I LOVE TAMIL


Monday, December 29, 2008

மக்கள் சக்தி

மக்கள் சக்தி

மக்கள் சக்தி மக்கள் சக்தி என்கிறார்களே, அது உண்மையாகவே எப்படிப்பட்டது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திவிட்டனர் திருவண்ணாமலை மக்கள்.

திருவண்ணாமலையை அடுத்துள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலை எனப்படும் இரண்டு மலைகளையும் இரும்புத் தாது எடுப்பதற்காக வெடிவைத்து தகர்க்கும் திட்ட அனுமதிக்காக டிசம்பர் 27-ம் தேதி நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில்தான் இந்த மக்கள் சக்தி வெளிப்பட்டது.

மகா தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலைக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த மலைகள் உள்ளன. இந்த இரு மலைகளிலும் 41 சதவீதம் அளவுக்கு இரும்புத் தாது இருப்பது உண்மையே. தமிழ்நாடு இரும்புத் தாது கனிமக் கழகம், தொழில்வளர்ச்சிக் கழகம், ஜே.எஸ். டபிள்யு ஸ்டீல் லிமிடெட் ஆகியன இணைந்து இந்த இரு மலைகளையும் தகர்த்து இரும்புத் தாது பெறும் திட்டத்துக்கு அரசுக்கு கருத்துரு கொடுத்துள்ளன.

இந்த இரு மலைகளில் வேடியப்பன் மலையும் இப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறது. மலையில் உள்ள வேடியப்பன் கோயிலின் மூலிகைத் தீர்த்தம் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தவிர, மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையை ஆன்மிக உணர்வுடன் மாதம்தோறும் சுமார் 5 லட்சம் பேர் கிரிவலம் வருகின்றனர்.

கிரிவலம் வருபவர்களின் வசதிக்காக மலையையொட்டி இன்னொரு சுற்றுப்பாதை அமைத்தால், கிரிவலப் பாதையின் தொலைவு குறையும், கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டபோது, "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி' என்று அனுமதி மறுத்த வனத்துறைதான் இப்போது இந்த இரு மலைகளிலும் 325 ஹெக்டேர் பரப்பில் இரும்புத் தாது வெட்டி எடுக்கவும் 2 லட்சம் மரங்களை வெட்டவும் அனுமதிக்கிறது. இது எப்படி?

இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால், ஆண்டுக்கு 10 லட்சம் டன் வீதம் 9.2 கோடி டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்படும்; மலையை தொடர்ந்து வெடிகள் வைத்து தகர்ப்பதும் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களைக் கொண்டு செல்ல தொடர்ந்து லாரிகள் இயக்கப்படுவதும் திருவண்ணாமலையின் சுற்றுச்சூழலை மோசமானதாக்கிவிடும் என்பது நிச்சயம்.

தமிழக மக்களின் மிக முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவண்ணாமலை கோயிலை "பாரம்பரிய நகரமாக' அறிவிக்கச் செய்து, அந்த நகரத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளை செய்ய வேண்டிய அரசு, அந்த நகரின் சூழலை அடியோடு அழிக்கத் துணை நிற்பது எதனாலோ?

திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுமார் 800 பேர் திரண்டு ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்த நேரத்தில் அங்கே இந்த மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள்-எம்பி, எம்எல்ஏ-க்கள்- யாருமே இல்லை. திமுக பிரதிநிதிகள் கட்சிப் பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றுவிட்டார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பாமக-1, காங்கிரஸ்-3, அதிமுக-1 எம்எல்ஏ-க்களும் இந்தக் கருத்துக்கேட்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த மாவட்ட மண்ணின் மைந்தரான உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு (தண்டராம்பட்டு), முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி (திருவண்ணாமலை) திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு தெரியாமல் இந்தத் திட்டம் கருத்துக்கேட்பு வரை வந்துவிட்டது என்றால், யாரால் நம்ப முடியும்? அவர்கள் நினைத்திருந்தால் அரசுத் துறை அளவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா?

""இந்த மலைகளில் வெட்டப்படும் 2 லட்சம் மரங்களுக்கு ஈடாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரு மடங்கு நிலம் வாங்கி 4 லட்சம் மரங்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன'' என்று ஜே.எஸ்.டபிள்யு. ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் அலுவலர் சமாதானம் செய்தபோது ஒரு படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்மணி கொதிப்புடன் கேட்ட கேள்வி: ""நீங்க அம்பாசமுத்திரத்துல மரம் நட்டா இங்க எனக்கு காத்தும் நெழலும் கெடைக்குமா?''

அவள் ரத்தம் கொதிக்கிறது; ஏனென்றால், அவளால் வேறு நகரத்துக்கு நிலமோ, வீடோ வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விட முடியாது; தன் பிள்ளைக்கு பெரியபடிப்பு கொடுத்து, வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ "செட்டில்' ஆகிவிட முடியாது; அவள் அந்த மண்ணில் தோன்றிய செடி, கொடி, மரம், விலங்குகள் போல மனுஷியாய் தோன்றி அதே மண்ணில் கலந்து கரைந்து போகப் போகிறவள் என்பதால்தான் அந்தத் துடிப்பு.


Thanks to www.Dinamani.com on 29.12.2008 - தலையங்கம்

Saturday, December 20, 2008

வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்!

மு. முரளீதரன்

""அன்றாட வாழ்வில், நாம் காண்போர் அனைவருமே மகிழ்வுடன் வாழ்கிறார்களா?'' என்று திடீரென்று எனக்கு ஓர் ஐயம் ஏற்பட்டது! ஒவ்வொருவரின் முகத்திலும், ஏதோ ஒரு கவலை தெரிகிறது! நேற்றைய விஷயங்கள், இன்றைய நிகழ்வுகள் பற்றித்தான் நம்மவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்களே தவிர, "நாளைக்கு என்ன செய்வது'? என்ற எதிர்காலச் சிந்தனை பெரும்பாலோர்க்கு இல்லை! சிலரிடம் உண்டு! ஏனெனில், "இன்று நல்லபடியாக நாள் முடிந்தால் போதும்'! என்ற எண்ணமே மேலோங்குகிறது! அவ்வளவு இடர்ப்பாடுகள்!

நான் அண்மையில் என் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஓர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவர் பணியிலிருக்கும் போதே, முதல் தேதி சம்பளம் பெறும் நாளில் இருக்கும் முகமலர்ச்சி, மாதக் கடைசியான முப்பதாம் தேதியிலும் மாறாது! "இது எப்படி அவருக்குச் சாத்தியமாகிறது?' என்று நெடுநாள்களாக அவரைக் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது!

அவர் சொன்னார். ""நாம் படிக்கும் நீதி நூல்களும், நம்மைச் சுற்றி வாழ்வோரின் செயல்பாடுகளும் நம்மை மிகவும் எச்சரிக்கின்றன. ஆனால், நாம்தான் அதைக் கண்டுகொண்டு, நம் அன்றாட வாழ்வோடு பொருத்திக் கொள்வதில்லை! நாமும் சிந்தித்து, நம் குடும்பத்தினரையும் சிந்திக்கச் செய்துவிட்டால், அமல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம்! இதுவே சத்தியம்!

ஊரைத் திருத்தப் புறப்படுவதற்கு முன்பு, உன்னை நீ திருத்திக் கொண்டாலே போதும்! பிறருக்கு உபதேசிக்க உனக்கொரு தகுதி வந்தாலும்கூட, யாராவது கேட்டாலொழிய நீயாகச் சென்று ஆலோசனை தரவேண்டியிராது'' - என்றதும், நான் என்னுள்ளே மெதுவாக ஒரு மாற்றம் தோன்றுவதை உணர்ந்தேன்!

வேண்டாத விஷயங்களிலும்கூட, நாமே முந்திக்கொண்டு, பிறர்க்கு அறிவுரை கூறுவோர் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்? வீண் பகட்டாக வாழ்ந்து, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல், ""வாய்தா'' வாங்கிக் கொண்டு, ஒரு கடனை வாங்கி, மற்றொரு கடனை அடைத்து, எந்தக் கடனிலிருந்தும் மீளாமல், விழிகள் பிதுங்கி, மொழிகள் பதுங்கி, அவதிப்படுகிறோமே, இதற்கு மாற்றாக நல்வழி ஏதுமில்லையா? நண்பர் சிரித்துக் கொண்டே சொன்னார்: ""இல்லறத்தில் துறவறம்'' என்று வாழ்ந்து பாருங்கள்; எந்தக் கவலையும் யாருக்கும் எப்போதும் இல்லை! உங்கள் அவசியமான தேவைகளுக்காக மட்டும் செலவிடுங்கள். அனாவசியமான ஆசைக்காக உங்களை அடிமையாக்கிக் கொள்ளாதீர்கள். ""இவை இல்லாமலும்கூட நம்மால் வாழ இயலும்'' என்ற மனப்பக்குவம் நமக்கு வளர்ந்துவிட்டால், நமது வருவாய்க்குள்ளே வாழ முடியும். சிக்கனமாய் வாழ்வதால், சிறுதொகை மீதமாகும். அதைப் பெருந்தொகையாக மாற்றுவதே சேமிப்பு'' என்றார்.

எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை இவ்வளவு அனாயசமாகச் சொல்கிறாரே! என்று வியந்தேன்! என் நண்பர் தொடர்ந்தார். ""வங்கியில் Term Deposit என்று குறுகியகால வைப்பும்; Fixed Deposit என்று நீண்டகால வைப்பும் உள்ளன. அதைப்போல நம்மிடம் "நேரமேலாண்மை' என்ற TIME DEPOSITm, ‘Financial Discipline என்ற "பண ஒழுங்கும்' இருக்க வேண்டும். இதுவே மனிதனின் TD, FD ஆகும்!

""உரிய நேரத்தில் உரியவற்றைச் செய்வது காலத்தினை நாம் மதிப்பதாகும். உரியவற்றுக்கு மட்டுமே செலவிடுவது பணத்தை நாம் மதிப்பதாகும். இவை இரண்டும்தான் நம் "நாநயத்திற்கு உதவும் நாணயங்கள்'' என்றதும், எனக்கு ஆயிரம் வாட்ஸ் பல்ப் ""பளிச்'' என்று என் உள்ளத்தில் ஒளியேற்றியதைப் போல உணர்ந்தேன்! சிலரின் வாக்கு, இருள் நீக்கும் ஒளிவிளக்கு!

"நமக்கு உபதேசிப்பதுபோல, வாழ்ந்து காட்டுவார் எவருமில்லையே!' என்று இதுவரை தவறாக எண்ணினேன்! ஆனால் அவரைச் சந்தித்த பின்பு, ""நாமே ஏன் ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டக்கூடாது?'' என்ற திடமான மன உறுதி எனக்கு ஏற்பட்டது! சிந்தனையும் செயலும் இரட்டைத் தண்டவாளங்கள் அல்லவா!

Thanks - www.dinamani.com - Monday June 5 2006 00:00 IST

Sugarcane - Issue




Thanks - www.dinamalar.com - 19.12.2008

Monday, December 8, 2008

Petrol Price





Source : www.dinamalar.com - 07.12.2008

மழை இனிது! மனிதன்..?

மழை இனிது! மனிதன்..?

அண்மையில் பெய்த பலத்த மழையினால் சென்னை மாநகரமே நாறிக் கொண்டிருக்கிறது. காரணம் - மழை அல்ல; அது கலந்த மண்ணும் அல்ல. மனிதர்தம் வாழ்க்கை முறைதான் இந்த நாற்றத்துக்கும், அதைத் தொடரும் நோய்களுக்கும் காரணம்.

சென்னை மாநகர் மட்டுமன்றி, புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ள எல்லா நகரங்களிலும் மழைநீர் வடிவதற்கு முன்பே நாற்றமெடுத்து கிருமிகளை உற்பத்தி செய்வது ஏன் என்றால், குடியிருப்புகளின் அனைத்து மலஜலக் கழிவுகளும் புதை சாக்கடையில் கலக்கப்படுவதுதான்.

