I LOVE TAMIL


Thursday, August 30, 2018

Activity

அனைவரும் பின்பற்ற வேண்டிய
நாகரிகங்கள் படித்ததில் பிடித்தது:-

1.#அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் ..பண்ண நினைக்காதீர் ...

2.#முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்..

3.#கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்தவரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள்...

4.#பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டுவிடுஙகள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்விகேக்காதீர்கள்...

5.#பெருமைக்கு எருமை மெய்க்காதீர் ...

6.#ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல், தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள்....
வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

7.#பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா? என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள்.
த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை சீட்டில் வைக்காதீர்கள். ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.

8.#நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள்.
(இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !).
அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள்.
அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

9.#கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

10.#ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

11.#ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ  , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள். அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்...

12.#பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள். கேமராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்...

13.#பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.

14.#பஸ்ஸிலும்,ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் எற வேண்டும்.

15.#பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள். டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

16.#நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின்  personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

17.#சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?).
அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !

18.#ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

19.#ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.

20.#நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு ,எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.

21.#முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' (வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.)

22.#நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

23.#யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.

24.#வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

25.#உங்களை விட வயதில் சிறியவர்களிடம்  உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.

26.#வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்கள் பாத்ரூம் சென்ற பிறகு  தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

27.#புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.

28.#உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். allow them freedom ! அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் . 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.

29.#ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

30.#பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி  உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

31.#ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.

32.#உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.

33.#ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

34.#வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.

35.#ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

36.#கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள்.

37.#பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

38.#ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!

39.#டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

40.#Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.

41.#மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!

42.#ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த  போட்டோவை மட்டும் பாருங்கள்.

43.#அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.

44.#முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அல்லது அழைப்பு விடுக்காதீர்கள்

#குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத் தாதீர்கள்.

WhatsApp
28.Aug.2018

Wednesday, August 15, 2018

Simple money habits that will help you build wealth


vikatan.com

Simple money habits that will help you build wealth | ஆட்டோமேஷன் டு முதலீடு... பணக்காரராக மாற்ற உதவும் 10 பழக்கங்கள்! | Tamil News
7-8 minutes

வேலையோ, சொந்தத் தொழிலோ அல்லது பிசினஸோ எந்த வகையில் பணம் ஈட்டினாலும், அதைப் பல மடங்காகப் பெருக சில புத்திசாலித்தனமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றினாலே போதும், செல்வத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள். உண்மையில் சொல்லப்போனால் பழக்க வழக்கங்கள்தாம் செல்வம், வறுமை, மகிழ்ச்சி, சோகம், மன அழுத்தம், ஆரோக்கியம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான நல்லுறவு மற்றும் பகை போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.
முதலீடு

Sponsored

அப்படிப் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் 10 பழக்க வழக்கங்கள் இங்கே...

Sponsored

1) உங்களது சேமிப்பு, மாதாந்திரக் கட்டணங்களை ஆட்டோமேஷன் ஆக்குங்கள்

Sponsored

உங்களது எஸ்ஐபி முறையிலான மியூச்சுவல் ஃபண்டு முதலீடு, வங்கி சேமிப்பு, திருமணம், பிள்ளைகளின் படிப்பு, இன்ஷூரன்ஸ் போன்ற எந்த வகையிலான சேமிப்பு, முதலீடுகளுக்கு உங்களது வங்கிக் கணக்கிலிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட தொகை, ( ECS போன்று) குறிப்பிட்ட கணக்குக்குத் தானாகவே பணம் செல்லுமாறு ஆட்டோமேஷன் செய்து விடுங்கள். இதுவரை அப்படிச் செய்யாமல் இருந்தால் கண்டிப்பாக அதைச் செய்து விடுங்கள்.

மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில், அவ்வாறு பணப் பிடித்தம் செய்யும்போது உங்களுக்கும் அந்த முதலீடு அல்லது சேமிப்பு மீது அக்கறை இருக்கும். தாமதத்துக்காக வங்கியில் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவேனும் போதுமான பணத்தை உங்கள் கணக்கில் விட்டு வைக்கும் பழக்கம் வந்துவிடும். மேலும் இதனால் உங்களுக்கு நேரமும் மிச்சமாகும்.

