மணிக்கு இந்த சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.
   இது குறித்து மத்​திய பாது​காப்பு மற்​றும் மேம்​பாட்டு கழக ​(டிஆர்​டிஓ)​ வட்​டா​ரங்​கள் கூறி​ய​தா​வது:​
    20 மீ. நீள​மும்,​ 17 டன் எடை​யும் கொண்ட இந்த ஏவு​கணை 2 ஆயி​ரம் கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் வகை​யில் உள்​நாட்​டி​லேயே வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு டன் எடை​யுள்ள வெடி​பொ​ருள்​க​ளைத் தாங்​கிச் செல்​லும் திறன் உடை​யது.
    இந்த ஏவு​கணை ஏற்​கெ​னவே ராணு​வத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. அக்னி-​2 ஏவு​க​ணையை முழு​மை​யாக செயல்​ப​டுத்​து​வ​தற்​கான வழி​மு​றை​யில் இந்த சோதனை முக்​கி​ய​மான நிகழ்​வா​கும்.
   சோ​தனை வெற்​றி​க​ர​மாக நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது. இதன் செயல்​பா​டு​கள் குறித்த மற்ற விவ​ரங்​கள் ஆரா​யப்​பட்டு வரு​கின்​றன என டிஆர்​டிஓ வட்​டா​ரங்​கள் தெரி​வித்​தன.
   இ​தற்கு முன்​ன​தாக,​ 700 கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் அக்னி-​1 ஏவு​க​ணை​யும்,​ 3,500 கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் அக்னி-​3 ஏவு​க​ணை​யும் சோதனை செய்​யப்​பட்​டுள்​ளன.


நன்றி : http://dinamani.com - 24.11.2009