ஒரு நகரவாசி குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு, பாத்திரம் கழுவுதற்குப் பயன்படுத்தும் தண்ணீர் புதை சாக்கடையில் கலப்பதால் தீங்கு ஏற்படுவதில்லை. இதில் கழிவறைக் கழிவுகளைச் சேர்ப்பதால்தான் பிரச்னை ஏற்படுகிறது.

மாநகர, நகரக் கட்டடங்களில் உள்ள கழிப்பறைகள் இரண்டு வகைதான். ஒன்று, நிரம்பிய கழிவுத் தொட்டியை (செப்டிக் டேங்க்) மோட்டார் வைத்து இறைத்து புதை சாக்கடையில் சேர்த்துவிடுவது. இரண்டாவது, நேரடியாக புதை சாக்கடையில் கலக்கச் செய்வது. பலத்த மழையின்போது மழைவெள்ளமும் புதை சாக்கடையும் கலந்து நகரம் முழுவதும் திறந்தவெளி செப்டிக் டேங்க்-ஆக மாறிவிடுகிறது.

வீடுதோறும் கழிவறைகள் என்ற திட்டத்தை மத்திய அரசு மானியத்துடன் நிறைவேற்றியபோது, புதை சாக்கடைகள் இல்லாத சிறுநகரங்களில் ஒரு நல்ல, எளிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஒரு வீட்டின் கழிவறைக்கு இரண்டு கழிவுத்தொட்டிகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. ஆறு அடி உயரம், ஒரு மீட்டர் விட்டமுள்ள இரண்டு உறைகிணறுகள்தான் இந்தத் தொட்டிகள். மலஜலத்தால் ஒரு தொட்டி நிரம்பியவுடன் அதற்கான வழியை மூடிவிட்டு அடுத்த தொட்டிக்குள் கழிவுகள் சேரும்படி செய்வதும், நிரம்பிய தொட்டியானது இரண்டு, மூன்று மாதங்களில் காய்ந்து உரமாக மாறியதும் அதை விவசாயத்துக்கு விற்றுவிடுவதும்தான் அந்த எளிய தொழில்நுட்பம். இப்போதும்கூட, சாக்கடைவசதி இல்லாத கிராமங்களில் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம்தான் கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன.

ஆனால் நகரவாசிகள்தான் எப்போதுமே "ஸ்பெஷல்' ஆயிற்றே. அவர்களுக்கு இத்தகைய தொழில்நுட்பத்தை அரசும் உள்ளாட்சிகளும் அறிமுகம் செய்யக்கூட முயற்சிக்கவில்லை.

ஓர் ஆண்டு காலத்தில் ஒரு மனிதனின் மலஜலக் கழிவுகளிலிருந்து 4.56 கிலோ நைட்ரஜன், 0.55 கிலோ பாஸ்பரஸ், 1.28 கிலோ பொட்டாஷியம் கிடைக்கின்றன. இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஓர் ஆண்டுக்கு 60 லட்சம் டன் உரம் (நைட்ரஜன்-பாஸ்பரஸ்-பொட்டாசியம்) கிடைக்கும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் உரத்தின் அளவே 20 லட்சம் டன்தான். எவ்வளவு வீணடிக்கிறோம் என்பது இப்போது புரியும்.

மனிதனின் நாற்றமெடுத்த உடல் இயந்திரத்தைக்கூட சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில்தான் இயற்கை படைத்திருக்கிறது. ஆனால் மனிதன்தான் தன்னைப் படைத்த இயற்கையை சுயநலத்தாலும் வன்மத்தாலும் நாசப்படுத்துகிறான்.

நிலத்தடி நீர் கீழே இறங்கிக்கொண்டே செல்லும் ஆபத்து தலைக்கு மேலாக வந்தபோதுதான், அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாயம் என்ற விதிமுறையை அரசு கொண்டுவந்தது. அதேபோன்று கழிவுத் தொட்டிகளிலும் அரசு விதிமுறைகளை புகுத்த வேண்டும்.

நகரங்கள், மாநகரங்களில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் உள்ள கழிப்பறைக் கழிவுகள் புதை சாக்கடையில் கலக்கும்படி செய்யக்கூடாது என்றும், ஒவ்வொரு கட்டடமும் இரண்டு கழிவுத் தொட்டிகள் கட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க ஒரேயொரு அரசாணை போதுமானது. குடியிருப்பு, அடுக்ககம், அலுவலகம் எதுவானாலும் அங்குள்ள கழிப்பறை வசதிகளுக்கு ஏற்ப கழிவுத் தொட்டிகளின் அளவை அரசு தீர்மானிக்க வேண்டும். நிரம்பும் கழிவுகள் காய்ந்ததும் விவசாய உரமாக விற்பனை செய்வது எளிது.

மாநகரத்தில் இதை நடைமுறைப்படுத்துவதால் யாருக்கும் தீங்கு இல்லை; மாநகர சுற்றுச்சூழல் கெடாது; நாற்றமின்றி மழைநீர் வடியும்; தேங்கினாலும் உடனே கிருமிகள் உற்பத்தியாகாது; நோய்கள் பரவாது; மாநகரிலும் மழை இனிதாகவே இருக்கும்.

Source: www.dinamani.com - Monday December 8 2008

Saturday, November 29, 2008

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

ஏராளமான மருத்துவ குணங்கள் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. வைட்டமின்-சி சத்து நிறைந்திருக்கும் எலுமிச்சம் பழம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த அருமருந்தாகிறது. கால்சியம், இருப்புச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. எலுமிச்சையின் கொழுந்து, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், விதை, மரப்பட்டை என அனைத்தும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. எலுமிச்சம் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் லெமன் பெக்டின் என்னும் பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ரத்தப் போக்கை நிறுத்தவும், புண்களை ஆற்றவும் உதவுகிறது. இனி எலுமிச்சை பல்வேறு நோய்களுக்கு எப்படி மருந்தாகிறது என்பதை காணலாம்.

சாப்பிட்டபின் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள், வாயு கோளாறு போன்ற தொல்லைகள் நீங்க வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை இலையை அரைத்து சாறு எடுத்து நீருடன் கலந்து, சிறிது உப்பையும் சேர்த்து பருகினால் வாந்தி உடனே நிற்கும். பித்தம் தணியும். உடலுக்கும் நல்லது.

சிறிதளவு சீரகத்தை அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து வெந்நீருடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் குடித்து வந்தால், நன்றாக பசி எடுக்கும்.

சிலருக்கு வாயில் தொடர்ந்து கசப்பு சுவை இருந்து கொண்டே இருக்கும். எதையும் ருசித்து சாப்பிட முடியாது. இந்த தொல்லை போக, காலையில் பல்துலக்கிய பின்பு எலுமிச்சம் பழச்சாற்றை வாயிலிட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பின்னர் துப்பிவிடலாம். இப்படி செய்து வந்தால் வாய் கசப்பு மாறும்.

மூட்டுவலி, கால்வலிக்கு எலுமிச்சை இலையை அரைத்து பத்து போட்டால் வலி குறையும்.

Source: www.dailythanthi.com - இளைஞர் மலர் - 29.11.2008

விளையாட்டு பொம்மைகள்

விளையாட்டு பொம்மைகள்

மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகளை (20 மைக்ரான் அளவு) பயன்படுத்தக்கூடாது என்று தடை உள்ளதால், அனைவரும் தடிமனான பிளாஸ்டிக் பைகளுக்கு மாறினோமே தவிர, பிளாஸ்டிக் தீங்கானது என்பதை உணர்ந்து செயல்படவில்லை. இதே உணர்வற்ற தன்மைதான் குழந்தைகளுக்கான பொம்மைகள் தேர்வு செய்வதிலும்!.

இந்தியாவைப் பொருத்தவரை குழந்தைகளுக்கு எந்த வகையான பொம்மைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இதுவரை அமலில் இல்லை என்பதே அதற்குச் சான்று.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பொம்மைகளில் சில ரசாயனப் பொருள்கள் கலந்திருந்தால் அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளது. இருந்தும்கூட, நடைமுறையில் அந்தச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக அங்குள்ள அமைப்புகள் குறை கூறுகின்றன. அந்நாட்டில் பொம்மை தொடர்பான விபத்துகளில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 80,000 என்கிற செய்தியைப் பார்க்கும்போது, இந்தியாவில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தும் ஆர்வம்கூட நம்மிடம் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.

இந்தியக் குடும்பங்களில் குழந்தைகளின் முதல் உயிர்த்துடிப்பான விளையாட்டுப் பொம்மைகள் - சொன்னால் வேடிக்கையாக இருக்கும் - தாத்தா பாட்டிதான். தாத்தா பாட்டிகளை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தையும் தாய் தந்தையருடன் பழகும் விதத்தையும் எளிதாக வேறுபடுத்திவிட முடியும். இருந்தாலும் குழந்தைகளுக்கென தனியாக, வண்ணங்கள் தீட்டப்படாத மரப்பாச்சி பொம்மைகள், மரத்தால் செய்யப்பட்ட யானை மற்றும் விலங்கு உருவங்கள், மரச் சொப்புகள், பனைவோலையில் செய்யப்பட்ட கிலுகிலுப்பைகள், இப்படியாகத்தான் விளையாட்டுப் பொருளாக கொடுக்கப்பட்டன. அதுவும்கூட வயதுக்கு ஏற்ப வேறு பொம்மைகளும், நடைவண்டிகளுமாக அவர்களது விளையாட்டுப் பொருள்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால், தற்போது இவையெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. எல்லா வீடுகளிலும் குழந்தைகளுக்கு ரிமோட் கார், பல்டி அடிக்கும் யந்திர மனிதன், ஜாய் ஸ்டிக், செல்போன், ஸ்பைடர்மேன், ஏகே 47 துப்பாக்கி என வாங்கித் தரப்படுகின்றன. இவை அனைத்தும் பிளாஸ்டிக் பொருள்கள். உடைந்தால் குழந்தையை காயப்படுத்தும் தன்மை உள்ளவை. இவற்றில் வளைந்து கொடுக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்துமே அதன் ரசாயனத் தன்மை காரணமாக குழந்தையின் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை.

குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் மீது பூசப்படும் வண்ணங்களில் காரீயம் ( லெட்) அதிக அளவு இருப்பதாகக் கூறி, அமெரிக்காவில் கோடிக் கணக்கில் பொம்மைகளை அதைத் தயாரித்த நிறுவனங்களே திரும்பப் பெறும்படி செய்யப்பட்டது. குழந்தைகள் அனைவருமே தங்கள் பொம்மைகளை வாயில் வைத்து கடிக்காமல் விளையாடுவதே இல்லை என்பதால் செயற்கை வண்ணங்கள் வழியாக குழந்தைகளுக்கு காரீயம் உள்ளுக்குச் சென்று, நுரையீரல் தொடர்பான நோய்கள், குறிப்பாக ஆஸ்துமா மற்றும் புற்றுநோய்களுக்கு இடம்தருகின்றன

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு எந்தெந்த பொம்மைகளை வாங்கித் தருவது, அவர்களை எந்தப் பொருள்களுடன் மட்டும் விளையாட வைப்பது என்ற ஒரு வாரப் பயிற்சியை தாய்மார்களுக்கு அளித்த பிறகு, அவர்தம் குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடி காயமடைந்து மருத்துவமனைக்கு வருவது இல்லாமல் ஆகிவிட்டது என்ற புள்ளிவிவரம் அண்மையில் வெளியானது. அத்தகைய பயிற்சிகள்கூட இந்தியாவில் கிடையாது.

குழந்தைகள் நுரையீரல் பாதிப்பினால் இளமையிலேயே ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளாவதும், மருத்துவச் செலவுகளும் தவிர்க்கப்பட வேண்டுமானால், பொம்மைகள் விஷயத்திலும் கவனமாக இருந்தால் சாத்தியமாகும். தற்போது குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள் அவர்களை கருணையோடு தொடர்பில்லாத இயந்திரத்தனமான மனிதர்களாக மாற்றுகின்றன என்பதுதான் உளவியல் மருத்துவர்களின் கணிப்பு.

குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படும் நகைகள், உடைகள், பொம்மைகள், அதன் மேல் பூசப்படும் வண்ணங்கள், குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு, சாக்லெட், ஐஸ் கிரீம் ஆகியவற்றில் கலக்கப்படும் வண்ணங்கள் ஆகியவற்றில் தவிர்க்கப்பட வேண்டிய ரசாயனங்கள் என்னவென்று அரசு அறிவிக்க வேண்டும். இன்னமும் நம் குழந்தைகளுக்கு எது நன்மை என்று தெரியாத விளையாட்டுப் பொம்மைகளாக பெற்றோர் இருத்தல் கூடாது.

சீனாவில் பால்பவுடரில் கலப்படம் என்றதும், தமிழ்நாடு முழுவதிலும் எல்லா கடைகளிலும் விற்கப்படும் குழந்தை உணவுப் பொருள்களை அதிகாரிகள் சோதிப்பது தீவிரமாக நடைபெறுகிறது.

கவிஞர் கண்ணதாசன் பாடியதைப் போல, ""பட்டபின் அறிவதே பழக்கமென்று ஆன பின்பு, கெட்டவன் அழுகை தானே கெடுவதை நிறுத்த வேண்டும். பட்டுப் பின் தேறல்தானே "பட்டணத்தார்' வாழ்க்கை!''.

Source: www.dinamani.com - Friday November 28 2008

Traffic Rules

Saturday, November 22, 2008

கங்கை போலவே காவிரியும்!

கங்கை போலவே காவிரியும்!

கங்கையை தேசிய நதியாக அறிவிக்கத் தீர்மானித்து, அதற்காக தனி ஆணையம் அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு.

கங்கை பாயும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநில அரசுகளுடன் கலந்து பேசி, ஆணையத்தின் அதிகார வரம்புகள் விரைவில் நிர்ணயிக்கப்பட்டு, விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே, மாசுபடும் கங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் "மத்திய கங்கை ஆணையம்' உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் எதுவுமே நிறைவேறவில்லை. "கங்கையை தேசிய நதியாக மத்திய அரசு அறிவித்து, தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டால்தான் கங்கையைக் காப்பாற்ற முடியும்' என்று கூறி, துவாரகா பீடம் சங்காராசாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி பல காலமாக மத்திய அரசிடம் தொடர்ந்து கோரி வந்தார். இதற்காக இயக்கங்களும் உருவாகின. இப்போது இந்தியாவின் முதல் தேசிய நதி கங்கை என்று அறிவிக்க உள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

இத்தனை நாள்களாக இல்லாத கருணை இப்போது மட்டும் கங்கை மீது ஏன் ஏற்பட்டது என்றால், கங்கை வெறும் சாக்கடையாக மாறிவிட்டதோ என்று அச்சப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போனதுதான். சுமார் 2500 கிமீ நீளமுள்ள கங்கை நதியில் நாளொன்றுக்கு 36 லட்சம் கனஅடி அளவுக்கு தொழில்துறை கழிவுகள் கலக்கின்றன. இதுதவிர, நகர்ப்புற சாக்கடைகளும் இதைவிட பல மடங்கு கலக்கின்றன.

நதிகள் அனைத்தும், ஓடிக்கொண்டே தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் திறனை இயற்கை அளித்திருக்கிறது. ஆனால் அந்த திறனைச் செயல்படுத்த முடியாதபடி கங்கை மாசுபட்டுக் கிடக்கிறது என்பதால்தான் தேசிய நதியாக அறிவிக்க உள்ளனர். அமைக்கப்படவுள்ள ஆணையத்தின் முக்கிய நோக்கமே நதியில் ஓடும் நீரின் அளவு, தரம் இரண்டும் குறையாமல் பார்த்துக்கொள்வதுதான்.

கங்கையை மீண்டும் பழைய நிலைமைக்கு நலம் பெறச் செய்ய என்ன நடவடிக்கைகள் தேவை என்று பல சுற்றுச்சூழல் அமைப்புகளும் பல கருத்துகள் தெரிவித்துள்ளன. இவர்களில் கான்பூர் ஐஐடி சுற்றுச்சூழல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.டி அகர்வால் பரிந்துரைப்பவை: "கங்கையின் நீரோட்டத்தில் இடையிடையே மாறுபடும் நதியின் வேகம், குறையும் நீரின் அளவு, கலக்கும் கழிவுகளின் அதிகரிப்பு, பாழ்பட்ட நதிப்படுகை, சூரிய வெளிச்சத்தில் நீண்ட நேரம் தேங்குதல் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும். இதைச் செய்தால் கங்கை தானே உயிர் பெறும். சக்தி பெறும்' என்பதுதான்.

இங்கே குறிப்பிடப்படும் அனைத்து குறுக்கீடுகளுக்கும் நதியின் குறுக்கே அமையும் அணைகள்தான் காரணம். கங்கை நதியில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சுமார் 25-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியுள்ளன. புனல் மின்உற்பத்திக்குப் போதுமான நீரைத் தேக்கி வைத்து, நதியில் சிறிதளவு நீரைத்தான் விடுகின்றன. நதியில் எப்போதும் குறிப்பிட்ட கனஅடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனைகள் குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் குறைவான நீரில் கலக்கும் அதிக அளவு கழிவுகளைச் சுத்திகரிக்கும் திறன் கங்கைக்கு குறைந்துபோகிறது. பாழ்பட்டு, மணல் இல்லாமல் கிடக்கும் நதியால் தன்னைத்தானே சுத்திகரிக்க இயலாது.

கங்கை நதிக்கு என்ன கேடுகள் நேர்ந்துள்ளனவோ, எதனால் தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும் திறனை கங்கை இழந்து நிற்கிறதோ அவை அனைத்தும் இந்திய நதிகள் அனைத்துக்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக நமது காவிரி நதிக்கும் பொருந்தும்.

காவிரியைத் தடுத்துத் தடுத்து, அதன் வேகத்தை மாற்றி அமைத்து, திசை திருப்பித் தேக்கிவைத்து, காவிரி நதி முழுவதுமே மணல் இல்லாதபடி கொள்ளையடித்து, அத்தனை தொழிற் கழிவுகளையும் நகரக் கழிவுகளையும் காவிரியில் கலந்து, தஞ்சை நெற்களஞ்சியத்தில் கொண்டுபோய் சேர்க்கிறோம். ரசாயன உரங்களுடன் இந்த நஞ்சையும் உறிஞ்சியெடுத்த நெல்மணிகளைத்தான் நாம் உண்கிறோம். நஞ்சை பாய்ச்சி நஞ்சை விளைவிக்கின்றோம். கர்நாடகத்தில் விளையும் நெல்மணிகளையும் காவிரிப் படுகையில் விளையும் நெல் மணிகளையும் ஆய்வு செய்தாலே போதும், எவ்வளவு நஞ்சு கலந்துகிடக்கிறது என்பது புரியும். இந்த நஞ்சுக்குக் காரணம் கர்நாடகம் அல்ல. பெரும்பாலும் தமிழகம்தான் பொறுப்பு.

கங்கையை மட்டுமல்ல காவிரியையும் தேசிய நதியாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு குரல் கூட தமிழ்நாட்டிலிருந்து ஒலிக்கவில்லை. ஒரு வேளை இந்தப் பிரச்னையை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கினால், பெங்களூரில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து நேரும் என்ற அச்சத்தால் இருக்கலாம். மக்களவைத் தேர்தல் வரவிருப்பதால் யாருடன் கூட்டணி என்பது உறுதியாகாத நிலையில் இதைப் பற்றிப் பேசி, பின்னர் சங்கடப்பட வேண்டாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம்.

ஆனால் காவிரியைத் தேசிய நதியாக அறிவித்து, அதை முழுமையாகக் கண்காணிக்கும் பொறுப்பை மத்திய அரசின் ஆணையம் ஏற்றால்தான் காவிரி நலம் பெறுவாள். காவிரிக்கு "உயிர்' இருக்கும்போதே சிகிச்சையைத் தொடங்கிவிடுவதுதான் நல்லது.

Source: www.dinamani.com - Saturday November 22 2008

Thursday, November 13, 2008

கடன்பட அஞ்சு!

கடன்பட அஞ்சு!

கடன் அட்டை கலாசாரம் என்பது சிறு பொறியாகக் கிளம்பி இன்று பெரிய காட்டுத் தீயாக பரவிவிட்டது. கடன் அட்டைகள் என்பவை காமதேனுவோ கற்பகவிருட்சமோ அல்ல. கடன் அட்டை காட்டி எதை வாங்கினாலும் அதை வட்டியும் அசலுமாகத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும், அவை இலவசம் அல்ல.

முதல் கடன் அட்டையை வாங்குவதுதான் சிறிது சிரமம். பிறகு அந்த அனுபவத்திலேயே மேலும் மேலும் பல அட்டைகளை வாங்கிவிடுகின்றனர். ஏற்கெனவே கடன் அட்டை வைத்திருப்பதையே ஒரு தகுதியாகக் கருதி பிற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் தருகின்றன என்பது வியப்பாக இருக்கிறது.

கடன் அட்டைகளை விற்க உதவும் தரகர்களுக்கு, அவர்கள் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தரகுத் தொகை கிடைத்துவிடுகிறது. வங்கிகள் தங்களிடம் உள்ள பணத்தை அதிக வட்டி கிடைக்கும் இனங்களுக்குத் திருப்ப முடிகிறது. வணிக நிறுவனங்களுக்குத் தங்களுடைய மின்னணு சாதனங்களையும், இதர நுகர்பொருள்களையும் எளிதில் விற்று பணமாக்க முடிகிறது. கடன் வாங்குகிறவர்களுக்கோ ""வெறும் கையில் முழம்'' போட முடிகிறது. இந்த வகையில் கடன் அட்டைகள் தொழில், வணிகத் துறைகளுக்குச் சேவையைச் செய்கிறது.

கடனைப் பெற்றவரால் அதைத் திரும்ப அடைக்க முடியாமல் போகும்போதோ, தவணை தவறும்போதோதான் கடன் அட்டையின் உண்மையான சொரூபம் தெரிகிறது. கடன் அட்டைகள் மீது வாங்கப்படும் கடன்களுக்கு வருஷாந்திர அடிப்படையில் 36% முதல் 49% வரைகூட வட்டி விதிக்கப்படுகிறது.

நம் நாட்டில் இப்போது கடன் அட்டைகள் மூலம் கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கட்ட முடியாமல் நிலுவையில் இருக்கும் தொகையின் அளவு 20,000 கோடி ரூபாயை எட்டிவிட்டது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகமிகக் குறைவு என்றாலும், இந்திய வங்கிகள் அளித்த கடன் அட்டை இன கணக்கில் இது கணிசமான தொகையாகும்.

பல மத்தியதர குடும்பங்களில் கடன் அட்டைகளை வைத்து கடன் வாங்கிய பல குடும்பத்தலைவர்கள் இரவில் தூக்கத்தை இழந்து, பகலில் நிம்மதியை இழந்து ஆழ்ந்த மன உளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இந்தப் பட்டியலில் முதலிடம் பெறுகின்றனர். வீட்டுக்கடன், வாகனக் கடன், நகைக்கடன், துணிக்கடன் என்று ஒரே சமயத்தில் பல கடன்களை வாங்கியவர்களும் இருக்கின்றனர். இந்தக் கடன் சுமையிலிருந்து மீளவும், கடன்களை குறைந்த வட்டியுடனான நீண்டகாலத் தவணையுள்ள கடனாக மாற்றிக்கொள்ளவும் இப்போது வங்கிகளே தனி ஆலோசனை மையங்களைத் தொடங்கியுள்ளன. அத்தகையவர்கள் இப்போதாவது கடைப்பிடிக்க சில யோசனைகளைத் தெரிவிப்பது நல்லது என்றே தோன்றுகிறது.

முதலில் கடன் அட்டைகளின் எண்ணிக்கைகளைக் குறைத்து, குறைந்த வட்டியில் நல்லவிதமாக சேவை அளிக்கும் நிறுவனத்தின் கடன் அட்டையை மட்டும் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வருவாய் எவ்வளவு, அதில் அவசியமான செலவுகள் என்ன, தேவையற்ற செலவுகள் என்ன என்று மாதம்தோறும் ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்து, தேவையற்ற செலவுகளைப் படிப்படியாகக் குறையுங்கள். வீடு, நிலம் போன்ற உங்களுக்குச் சொந்தமான சொத்துகளின் மீதோ அல்லது தங்க நகைகளின் மீதோ குறைந்த வட்டி இனத்தில் கடனை வாங்கி, கடன் அட்டைகள் மீதான சிறு கடன்களையெல்லாம் வட்டியும் முதலுமாகச் செலுத்தி அடைத்துவிடுங்கள். ""ஒரே கடன் அட்டை, ஒரே கடன் தவணை'' என்று சுருக்கிக் கொள்ளுங்கள். மறுபடியும் புதுக் கடன் எதையும் வாங்காதீர்கள்.