2) டீ, சிகரெட் போன்ற சில்லறைச் செலவுகளில் கவனம்

அலுவலகம் வந்த பின்னர் வெளியே தேநீர் கடைகளுக்குச் சென்று தேநீர் அருந்துவதாக இருந்தால், நாளொன்றுக்கு 2 அல்லது அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதுவுமே வேலைப் பளு அல்லது வேலையால் ஏற்படுகிற சலிப்பு போன்றவற்றிலிருந்து `ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காக மட்டும்' என்ற அளவிலேயே இருக்கட்டும் ( அறவே இப்பழக்கம் இல்லாமல் இருந்தால் அது இன்னமும் உத்தமம்). அதிக முறை தேநீர் அருந்தும் மற்றும் சிகரெட் புகைக்கும் பழக்கம் உங்களது பணத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைத்துவிடும். நாளொன்றுக்கு, கூடுதலாக 50 ரூபாய் செலவழிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, மாதத்துக்கு ரூ.1,500, வருடத்துக்கு ரூ. 18,000. இதையே வருடத்துக்கு 10 சதவிகிதம் லாபம் தரக்கூடிய நிதித் திட்டங்களில் சுமார் 30 அல்லது 40 வருடங்களுக்கு முதலீடு செய்தால், அது உங்களது மகன் அல்லது மகளின் உயர் கல்வி செலவுக்கோ அல்லது அவர்களின் திருமணச் செலவுக்கோ மிகவும் கைகொடுக்கும்.
சில்லறை செலவுகளில் கவனம்

3) எதிர்பாராமல் கிடைக்கும் பணத்தைச் சேமியுங்கள்

பிறந்த நாள் பரிசு, சம்பள போனஸ், அரியர்ஸ், பரம்பரைச் சொத்து விற்பது அல்லது பாகப்பிரிவினை மூலமாகக் கிடைக்கும் பணம் போன்று எதிர்பாராதவிதமாகக் கிடைக்கும் பணத்தைச் செலவழித்து விடாதீர்கள். அது எத்தனை சிறிய தொகையாக இருந்தாலும் எதிர்பாராத செலவினங்களுக்காகவோ, மருத்துவச் செலவுக்காகவோ ஒதுக்கி வையுங்கள். அல்லது ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். ஒருவேளை கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் போன்ற வட்டிச் செலுத்தக் கூடிய கடன் ஏதேனும் இருந்தால், குறைந்தபட்சம் அதை அடைக்கவாவது அந்தத் தொகையைப் பயன்படுத்துங்கள்.

4) பணக்காரர் ஆகும் தகுதி உள்ளதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்

பணக்காரர் ஆகும் முதல் தகுதி என்னவென்றால், அத்தகுதி உங்களுக்கு இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதுதான். இந்த ஒற்றை நம்பிக்கையே உங்களை அதற்கான செயலில் ஈடுபட வைத்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

நம்மில் பலர், ``பணக்காரர் ஆவதற்கு நானெல்லாம் தகுதியே இல்லாத ஆள்... நானெல்லாம் அதை நினைத்தே பார்க்க முடியாது..." என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், அதுபோன்று சொல்வதை விட்டு, ``நான் ஏன் பணக்காரர் ஆகக் கூடாது?" என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் உலகம் முழுவதுமுள்ள பணக்காரர்களெல்லாம் செய்தது இதைத்தான்.

5) எஞ்சிய பணத்தை முதலீடு செய்யுங்கள்

உங்களது செலவு போக எஞ்சியிருக்கும் பணத்தை, அது 500 அல்லது 1,000 ரூபாய் என மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் கூட அதனை முதலீடு செய்யுங்கள். ஏனெனில் சிறிய தொகை முதலீடு கூட, கூட்டுவட்டி முறையில் நாளடைவில் பெரிய தொகையாகச் சேர்ந்து உங்களை ஆச்சர்யப்படுத்திவிடும். பெரும்பாலானோர் நினைப்பது போல முதலீட்டைத் தொடங்குவதற்கு பெரிய தொகையெல்லாம் தேவையில்லை. மைக்ரோ முதலீட்டுக்கென்றே பல ஆப்ஸ்கள் இப்போது உள்ளன. அதில் ஒன்றை டவுன்லோடு செய்து எளிய முறையில் முதலீட்டைத் தொடங்கலாம்.