உங்களுடைய வருமானத்தில் 10% தொகையை மாதந்தோறும் கட்டாயம் சேமியுங்கள். அதை சேமிப்பு என்று கருதாமல், அதையும் எதிர்காலத் தேவைக்கான ""நிரந்தரச் செலவாக''க் கருதுங்கள். அந்தத் தொகை உங்களுக்கு ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.

அதிக வட்டி செலுத்த வேண்டிய கடன்களை, குறைந்த வட்டியிலான கடனுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அப்படிச் செய்ய சில நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் முன்வரும். அவை தரும் கடனை கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடாமல், அவை விதிக்கும் நிபந்தனைகள், சட்ட அம்சங்கள் போன்றவற்றைப் படித்துப் பார்த்து முடிவுக்கு வாருங்கள்.

வாழ்க்கையில் ஆடம்பரச் செலவுகளையும், போலி கெüரவத்துக்கான செலவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆயுள் இன்சூரன்ஸ், மருத்துவ இன்சூரன்ஸ் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளையும் அவசியம் எடுங்கள். நிதி நிர்வாகம் தொடர்பாக வீட்டில் அப்பா, அண்ணன் என்று பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் பேசி ஆலோசனை பெறுங்கள். மூத்தவர்களின் அறிவுரைகள் சமயத்தில் கசப்பாக இருந்தாலும், உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் நல்ல மருந்து என்பதை மறவாதீர்கள்.

தமிழ்நாட்டின் மரபே நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் மற்றவர்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லி பண்பாடு வழுவாமல் நடப்பதைப் பார்த்துக் கொள்வதுதான். கடன் இல்லாத வீடும் நாடும் யாருக்கும் அடிமையாகாது. தனிமனித சேமிப்பு நாட்டின் சேமிப்பாக மாறும் என்பதால், சேமிக்கப் பழகுங்கள். ""ஆன முதலின் அதிகம் செலவானால் மானம் அழிந்து, மதி கெட்டு,..'' என்று எச்சரிப்பது தமிழ் மூதுரை. அதை எந்நாளும் மறவாதீர்

Source: www.dinamani.com - Tuesday November 11 2008

Tuesday, November 11, 2008

Vehicles Congestion in Chennai


Publication: The Times Of India-Chennai;Date: Nov 11, 2008; Section: Times City; Page: 3

1.24 lakh new vehicles in six months add to road congestion

Jeeva | TNN

Chennai: If you thought Chennai’s roads are becoming more congested, here are the figures to prove it: In just six months — from April to September this year — 1.24 lakh new vehicles were registered in RTOs across the city, taking the total vehicle population in the city to 27.72 lakh.

A total of 1.13 lakh new non-transport vehicles and 11,000 transport vehicles were registered in the regional transport offices (RTOs) at Ayanavaram, Vyasarpadi, Puliyanthope, Tondiarpet, K K Nagar, Thiruvanmiyur, Valasaravakkam, Anna Nagar and Alandur in the city during the first half of this financial year.

Two-wheelers top the list in the number of new vehicle registrations. According to official records, 90,000 of the new vehicles registered between April and September this year are twowheelers, while 23,000 are cars.

The records reveal that an average of 15,000 new two-wheelers and 4,000 cars drive onto the city’s roads every month — which works out to an average of 700 new vehicles (500 two-wheelers and 130 cars) every day.

While July 2008 saw the registration of 23,000 new vehicles, the highest during the six-month period, August had the lowest registration of 17,000 new vehicles.

As of October 1 this year, the city has 26.13 lakh non-transport vehicles, of which two-wheelers account for 21.2 lakh and cars 4.5 lakh. There are 1.60 lakh transport vehicles in the city, including 52,000 autorickshaws, 30,000 lorries, 3,300 MTC buses, 2,000 school buses and 1,150 ambulances.

“The numbers show that we will see more new vehicles on the roads this year as compared to 2007-08. Last year, there were 1.87 lakh non-transport vehicles and 22,000 transport vehicles registered in the city, excluding the Alandur RTO office,” said a regional transport officer. “Usually, vehicle registration is lower during the Tamil months of Margazhi and Aadi, as most people believe it is inauspicious to buy new things during these months,” he said.

At present, the total vehicle population of Tamil Nadu is 1.06 crore, including 87 lakh two-wheelers and nine lakh cars. The state saw 5.25 lakh new vehicles added to its roads from April to September 2008, including 51,000 transport vehicles, 4.1 lakh two-wheelers and 52,000 cars.

While TN ranks second for overall vehicle population in the country, it has the highest number of two-wheelers among all states. Chennai city alone accounts for one-fourth of the total number of vehicles in the state.

Saturday, November 8, 2008

மானம் இழந்த விவசாயம்

மானம் இழந்த விவசாயம்

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின் வாரிசுகள் இன்று விருந்தினர்களாக வரும் சொந்தக்காரர்களுக்குக் கூட வயிராற ஒரு வேளை சோறு போட வக்கில்லாத தரித்திர நாராயணர்களாகிவிட்டார்கள்.

"மிகவும் தவறான விவசாய விலைக் கொள்கையைப் பின்பற்றி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிவிட்டுக் கடன் தள்ளுபடி... அது... இது... என்று ஏமாற்றுகிறார்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. மானியமும் வேண்டாம். கடன் தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும்' இப்படிச் சொல்வது நான் மட்டுமல்ல, விவசாயிகள் சங்கத் தலைவரான மகேந்தர் சிங் திகாயத் கூறுவதும் இதுவே.

திகாயத் மேலும் கூறுகையில், ""1966-ல் ஒரு டிராக்டர் விலை ரூ. 11,000. இன்று அதுவே ரூ. 3 லட்சமாகிவிட்டது. 40 பைசாவுக்கு விற்ற டீசல் இன்று ரூ. 34. உரம், பூச்சிமருந்து, விதை விலைகள் நூறு மடங்கு உயர்ந்துவிட்டன. 1966-ல் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்தது. இன்று வாரத்தில் 3 நாள்கள் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. 1966-ல் 100 கிலோ கொண்ட ஒரு கோதுமை மூட்டையை விற்று 5 மூட்டை சிமெண்ட் வாங்கினோம். இன்று 1 மூட்டை சிமெண்ட் வாங்க 5 மூட்டை கோதுமையை விற்க வேண்டும். 10 கிராம் தங்கம் அன்று ரூ. 250. இன்று ரூ. 11,000. அன்று கோதுமைக்கு ரூ. 760 என்றும் கரும்புக்கு ரூ. 130 (1 டன்) என்றும் நிர்ணயித்தார்கள். இன்று கோதுமைக்கு ரூ. 1,000 என்றும் கரும்புக்கு ரூ. 818 என்றும் நிர்ணயமாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த விலையேற்ற அடிப்படையில் கவனித்து கோதுமைக்குரிய விலை ரூ. 3,000 என்றும் கரும்புக்கு ரூ. 2,500 என்றும் நிர்ணயம் செய்வதுதான் நியாயம்''.

திகாயத் கூறியுள்ளதை இன்றுள்ள எதார்த்தங்களை வைத்து கவனித்தால் அவர் கூறியுள்ளதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

உலகமயமாதல் விளைவால் விற்பனைப் பொருள்களில் தடையற்ற வணிகம் என்பது ஏனோ அரிசி, கோதுமைக்கு இல்லை. அரிசிக்கும் கோதுமைக்கும் மட்டுமே கட்டுப்பாடான பொருளாதாரம் உள்ளது. அரசு, ஏகபோகமே நிகழ்கிறது. அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது. அப்படி நிர்ணயிக்கப்படும் விலைக்கும் விஷம்போல் ஏறிவரும் சாகுபடிச் செலவுக்கும் தொடர்பே இல்லை. இந்திய விவசாயிகளில் ஐந்தில் நான்கு பேர் நடுத்தர - சிறு - குறுவிவசாயிகள். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்வோரும் அடக்கம். பஞ்சாப் - ஹரியாணா போன்ற மாநிலங்களில் நிலத்தின் விலை ஏறியதாலும் குத்தகையும் ஏறியதாலும் குத்தகை விவசாயிகளுக்கு நிறைய நஷ்டம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை 2005 - 06-ம் ஆண்டில் நிகழ்த்திய ஆய்வின்படி 1 ஏக்கர் கோதுமை சாகுபடி செய்ய சுமார் ரூ. 11,000 செலவாகிறதாம். அதில் குத்தகை முன்பணம் மட்டுமே ரூ. 5,000. அதன்பின் கூலி ஆள்கள் சம்பளம் ரூ. 1,700. இயந்திரங்கள், டிராக்டர், டிரில்லர் செலவு ரூ. 2,000. விதை ரூ. 400. உரம் ரூ. 1,100. பூச்சிமருந்து ரூ. 300. வட்டி ரூ. 200. இத்யாதி. இத்யாதி.

கேரள மாநிலத்தில் 2004 - 05-ல் நிகழ்த்திய ஆய்வில் 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யவும் ஏறத்தாழ ரூ. 10,500 வரை ஆகிறதாம். இங்கு கூலி ஆள் சம்பளம் மட்டுமே ரூ. 6,000 ஆவதால் கேரள மாநிலத்தில் நெல் சாகுபடி அழிந்து வருவதுபோல் ஹரியாணாவில் கோதுமை சாகுபடி அழிந்து வருவதாக அப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வு கூறுகிறது. பசுமைப்புரட்சியில் கொடிகட்டிப் பறந்த பஞ்சாப், மேற்கு உத்திரப் பிரதேச மாநிலங்களிலும் கேரள வியாதி வந்துள்ளது. கூலிவேலை செய்ய பிகாரிகள் வருகின்றனராம். கூலி ஆள் சம்பளம் பற்றி அந்த நாள்களுடன் இந்த நாள்களை ஒப்பிட்ட திகாயத் கூறும் ஒரு கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது.

"கூலிக்கு ஆள்கள் மலிவாகக் கிட்டிய காலத்தில் கூலி ஆள்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இன்று 1 நாள் ஆண் கூலி ரூ. 120, பெண்கூலி ரூ. 70. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. கூலியை நெல்லாகவோ கோதுமையாகவோ வழங்கப்பட்ட அந்தக் காலத்தில் வேலை இல்லாத நாள்களில் பட்டினியிருக்க மாட்டார்கள். கூலி உயர்வு இருந்தாலும், பணவீக்கம் - விலை ஏற்றம் காரணமாக கூலியாள்கள் இன்று வேலையில்லாத நாள்களில் பட்டினி கிடப்பதால் மகிழ்ச்சியாக இல்லை'. எனினும் சாகுபடிச் செலவில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் கூலிச் செலவு உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். சம்பளம் கொடுக்க வக்கில்லாத விவசாயிகளின் மானம் காற்றில் பறந்து கொண்டுள்ளது. விவசாயிகளின் மானம் மரியாதை மட்டுமல்ல; விவசாயமே மானம் இழந்துவிட்டதே. மண்ணுக்கும் மரியாதை குறைந்து வருகிறது.

உரங்களைப் பற்றிய உண்மை நிலவரம் மிகவும் கசப்பாயுள்ளது. 2002-க்குப்பின் உரத்திற்குரிய விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. உர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம் இதனால் படிப்படியாக உயர்ந்து மானியத் தேவை ரூ. 1,19,772 கோடியாக உயர்ந்தது. விவசாயிகளின் நலன் கருதி உரவிலை உயர்த்தப்படவும் இல்லை. அதேசமயம் பட்ஜெட்டில் போதுமான அளவு உரமானியம் ஒதுக்க இயலாமல் துண்டு விழுந்தது. பல உர நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் தலையில் துண்டுபோட்டுக் கொண்டன. அதாவது மூடுவிழா. யூரியா உற்பத்தியில் முதல்நிலை வகித்த ஃபர்ட்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஃபர்ட்டிலைசர் லிமிடெட் போன்றவை யூரியா, உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டன. உரமானியம் வழங்கப்படாத காரணத்தினால் மட்டுமல்ல, இறக்குமதி மூலப்பொருள் நாஃப்தா விலை உயர்வு காரணமாகவும் யூரியா விலை உயர்ந்தது.

இனி முழுக்க முழுக்க இறக்குமதி உரத்தை நம்பி இந்தியா வாழப் போகிறதா? இயற்கை விவசாயத்தை நம்பித்தான் வாழப் போகிறதா? இதற்குக் காலம் பதில் சொல்வது இருக்கட்டும். பூச்சிமருந்து விஷயத்தில் ஆரோக்கியமான மாற்றம் தென்படுகிறது.

பூச்சிமருந்து என்பது கொடிய நஞ்சு. அதனால் மனிதருக்கு நோய் ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல; இந்த விஷத்தின் விலையேற்றமும் (இரண்டு ஆண்டுகளில் 100 சதம்) காரணமாக மாற்றுப் பூச்சிமருந்தாக மூலிகைப்பூச்சி விரட்டி, வசம்பு, பூண்டு, மஞ்சள், திரிகடுகம், திரிபலா, வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றின் பயன் அதிகரித்துவிட்டது. ஆந்திரப்பிரதேசத்தில் பல கிராமங்களில் பூச்சிமருந்து முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. சற்றுக் கூடுதல் விலையில் பயோமருந்துகளும் அறிமுகமாகிவிட்டன.

எனினும், விவசாயம் மானம் இழக்க மற்றொரு முக்கியக் காரணம் விதை. தன்மானமுள்ள ஒரு விவசாயி காய்கறி விதைகளாகட்டும், நெல், புஞ்சைதானியம், கோதுமை, பயறுவகை விதைகளாகட்டும் சொந்தமாகத் தயாரித்துச் சேமித்தார். வீரியரக விதைகள் அறிமுகமான காலகட்டத்தில் வேளாண்மைத்துறையின் விதைவிற்பனை நிலையங்களைச் சார்ந்து நின்று, விவசாயிகள் தாங்களே அறுவடை செய்து வந்த பாரம்பரிய நெல் ரகங்களைச் சேமிக்காமல், ஐ.ஆர்.8 மற்றும் தைச்சுங் ஜீன் பொருந்திய ஏடிடி எண் வரிசைகளை நம்பி நெல்விதை சேமிக்கும் மரபை இழந்தபோதே இந்திய விவசாயம் மானம் இழந்தது.

""ஆத்தூரு கிச்சடிச்சம்பா, ஆற்காடு கிச்சடிச்சம்பா, ஆனைக்கொம்பன், வையக்குண்டான், தங்கச்சம்பா, குதிரைவால், டொப்பி போன்ற பல நூற்றுக்கணக்கான விதைநெல் யாவும் தமிழ்மண்ணில் கற்பரசிகளுக்குப் பிறந்தவை. வீரியரக நெல் விதைகள் அன்னிய மண்ணில் பிறந்தவை. வீரியரக விதை நம்மிடம் குடிகொண்டபோதே மண்ணின் மானம் கப்பலேறியது. ஜீன் மாற்று விதைகளை - அதிக விலை கொடுத்து மஹைக்கோ, மான்சென்டோ போன்ற பன்னாட்டு நிறுவன விதைகளுக்கு இந்திய விவசாயம் அடிமையாகி இந்த மண்ணின் மானம் விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குப் போனதால் இந்திய விவசாயிகள் இன்று அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். வீரிய ரக விதைகளை கிலோ ரூ. 20க்கு வாங்கி வந்த காலம் மாறிப்போய் இன்று ஜீன் மாற்று விதைகள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 1,000 வரை விலை கொடுத்து வாங்கிப் போதிய அளவு விளைந்தும்கூட அதற்குரிய விலைகளை விற்கும்போது பெற முடியவில்லை. திகாயத் கூறுவதுபோல், கூடுதல் விலை கொடுத்து வாங்கும் இந்த விதைகளின் சாகுபடிச் செலவும் கூடுதல் என்பதை கவனித்தல் நலம்.

விவசாயிகளைச் சுரண்டும் ஒரு புதிய விதைக் கொள்கை விவசாயத்தை மானமிழக்க வைத்துள்ளது. 2004 விதைச்சட்டம் 1966 விதைச்சட்டத்தைச் செல்லாக்காசாக்கிவிட்டது. புதிய விதைச்சட்டத்தில் தனியார் ஆதிக்கம் ஓங்கிப் பொதுத்துறை கேலிக்குரியதாகிவிட்டது. இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம் அரசுப் பணத்தைக் கொண்டு விதை ஆராய்ச்சி செய்து மாநில வேளாண்மைத் துறைக்கு விதைகளை அனுப்பியது. கட்டாக், ஆடுதுறை ஆராய்ச்சி நிறுவனங்கள் எல்லாம் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்துக்குக் கட்டுப்பட்டவை. வீரியரக விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலைக்கு வழங்கப்பட்டன. ஆனால் அரசு ஏகபோகத்தை அகற்றிவிட்டுப் பன்னாட்டு விதை நிறுவனங்களைத் தூக்கி நிறுத்தி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டது. பன்னாட்டு விதை நிறுவனங்களின் விரிவாக்கப் பணியின் சுறுசுறுப்பு பொதுத்துறையில் இல்லாத காரணத்தால் பன்னாட்டு விதை நிறுவனங்களின் வீரிய ஒட்டு மற்றும் ஜீன் மாற்று பிடிடி விதைகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதில் மற்றொரு கொடுமை, வேளாண் விஞ்ஞானிகளின் துரோகச் செயல். அரசுத்துறையில் மக்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகப் பெற்ற இந்த விஞ்ஞானிகளைத் தனியார் - பன்னாட்டு விதை நிறுவனங்கள் ஐந்து லகர சம்பளம் கொடுத்து வாங்கின.

அரசுப் பணியிலிருந்து தனியார் விதை நிறுவனங்களுக்குச் செல்லும்போது இந்த விஞ்ஞானிகள் அரசுப்பணத்தில் ஆராய்ச்சி செய்த மூலப்பொருள் சாதனங்களையும் கொண்டு போய்விட்டனர். அரசுத்துறை ஆராய்ச்சியே தனியார் ஆராய்ச்சியாக மாறியுள்ளது. பொதுத்துறை வழங்கிய வீரிய ரக நெல், கோதுமை விதைகளை விவசாயிகள் சேமித்து அடுத்த நடவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் வீரிய ஒட்டு பி.டிடி விதைகள் ஒரு அறுவடைக்குப் பின் மலடாகிவிடும். ஆகவே, ஒரு விவசாயி தன் கையை நம்பக்கூடிய ஒரு தற்சார்பை இழந்து விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாகிவிட்டார். விஞ்ஞானிகள் துரோகிகளாகிவிட்டனர்.

இன்று பன்னாட்டு விதை நிறுவனங்கள் அளிக்கும் வீரிய ஒட்டு ஜீன் மாற்றம் - பி.டிடி ரக விதைகளை - மலட்டு விதைகளை என்று பயன்படுத்தினோமோ, அன்றே விவசாயத்தின் மானபங்கம் வெளிச்சமாகிவிட்டது. அன்று திரௌபதியின் வஸ்திரோபகர்ணத்திற்கு - அதை நிகழ்த்த முடியாதபடி கண்ணபரமாத்மா காப்பாற்றினார். ஆனால் இந்தக் கலியுகத்தில் விவசாயம் - விவசாயிகளின் வஸ்திரோபகர்ணத்தைக் காப்பாற்ற அந்தக் கண்ணபரமாத்மா வரவில்லையே, ஏன்? துரியோதனர்களின் சபைக்கூட்டம் தொடர்வதினால்தானோ!

Source: www.dinamani.com - Friday November 7 2008

தெரிந்தே செய்யும் தவறு!

தெரிந்தே செய்யும் தவறு!

கடந்த 17 ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்ட எச்சரிக்கைகள் அனைத்தும் இப்போது உண்மையாகி வருகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை அறிவிக்கப்பட்ட நேரத்தில் எழுப்பப்பட்ட முதலாவது எச்சரிக்கை, அரசின் தலையீடுகளை முழுமையாகத் தளர்த்துவதும், உலகமயம் என்கிற பெயரில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் நமது பொருளாதாரத்தை இணைப்பதும், நம்மைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதுதான். வளர்ச்சி அடைந்த நாடுகள் பொருளாதாரச் சரிவுகளை நேரிடுவதுபோல, வளரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு அதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சக்தி கிடையாது என்பதுதான் அந்த எச்சரிக்கைக்குக் காரணம்.

அமெரிக்காவில் அரசின் தலையீடு இல்லாததால் ஒரு சில தனியார் வீட்டுவசதி நிறுவனங்களும், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்த தவறுகளுக்கும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இந்தியாவும் பலியாக்கப்பட்டிருக்கிறது. இதுதான் உலகமயமாக்கலின் வேதனை தரும் தாக்கம். அமெரிக்காவின் தோளைப் பிடித்துக் கொண்டிருக்க நாம் முடிவு செய்ததால், அந்த நாடு ஆட்டம் காணும்போது நாமும் ஆட்டம் காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

தன்னுடைய நாட்டு வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் திவாலாகத் தொடங்கி, அந்த வங்கிகளுக்குக் கடன் கொடுத்திருந்த நிதிநிறுவனங்கள் மூழ்கத் தொடங்கி, அந்த நிதிநிறுவனங்களில் முதலீடு செய்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் தங்களது சேமிப்புகளை இழக்க நேரிட்ட நிலையில், தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் அமெரிக்க அரசு தலையிட்டு, அந்த நிதி நிறுவனங்களுக்குப் பண உதவி அளித்து மக்கள் மத்தியில் எழுந்த பீதியையும், பொருளாதாரத் தேக்கத்தையும் களைய முற்பட்டது. அப்படி எதுவுமே நடக்காமல், இந்தியாவில் திடீரென்று விலைவாசி உயர்கிறது, பங்குச் சந்தை சரிகிறது, ஏற்றுமதி குறைகிறது, அரசு தவிக்கிறது.

வரைமுறை இல்லாமல் அன்னிய முதலீடுகளைப் பங்குச்சந்தையில் அனுமதித்தால், எப்போதுமே நாம் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் முப்பெரும் பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங் - சிதம்பரம் - அலுவாலியா குழுவினர் கேட்க மறுத்தனர். அவரவர் நாட்டில் பிரச்னைகள் வரும்போதோ, நமது நாட்டின்மீது அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழக்கும்போதோ அல்லது வேண்டுமென்றே நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று நினைத்தாலோ, குறுகிய காலத்தில் அன்னிய முதலீடுகளைத் திருப்பி எடுப்பதன் மூலம் நமது பொருளாதாரம் சிதைக்கப்படும் ஆபத்து இருப்பதைத் தெரிந்தும் தெரியாததுபோல மன்மோகன்சிங்கும் சகாக்களும் இருந்தது ஏன்? புரியவில்லை.

பங்குச்சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரங்கள் எல்லாமே, சூதாட்ட மனப்போக்குள்ள பங்குத்தரகர்களின் கையில் அகப்பட்டுத் தவிக்கும் போக்கை உடையவை. அதனால்தான் நமது பழைய பொருளாதாரக் கொள்கை சேமிப்பின் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது. மக்கள் ஊதாரித்தனமாகச் செலவிடுவதை ஆதரிக்காமல், தனிநபர் சேமிப்பு, அரசுத் தரப்பில் ஆஸ்தி அதிகரிப்பு, பொதுச் சொத்துகளை அதிகப்படுத்தும் முதலீடுகள் என்று முந்தைய பொருளாதார நிபுணர்கள் திட்டமிட்டனர்.

மக்கள், அரசு வங்கிகளிலும், அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும், அரசு நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும், தங்கத்திலும் முதலீடு செய்தனர். இந்த முதலீடுகள் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்பட்டன. இப்போது, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச்சந்தை என்று மக்களின் முதலீடுகள் தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்க வழி வகுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், உலகளாவிய தாக்கங்கள் நம்மைத் தள்ளாட வைக்கின்றன.