6)  எவ்வளவு பணம் தேவை என இலக்கு நிர்ணயித்துக்கொள்ளுங்கள்

நம்மில் பலர் தமது தேவை என்னவென்றே அறியாமல் அல்லது சொல்லத் தெரியாமல் இருக்கின்றனர். எனவே, உங்களது தேவைகள் என்னவென்பதை சொல்லிப் பழகுங்கள். அப்படியான பழக்கம் இருந்தால்தான் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதையும் சொல்லி, அதற்கான இலக்குகளை நிர்ணயித்து, அதாவது நமது ஆண்டு வருமானம் அல்லது சொத்து எவ்வளவு சேர்க்கப்பட வேண்டும் எனத் திட்டமிட்டு செயலாற்ற முடியும். அதே சமயம் இலக்குகளை நிர்ணயிப்பதில் சாத்தியமானவற்றை நிர்ணயித்து, பின்னர் மெள்ள மெள்ள இலக்குகளை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள்.
முதலீடு

7) உங்கள் கடிகார அலாரம் முன்கூட்டியே அடிக்கட்டும்

வெற்றியாளர்கள், சாதனையாளர்கள், பணக்காரர்களெல்லாம் நேரத்தின் அருமை உணர்ந்து, அதனை உபயோகமாகப் பயன்படுத்தி, தங்களது லட்சியங்களை நிறைவேற்றியவர்கள். எனவே, பணக்காரர் ஆவதற்கான உழைப்புக்கான நேரத்தைச் செலவிடவும், திட்டமிடவும் அன்றைய நாளின் தொடக்கத்தை அதிகாலையிலேயே, குறைந்தபட்சம் காலை 5 மணிக்காவது தொடங்கிடுங்கள். வெற்றியாளர்கள் பெரும்பாலானோர் சூரிய உதயத்துக்கு முன்னர் கண் விழித்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது மற்றவர்களைக் காட்டிலும் 3 மணி நேரத்துக்கு முன்னரே தங்கள் பணிகளைத் தொடங்கி விடுபவர்களாக இருப்பார்கள்.

8) உங்கள் செலவுகளைக் கண்காணியுங்கள்

உங்களது வங்கிக் கணக்கில் அல்லது பணப்பெட்டியில் வந்து சேரும் பணத்தைக் காட்டிலும் அதிகமான தொகை வெளியேறிக் கொண்டிருந்தால் பணக்காரர் ஆகும் லட்சியத்தை அடைய முடியாது. எனவே, உங்களது அன்றாடச் செலவுகளைக் கண்காணித்து, அநாவசியமான செலவுகளுக்குக் கட்டாயம் 'நோ' சொல்லிப் பழகுங்கள்.

9) அதிக வட்டிக் கடனை வைத்திருக்காதீர்கள்

அனைத்து வகையான கடன்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு வட்டி விகிதம் கொண்டவையாக அல்லது வட்டியே இல்லாததாகவும் இருக்கும். எனவே, அதிக வட்டிகொண்ட கடன் ஏதேனும் இருந்தால், அதற்கு முன்னுரிமை கொடுத்து அதனை விரைவாகக் கட்டி முடிக்க முன்னுரிமை கொடுங்கள். பின்னர் படிப்படியாக அனைத்துக் கடன்களையும் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். கடன் இருக்கும் வரை முதலீடோ அல்லது சேமிப்போ செய்ய முடியாது. எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடனை ஒழித்துக் கட்டுங்கள்.

10) வெற்றியாளர்கள், அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்கட்டும்

பணக்காரர் ஆக வேண்டும் என்ற உங்களது லட்சியம் ஒருபுறம் இருந்தாலும், அதனைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் வெற்றியாளர்கள் மற்றும் அதிகம் சம்பாதிப்பவர்கள் உங்களைச் சுற்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களிடையே இருப்பது நீங்களும் வெற்றியாளராகவும், அதிகம் சம்பாதிப்பவராகவும் மாற உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அப்படியான நபர்கள் உங்களுக்கு அருகில் இல்லையென்றால், அதுபோன்ற நபர்கள் வரும் க்ளப்பில் சேருங்கள். அல்லது நகரில் அவர்கள் வரும் உயர்தரமான ஓட்டலுக்கு மாதம் ஒருமுறை, குறைந்தபட்சம் ஒரு தேநீர் அருந்தவாவது செல்லுங்கள். அப்படிச் செல்வது அதுபோன்ற நபர்கள் புழங்கும் இடம், சூழல் ரீதியாக உங்களை அந்நியமாக்காது. அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் வித்தியாசமானவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்.
வெற்றியாளர்களைச் சுற்றி இருங்கள்....

கடைசியாக ஒன்று... மேலே குறிப்பிட்டவற்றையெல்லாம் படிப்பதோடு விட்டுவிடாமல், செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் பணக்காரர் ஆவது சாத்தியமான ஒன்றே!

நன்றி. விகடன்

Published Date: 31 JULY 2018 11:54AM