வங்கிகள் அதிகமாகக் கடன் வசதி அளித்துப் பொருளாதாரம் தேக்கமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நிதியமைச்சகத்தின் இப்போதைய முடிவு. இதற்காக, மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 3,00,000 கோடியை அரசு வங்கிகளுக்கு அளிக்கப் போகிறது. அந்த வங்கிகள் குறைந்த வட்டிக்குக் கடன்களை வாரி வழங்கப் போகின்றன. விளைவு? பணப்புழக்கம் அதிகரிக்கும். விலைவாசியும் அதிகரிக்கும். வாராக் கடன்களும் அதிகரிக்கும். முதலில் பிரகாசமாகத் தெரியும் பொருளாதாரம் விரைவில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரும்.

தெரிந்தே தவறு செய்கிறார்கள். கேட்டால் உலகம் போற்றும் பொருளாதார மேதைகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிக்கனத்தையும் சேமிப்பையும் வற்புறுத்தாமல், கடனை வாரி வழங்கி அகலக்கால் வைக்க வழிகாட்டுகிறார்கள். வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தனா, துந்தனா, துந்தனா!

Source: www.dinamani.com - Saturday November 8 2008

Thursday, October 30, 2008

உடல்நலனுக்கு உணவுப் "பிரமிடு'!

உடல்நலனுக்கு உணவுப் "பிரமிடு'!

ஜி.எஸ். பூர்ண சந்திரக்குமார்

அந்தக்காலத்தில் சக்கைப் போடுபோட்ட திரைப்படம் ""மாயாபஜார்''.

இந்தத் திரைப்படத்தில் மறைந்த நடிகர் ரங்காராவ் தம்முன் மலைபோல் குவிந்திருக்கும் உணவு வகைகளை ""கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம், இது கௌரவப் பிரசாதம், இதுவே எனக்குப் போதும், ஹஹஹஹா! ஹஹஹஹா!'' என்று ஆர்ப்பாட்டமாகப் பாடியவாறே அத்தனை உணவு வகைகளையும் ""லபக், லபக்'' என விழுங்குவார்.

இக் காட்சி காண்பதற்கு நகைச்சுவையாகவும், ரசிக்கத்தக்கதாகவும் இருக்கும். அத்தகைய பெருந்தீனிக்காரர்களுக்கும், உடல்நலனை உண்மையாகவே பேண விரும்பும் உடல்நல ஆர்வலர்களுக்காகவும், எவ்வுணவை, எம்முறைப்படி, எவ்வளவு உண்ண வேண்டும் என்பதைக் குறிக்கும் "உடல் ஆரோக்கிய உணவுப் பிரமிடை' மருத்துவ உலகம் உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரமிடில் உள்ளதைப்போல கீழே உள்ள உணவு வகைகளை அதிகமாகவும், படிப்படியாக மேலே உள்ளவற்றைக் குறைவாகவும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு.

இந்தப் பிரமிடில் முதலிடத்தைப் பிடிப்பது காய்கறி, கீரைகள்தான். அதுவும் தினம் அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை உண்ணச் சொல்கிறது இப்பிரமிடு. இதைத்தான் தற்போது மேலைநாட்டு மருத்துவர்கள் ""நீங்கள் ஆகாரத்திற்கு காய்கறிகளைத் தொட்டுக் கொள்வதற்குப் பதிலாக, காய்கறி, கீரை சார்ந்த பொறியலுக்கு ஆகாரத்தைத் தொட்டுக் கொள்ளுங்கள்'' என்று நோயாளிகளுக்குத் தினமும் அறிவுறுத்தி வருகிறார்கள். இல்லையேல் ""சாதம் பாதி, காய்கறி பாதி'' என்ற அளவிலாவது தினமும் காய்கறிகளைச் சேர்க்கச் சொல்கிறார்கள்.

இவ்வாறு உண்பதன் மூலம் அவற்றில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சத்து போன்றவை அப்படியே கிடைப்பதால் உடல் ஆரோக்கியமுடன் விளங்குகிறது.

உதாரணமாக கேரட்டைத் தினமும் உண்பதால் கண்நோய், வயிறு, குடல்நோய், ரத்தக்குழாய் அடைப்பு, ஞாபகமறதி, வறட்சியான சருமம், மாதவிலக்கு வலி, ரத்த சோகை, மூட்டுவலி தீரும். பீன்ஸில் இரும்புச்சத்தும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அதிகம் உள்ளதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

முட்டைக்கோஸில் நார்ச்சத்துடன் பொட்டாசியம் உப்பும் உள்ளதால் ரத்த சுத்தியும், உடல் சுத்தியும் கிடைக்கிறது. நார்ச்சத்துடன் போலிக் அமிலம் அதிகமிருப்பதால் புற்றுநோய், இதயநோய் முதலியவற்றுக்கு அவரைக்காய் அருமருந்து.

ஏதாவது புதிதாகக் கண்டுபிடித்து புகழ் பெற வேண்டும் என விரும்புபவர்கள் பசலைக்கீரையை உண்ண வேண்டும். இது புதுப்புது யோசனைகளை மூளைக்கு அள்ளித் தருமாம்.

வெண்டைக்காய் கண்கள், கால்கள் எரிச்சலைப் போக்கி உடம்பைக் குளிர்விக்கும். நீங்கள் அழகான உடல்வாகு பெற வேண்டுமானால் வைட்டமின் பி2 நிரம்பியுள்ள முள்ளங்கியைத் தொடர்ந்து சாப்பிடவும். முருங்கை, புதினா, கொத்தமல்லி ஆகியவை ரத்தவிருத்தி செய்யும். ""யானையின் மதம் அடக்க வாழைத்தண்டு, மனிதனின் திமிர் அடக்க கீரைத்தண்டு'' என்பார்கள்.

பிரமிடில் அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவை பழவகைகள். உண்ண வேண்டிய அளவு தினசரி 250 கிராம் முதல் 300 கிராம் வரை. நமது ரத்தம் இயற்கையில் காரத்தன்மை உடையது. இது அமிலத்தன்மை உடையதாக மாறும்போதுதான் பலவித நோய்களும் உருவாகின்றன. பழஉணவுகள் காரத்தன்மையுள்ள உணவுகள். இவைகள் சளியை உண்டாக்குவதில்லை. சளியையும், ரத்தத்திலுள்ள கழிவையும் வெளியேற்றி ரத்தத்தின் அமில காரத்தன்மையைப் பாதுகாக்க பழங்கள் பெருமளவு உதவி புரிகின்றன.

இதன் சிறப்பை உணர்ந்துதான் நீரிழிவு நோயாளிகள் தினமும் 250 கிராம் வரை பழங்களை உண்ணச் சொல்லி நீரிழிவு சிகிச்சை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நாளமில்லாச் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்ய ஆப்பிள் பழத்தைத் தோலுடன் சாறு எடுத்து அருந்துங்கள். தினமும் மது அருந்துபவர்கள் அதிலிருந்து விடுபட விரும்பினால் பப்பாளி சாப்பிடுங்கள். மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருபவரா, தினமும் நெல்லிக்கனி சாப்பிடுங்கள். அதிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

புற்றுநோய், இதயநோயால் பாதிக்கப்பட்டவராயிருந்தால் மாதுளம் பழத்தைத் தினமும் சாப்பிடுங்கள். மேலும் ரத்தத்தை விருத்தியடையச் செய்து அடிக்கடி ஏற்படும் தலைவலி, பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிலக்கு, இதய படபடப்பு முதலியவற்றை இது நீக்குகிறது.

பழவகைகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவை பயறு வகைகளும் (தினமும் 400 கிராம்) தானியங்களும் (தினமும் 250 கிராம்).

முளைவிட்ட கோதுமை, வறுத்த வேர்க்கடலை இவற்றில் "பைரிடாக்சின்' எனும் வைட்டமின் பி6 சத்து இருப்பதால் இவை ரத்தக்குழாய்கள் தடிமனாவதைத் தடுக்கிறது. உங்களின் குழந்தை பிடிவாதக் குழந்தையா? ""பருப்புகளின் அரசன்'' என்றழைக்கப்படும் பாதாம்பருப்பை சிறிதளவு தினமும் கொடுத்துப் பாருங்கள். செல்லக்குட்டி சமர்த்துக் குட்டியாகிவிடும்.

மனித மூளையிலுள்ள ""லிம்பிக் சிஸ்டம்'' என்ற அமைப்பே நம்மை எப்போதும் மனமகிழ்வுடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த முறையைப் பாதுகாக்க உதவும் ஓர் எளிய உணவு ஓட்ஸ். நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, புகைப்பிடிப்பதில் ஆர்வம், உடற்பருமன், புற்றுநோய் முதலியவற்றையும் ஓட்ஸ் கட்டுப்படுத்துகிறது. தவிர ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட கோலை ஊன்றி நடப்பவரும் கோலை வீசி நடக்கலாம்.

பச்சைப்பயறு, நிலக்கடலை, வெல்லம் சேர்ந்த ""நிலக்கடலை பால்பாயாசம்'' வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், மூளை தெளிவிற்கும் அதிகப் பயன் அளிக்கிறது. உலகிலேயே அழகான தலைமுடியைப் பெற்றவர்கள் சுவிட்சர்லாந்து மக்களாம். காரணம் பாஸ்பரஸ், சிலிக்கான் தாது உப்புக்கள் அடங்கிய தானியம் மற்றும் பல வகைகளை உணவில் நிறைய சேர்த்துக் கொள்வதுதானாம்.

பிரமிடில் அடுத்த இடத்திலுள்ள பால், தயிர், மோர் இவைகள் புரதச்சத்துக்காகவும் எலும்புகளின் கால்சியத் தேவைக்காகவும் பரிந்துரைக்கப்படுகின்றன. ""நீர் சுருக்கி, நெய் உருக்கி, மோர் பெருக்கி உண்'' என்பது நோயற்ற வாழ்விற்காக நம் முன்னோர்கள் கூறிய பொன்மொழி. தயிரை நன்கு கடைந்து சிலுப்பி மோராக்கி அருந்த உஷ்ண நோய்கள் பலவும் தீரும். இவைகளின் அளவு சராசரியாக 1 நாளைக்கு 250 மிலி.

அடுத்த இடத்திலுள்ள மாமிசம், எண்ணெய் இவைகளை கூடுமானவரை மிதமாகப் பயன்படுத்தல் நலம். ஆக, ""வாழ்வதற்காக உண், உண்பதற்காக வாழாதே'' என்ற நம் முன்னோர்களின் பொன்மொழியை நாம் அனைவரும் அவசியம் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய தருணம் இது.

ஏனெனில் புதுப்புது நோய்களால் மனிதகுலம் அல்லலுறும் இவ்வேளையில் செல்வம் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம். உடல்நலம் போனால்?

(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை & நீர் உணவு மருத்துவ மையம், கோபி.)

Source : www.dinamani.com - Friday January 12 2007

Power Saving



Source : Dinathanthi Newspaper

Thursday, October 23, 2008

Railways should adopt fair practices

CONSUMER NOTES
Railways should adopt fair practices
S PUSHPAVANAM

Railways managed a profit of Rs 13,534 crore last year after paying dividends. Its freight revenue improved and passenger revenue was up by 14%. The operating ratio has come down to 76% from the average 85% in the last decade and is fixed at 73.6 % this year. However, there has not been any meaningful debate on how it was achieved.
But I must give the devil its due. Wagons are ready for use again within 4.5 days. It used to be 7.5 days earlier. Overloading, done hitherto by greasing palms, now has a surcharge, fetching more revenue. Wagon production reached 15,000 a year. Return on capital is 21%. Growth by fair means is welcome. What is not welcome and unfair is that much of the “turn around” has been achieved at the expense of the passengers, taking them for a ride at their own cost.
For one, the safety surcharge on tickets, which met its target of Rs 5,000, has been silently renamed “development fund” and is continued without the consent of the Parliament and the consultative committee on railways. Next is the blatantly unfair return journey surcharge of Rs 10 for sleeper class and Rs 15 for A/C classes. When no extra service is rendered, there should be no extra cost. All these years, there was no surcharge. If the journey starts from any station other than the one where you book the ticket, it is considered a return journey. If you bought a ticket from Kanpur to Nagpur and back, at Chennai, it would be treated as two return journeys. More than Rs 300 crore go to the kitty this way. In fact, it should cost less, as the money is paid upfront.
Another strategy is to rename the trains super fast and collect a super fast surcharge of Rs 20 for sleeper class, Rs 30 and Rs 50 for other A/C classes. In 2004, we had 286 trains; now we have 590.
The norm of 55 kmph was fixed by the railways for the first time in 1992 when the Consumer Protection Council filed a case in Supreme Court. Even now there are several super fast trains that run at less than 55 kmph. A few samples will show the absence of rationale but desire for profit.
The Chennai-Kovai Express takes four-and-a-half hours to cross a distance of 334 km between Chennai and Salem, averaging 75. 62 kmph. The recently introduced Chennai-Salem train takes seven-and-a-half hours to cross the slightly longer distance of 354 km as it is via another route, averaging 47.73 kmph. Both of them are super fast trains. To boot, the passenger who has to journey a longer time ends up paying Rs 17 more in the A/C three-tier and Rs 6 more in sleeper class. The 2555, a super fast, covers 117 km between New Delhi-Biwani in two hours and 45 minutes, averaging 42.55 kmph while the 2553 Gorakpur-New Delhi train covers a distance of 719 km in 13 hours and 25 minutes, averaging 53.59 kmph.
While super fast trains have some norm, express trains have no speed norms even now. So you have some express trains running slower than a fast passenger train. The 887 Tiruchi-Palakkad fast passenger covers Tiruchi-Coimbatore, a distance of 243 km, in five hours and 55 minutes, averaging 42 kmph while the same distance is covered by the Chennai-Mangalore Express in six hours and 45 minutes, averaging 31.9 kmph. While one pays Rs 60 to reach quicker, another pays Rs 139 to reach later. An in-depth study will reveal more such instances.
Finally, the revenue is literally squeezed out of the passenger by making him lie in a side middle-berth. Getting onto the berth and out of it is near impossible for adults and four people have to sit in one lower berth to accommodate this extra person. This failed experiment must be stopped.
What can the consumer do? Write in your protests to the railway minister. A public interest litigation before the National Consumer Commission may also change things. Railways should fix a speed norm of 55 kmph for express trains and 66 kmph for super fast trains. Fair revenue is better than unfair surplus.
(The writer is Secretary, Consumer Protection Council, Tamil Nadu, Tiruchi, and can be reached at consumerpc@rediffmail.com)

Source: www.timesofindia.com - 22.10.2008

வெள்ள நிவாரணப் பணிகள்:11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

வெள்ள நிவாரணப் பணிகள்:11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை, அக். 22: சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களி லும் வெள்ளத்தடுப்புப் பணிகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ள 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை நியமிக்கப் பட்டுள்ளனர்
பொதுமக்களின் புகார்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள் ளும் வகையில் இந்த சிறப்பு அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செல்போன் எண்கள்: தண்டையார்பேட்டை- ஆர். தியாகராஜன் 9445191451, பேசின் பிரிட்ஜ்- அதுல் ஆனந்த் 9445191452, புளியந்தோப்பு- கே. பனீந்தர் ரெட்டி 9445191453 மற்றும் மாலிக்பெரோஸ்கான்-9445191461, அயனாவரம்- என்.முருகானந்தம் 9445191454, கீழ்ப்பாக்கம்- எம்.ஆர். மோகன் 9445191455, ஐஸ்ஹவுஸ்- ஆர். ஜெயா 9445191456, நுங்கம்பாக்கம்- சுப்பிரியா சாகு 9445191457, கோடம் பாக்கம்-ஆர். வெங்கடேசன் 9445191458, சைதாப்பேட்டை-குமார் ஜெயந்த் 9445191459, அடையாறு- ஆர். சிவக்குமார் 9445191460.

Source: www.dinamani.com - 23.10.2008

Saturday, October 18, 2008

Friday, October 17, 2008

உறக்கம் கலையட்டும்..!

உறக்கம் கலையட்டும்..!

ஒருபுறம் வளரும் பொருளாதாரங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்று மேலைநாடுகள் ஏளனம் செய்கின்றன. இன்னொருபுறம், இந்த வளரும் பொருளாதாரங்களில் ஊழலை அதிகப்படுத்துவதுடன், ஊழல் மூலம் உருவாகும் கறுப்புப் பணத்தைத் தங்களது வளர்ச்சிக்கு எடுத்துச் செல்கின்றன. ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் கறுப்புப் பணத்தை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பவர்கள், வளரும் பொருளாதாரங்களில் ஊழல் மலிந்துவிட்டது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளின் கூட்டமைப்பு, 2006-ம் ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. சுவிஸ் வங்கிகளில் மிக அதிகமாக ரகசியப் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருக்கும் நாடுகள் என்று இந்தியா, ரஷியா, இங்கிலாந்து, உக்ரைன் மற்றும் சீனாவைப் பட்டியல் இடுகிறது அந்த அறிக்கை. அதில் 1,456 பில்லியன் டாலர்களுடன் (அதாவது, 55 லட்சம் கோடி ரூபாய்!) முதலிடத்தில் இருப்பது நமது இந்தியாதான். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுகிறோமோ இல்லையோ, இந்த விஷயத்தில் நமக்குத்தான் தங்கப் பதக்கம்!

உலக நாடுகளின் கறுப்புப் பணத்தை எல்லாம் சேர்த்தாலும்கூட, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கும் கறுப்புப் பணம்தான் அதிகம் என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும். இந்தப் பணம் கணக்கில் வராத, முறையான வகையில் சம்பாதிக்கப்படாத லஞ்சப் பணமாகத்தான் இருக்கும் என்பதையும் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்கு இந்தியாவின் சொத்து சூறையாடப்பட்டு வெளியேறி இருக்கிறது என்று அர்த்தம்.

கறுப்புப் பணம் உள்நாட்டிலேயே புழங்கும்போது, விலைவாசி உயரும் அபாயம் இருக்கிறது என்றாலும், பொருளாதாரம் சுறுசுறுப்பாகச் செயல்படும் என்பதுதான் நிபுணர்களின் கருத்து. அதேநேரத்தில், இந்தியாவின் செல்வம் அயல்நாடுகளுக்குக் கடத்தப்படும்போது நமது பொருளாதார முன்னேற்றத்தில் நிச்சயமாக பாதிப்பு இருக்கும்.

இன்னொரு ஆராய்ச்சிக் குறிப்பின் தகவல்படி உலகளாவிய கோடீஸ்வரர்களின் சொந்த சொத்தான கறுப்புப் பணம் சுமார் 11.5 ட்ரில்லியன் டாலர்களாம். அதாவது, 100 கோடி என்பது ஒரு பில்லியன். 1000 பில்லியன் ஒரு ட்ரில்லியன். கணக்குப் போட்டுப் பார்த்தால் நமக்குத் தலைசுற்றுகிறது. இத்தனை பணமும், உலகிலுள்ள 70 "வரி ஏய்ப்பவர்களின் சொர்க்கங்கள்' என்று அழைக்கப்படும் நாடுகளில் உள்ள ரகசிய வங்கிகளில் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வங்கிகள் இந்தப் பணத்தை வளர்ச்சி அடைந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடனாகக் கொடுக்கின்றன. இந்த வங்கிகளில் முதலீடு செய்பவருக்குத் தங்கள் கறுப்புப் பணத்திற்குக் குறைந்த வட்டி கிடைத்தால் போதும். தங்களது பெயர் வெளியில் தெரியக்கூடாது என்று பணம் போடுபவர்கள் விரும்புவதுபோல, பணம் எங்கே டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதும் ரகசியமாக வைக்கப்படுகிறது. இடைத்தரகர் மாயமாகி விட்டால், போட்டு வைத்த முதலும் "அம்போ'தான்.

1970-களில் பின்தங்கிய மற்றும் வளரும் பொருளாதாரங்களிலிருந்து இந்தக் கறுப்புப் பண வங்கிகள் மூலம் வளர்ச்சி அடைந்த பொருளாதார வல்லரசுகளுக்குக் கைமாறிய பணம் மட்டும் சுமார் 5 ட்ரில்லியன் டாலர்கள் என்கிறது இன்னொரு அறிக்கை. உலகின் 1 சதவீத மக்கள் மொத்த உலகப் பொருளாதாரத்தின் 57 சதவீதத்துக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.

இப்படி, மற்ற நாடுகளின் கறுப்புப் பணத்துக்குப் பாதுகாப்பு அளிக்க இன்னொரு நாடு முன்வருவது என்பது எப்படி ஐக்கிய நாடுகள் சபையால் அனுமதிக்கப்படுகிறது என்று இதுவரை எந்த நாடும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை. காரணம், ஒவ்வொரு நாட்டின் அதிபரும் தங்களது கறுப்புப் பணத்தை இதுபோல வெளிநாடுகளில் வைத்திருப்பதுதான்.

இன்னொரு விஷயம். இந்தக் கறுப்புப் பணத்தைக் கையாளும் வங்கிகளும், அதன் முகவர்களும், திருட்டுப் பொருளை வாங்கி விற்பவர்கள் போன்ற சமூக விரோதிகள். படித்தவர்கள், கோட்டும் சூட்டும் அணிந்து ஆங்கிலம் பேசுபவர்கள் என்பதால் அவர்கள் யோக்கியமானவர்கள் ஆகிவிட மாட்டார்கள். யாரும் கேள்வி கேட்க முடியாத, கணக்கு வழக்கு இல்லாத பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கையாளும் இவர்கள் தீவிரவாதிகளுக்கும், சர்வதேச ஆயுதக் கடத்தல்காரர்களுக்கும் உதவவில்லை என்பது என்ன நிச்சயம்?

உலகம் விழித்துக் கொள்ள வேண்டிய வேளை வந்துவிட்டது!

Source : www.dinamani.com - Thursday October 16 2008 00:00 IST

நன்று கருது!

பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பீடித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது ஆச்சரியம் அளிக்கிறது.

பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்றுதான் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர, புகை பிடிக்கவே கூடாது என்று சட்டம் சொல்லவில்லை. மேலும், பொது இடங்கள் என்று அரசினால் பட்டியலிடப்படும் இடங்களில் சிகரெட் புகைப்போர்தான் அதிகம். பீடி புகைப்போர் எண்ணிக்கை, குறிப்பாக தமிழகத்தில், மிகவும் குறைவு. ஆகவே அரசின் புதிய சட்டம், பீடித் தொழிலாளர்களுக்கு பெரிய பாதிப்பாக அமையும் என்று சொல்ல இயலாது.

இத்தனை ஆண்டுகளாக பீடித் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய தடையே சிகரெட் உற்பத்தியாளர்கள்தான். அரசு நிர்ணயிக்கும் அளவைக் காட்டிலும், ஒரு சென்டிமீட்டர் குறைவான உயரத்தில் சிகரெட்டுகளை சந்தைக்குள் நுழைத்து, விலையையும் குறைத்து, பீடிச் சந்தையை கைப்பற்ற முயன்றவர்கள் சிகரெட் உற்பத்தியாளர்கள். இந்தச் சட்டம் எந்தவொரு காரணத்தாலும் திரும்பப் பெறப்படுமானால், அதனால் மேலதிகமாக மீண்டும் பயன்பெறப் போவது சிகரெட் உற்பத்தியாளர்களே தவிர, பீடி உற்பத்தியாளர்கள் அல்ல. பிறகு எதற்காக இந்தப் போராட்டம் என்று வியப்பாக இருக்கிறது.

புகை பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் நோய்க்கு ஆளாகி இறக்கிறார்கள். காசநோய், ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணமே இந்த புகைப்பிடிக்கும் வழக்கம்தான். மற்றவரது புகையை சுவாசிக்க நேர்வதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் அதிகம். இந்த உண்மைகள் தெரிந்திருந்தும், இந்த சட்டத்தைத் திரும்பப் பெறச் சொல்லி போராட்டம் நடத்துவது பொதுநன்மைக்கு எதிராக அமைந்துவிடும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அயல்நாடுகளில் பொதுஇடங்களில் புகை பிடிக்கத் தடை விதித்தபோது, எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தற்போதும் தெரிவித்துக்கொண்டிருப்பவர்கள் யார் என்றால் சிற்றுண்டிச்சாலைகள், ஓட்டல்கள் போன்ற நிறுவனங்கள்தான்.

பொது இடத்தில் புகைபிடிக்க தடை காரணமாக உணவு அருந்தவும், குடிக்கவும் வெளியே வெளியே வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றும், இதனால் உணவுக்கூடத்தின், ஓட்டலின் வியாபாரம் குறைந்துவிட்டது என்றும் தங்கள் இழப்பை பட்டியலிட்டு, இதனால் ஆட்குறைப்பு செய்து பலர் வேலை இழந்துள்ளார்கள் என்றெல்லாம் முறையிடுகின்றன. இந்தச் சட்டத்தால் பொதுமக்களின் ஆயுள் கூடிவிடும், பின்னர் பொதுசுகாதாரத் துறையின் செலவு மேலும் அதிகரிக்கும் என்று ""அறிவுப்பூர்வமான'' வாதங்களை முன்வைக்கவும் தவறுவதில்லை.

மேலும், இத்தகைய சட்டங்களால், அந்நாடுகளில் புகைப்பிடிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என்ற உண்மை தரும் மகிழ்ச்சிக்கு இவர்கள் சொல்லும் வர்த்தக இழப்புகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. புகைப்பிடிப்போரிடத்திலும்கூட, அவர்களது அன்றாட சிகரெட் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சொல்லப்படும் புள்ளிவிவரங்கள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. அதேபோன்ற நிலைமை இந்தியாவிலும் ஏற்படும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

இத்தகைய சூழலில், இந்தியாவிலும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை கொண்டு வந்திருப்பதை வரவேற்க வேண்டிய வேளையில், வரவேற்பது மட்டுமின்றி இச்சட்டத்தை உயிர்ப்புடன் நடைமுறைப்படுத்தவும், புகைப்பிடிப்போர் பான்பராக் போன்ற புகையிலைக்கு மாறுவதைத் தடுக்கவும் புதிய வழிமுறை காண வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய நேரத்தில், சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோருவது முறையா? அதிலும் பீடித் தொழிலாளர்களுக்கு எந்த ஆதாயமும் இதனால் கிடைக்காது என்ற நிலையில், எதிர்ப்பது சரியா?

Source: www.dinamani.com - 15.10.2008

Monday, October 6, 2008

19 மாநிலங்களில் நிலத்தடி நீரில் மாசு : அதிர்ச்சியூட்டும் ஆய்வு

19 மாநிலங்களில் நிலத்தடி நீரில் மாசு : அதிர்ச்சியூட்டும் ஆய்வு

புதுடில்லி: "தமிழகம் உட்பட 19 மாநிலங்களில், நிலத்தடி நீர் அசுத்தமாகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது என்பது அரிதாக இருக்கும்' என ஆய்வில் தெரியவந்துள்ளது.விரிவடைந்து நகரங்கள், பெருகிவரும் வீடுகள், போன்றவற்றால் நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்மாக குறைந்து வருகிறது. நகருக்குவெளியே உள்ள ஏரி, குட்டை, குளங்கள் எல்லாம் மனைகளாகி வருகின்றன. இவைதான் நிலத்தடிக்கு ஆதாரமாக விளங்கியவை. நகரங்கள் விரிவடைவதால், இவையெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகி வருகின்றன.


கொஞ்ச தண்ணீரும் இனி : இப்படி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் பல ஆண்டுகளாக குடியிருந்துவிட்டால், அவருக்கு சொந்தமாக்கி கொள்ளவும் அரசுகள் சலுகை காட்டுகின்றன. இதன் காரணமாக, நீர்நிலைக் கால்வாய்கள் எல்லாம் இப்போது கழிவு நீரை வெளியேற்றும் சாக்கடைகளாக மாறுகின்றன. இதனால் சில இடங்களில் தண்ணீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக பல இடங்களில் மக்கள் புலமபுகின்றனர். தற்போது பல இடங்களில் கிடைக்கும் கொஞ்ச தண்ணீரும் இனி எத்தனை நாளைக்கு என்ற கேள்வி எழுந்து வருகிறது. இப்போதுள்ள நிலையில் தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் 200 மாவட்டங்களில், நிலத்தடி நீர் அசுத்தமாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது.நிலத்தடி நீர் அசுத்தமாகிறது என்றால், உப்புத்தன்மை, இரும்பு, புளோரைட், நச்சுத்தன்மை ஆகியவை அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.


நச்சுத்தன்மை : உப்புத்தன்மையும், இரும்பும் அதிகமாக தண்ணீரில் கலந்து இருப்பதால் காய்கறிகளை வேகவைத்தால், பசுமைத்தன்மை போய் கறுப்பாக மாறிவிடும். அதே போல் புளோரைடும் , நச்சுத்தன்மையும் இருந்தால் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். மேலும் புளோரைட் அதிகமுள்ள தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும். நச்சுத்தன்மை அதிகமுள்ள தண்ணீரால் தோல் நோய்கள், தோல் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பீகார் ,அசாம், அரியானா, இமாச்சலபிரதேசம், குஜராத், ம.பி., உ.பி., மகாராஷ்டிரா, ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், டில்லி ஆகிய மாநிலங்களில், மொத்தம் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில், நிலத்தடி நீர் அசுத்தமாகி வருகிறது தெரியவந்துள்ளது.


டில்லியில் நஜாப்கர், கஞ்ச்வாலா, மெக்ருலி, மண்டலங்களில் நிலத்தடி நீரானது உப்பாக உள்ளது. இதே நிலை உ.பி.யில் ஆக்ரா, மதுரா, ஆகிய மாவட்டங்களில் நிலவுகிறது.பீகாரில் பாட்னா மற்றும் போஜ்பூர் மாவட்டங்களிலும், உ.பி.யில் பாலியா, மேற்கு வங்கத்தில் மால்டா, நாடியா, ஹூக்ளி, முர்சிதாபாத், ஹவுரா ஆகிய மாவட்டங்களிலும் நீரில் நச்சுத்தன்மை கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.

Source : www.dinamalar.com - 06.10.2008

Saturday, October 4, 2008

நல்லதை நாடு கேட்கும்

நல்லதை நாடு கேட்கும்

அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புக்கு புகையிலைப் பழக்கம் ஒரு முக்கியமான காரணம் என்பது உலகறிந்த உண்மை. அதிலும் புகை பிடிக்கும் பழக்கத்தால் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 12 கோடி பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பொதுஇடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருப்பதை வரவேற்காமல் இருக்க முடியாது. ஏற்கெனவே தில்லி, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, கேரளம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தத் தடை இருந்து வருகிறது. அதேபோல ரயில்களில் புகை பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 9 லட்சம் பேர் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களால் மரணமடைகிறார்கள் என்பதும், புகைபழக்கம்தான் ஆண்களில் ஐந்து பேர்களில் ஒருவர் மரணமடையக் காரணமாக இருக்கிறது என்பதும் அதிர்ச்சி தரும் தகவல்கள். புகைபிடிப்பதை முழுமையாக ஒழித்துவிட முடியாது என்றாலும், புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், புதிதாகப் புகை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை எச்சரிப்பதற்கும் இதுபோன்ற சட்டங்கள் நிச்சயம் உதவும்.

புகை பிடிப்பவர்களால் அவர்களது உயிருக்கு மட்டுமல்லாமல், புகை பிடிக்காத மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் கண்டனத்துக்குரிய விஷயம். பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் வெளியேற்றும் புகை சுற்றியிருக்கும் மற்றவர்களைப் பாதிக்கிறது என்பதுடன் பல தொற்றுநோய்கள் பரவவும் காரணமாக அமைகிறது. புகை பிடிப்பது தங்களது தனிமனித சுதந்திரம் என்று கூறுபவர்கள், சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் மற்றவர்களின் சுதந்திரத்தைப் பற்றியும் கவலைப்பட்டாக வேண்டும்.

வளர்ச்சி பெற்ற நாடுகளில் புகை பிடிப்பவர்களுக்கென்று விடுதிகளில் தனி அறைகள் ஒதுக்கப்படுகின்றன. பொது இடங்களில்கூட தனியாக இடம் ஒதுக்கி அங்கே புகை அகற்றும் கருவிகள் பொருத்தப்படுகின்றன. மற்றவர்கள் புகைப்பதால் நல்ல காற்றைச் சுவாசிக்கும் தனது சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்கிற வாதம் மேலை நாட்டு அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் புகை பிடித்தால் எச்சரிக்கை ஒலியை எழுப்பும் கருவி ஒவ்வோர் அறையிலும் பொருத்தப்பட்டு அதை மீறி புகைபிடித்தால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

ஹாங்காங், அயர்லாந்து, தாய்லாந்து, கனடா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, எகிப்து, ஸ்காட்லாந்து, பனாமா போன்ற நாடுகளில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே, புகை பிடிப்பதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளை விளக்கும் அறிவிப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற சட்டங்களால் புகைபிடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று கேட்பவர்களுக்கு ஒரு தகவல். துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் திறந்தவெளி அல்லாத இடங்கள் அனைத்திலும் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஒரே வருடத்தில் புகை பிடிப்பது கணிசமாகக் குறைந்திருப்பதை சிகரெட் விற்பனை காட்டுகிறது. விற்பனையில் சுமார் 52 கோடி சிகரெட்டுகள் குறைந்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சிகரெட் தயாரிப்பவர்கள் மத்திய அரசின் சட்டத்தைத் தடை செய்ய பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அவர்களது தூண்டுதலின் பேரில் உணவு விடுதி நடத்துபவர்கள் அரசின் சட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டில் இதேபோன்ற வழக்கு ஒன்றில், "ஒவ்வொரு மனிதனின் உயிருக்கும் உத்தரவாதம் அளிப்பது என்று கூறும்போது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தந்தாக வேண்டும். அதனால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்' என்று இதேபோன்ற வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

உணவு விடுதிக்காரர்கள் கூறுவதுபோல, இந்தத் தடை அவர்களது வியாபாரத்தைப் பாதிக்கும் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமன்று. சொல்லப்போனால், மற்றவர்கள் ஊதித் தள்ளும் புகையைச் சுவாசித்து தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள விரும்பாத பலர், இந்தத் தடைக்குப் பிறகு உணவு விடுதிகளுக்குச் செல்வது அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

மக்கள் நல்வாழ்வில் அக்கறை செலுத்துவதுதான் ஒரு நல்லாட்சிக்கு அடையாளம். அந்தவகையில் நல்லதொரு சட்டம் இது. முறையாகவும் கடுமையாகவும் அமல்படுத்தியே தீரவேண்டிய சட்டம். பாராட்டுவதுடன் நின்றுவிடாமல் அரசுக்கு ஒத்துழைப்பையும் தருவது நம் அனைவரது கடமை.

Source : www.dinamani.com - 04.10.2008

Reserve Bank of India- credit card complaint

CONSUMER NOTES
Helping tackle complaints against banks
S PUSHPAVANAM

The word ‘ombudsman’ means a ‘grievance man’, a public official who is appointed to investigate complaints and intervene for the ordinary citizen in his dealings with public bodies. The Scandinavians were the first to innovate the concept of an ombudsman. But it was the British who first established the Banking Ombudsman (BO) in 1986, covering private sector business. The Reserve Bank of India (RBI) introduced BO in 1995. As expectation grew, the scheme was amended in 2002 and again in 2006 and credit cards were included in the scheme.
All commercial banks, including rural and primary cooperative banks, come under this ombudsman. He is appointed by the RBI which fully funds this scheme. He can be work from anywhere in the state although his office is in Chennai. There are 15 such BOs in India.
You can complain directly or through an authorised representative, like a consumer organisation, either online, by e-mail (bochennai@rbi.org.in) or in writing against the deficiency, failure or delay to provide the promised banking facilities services. The new grounds added include credit card issues, non-adherence to fair practices code and levying of excessive charges without prior notice. But one must give the bank a month to solve the dispute and, within a year, approach the BO. The ombudsman will send a copy of the complaint to the bank concerned and attempt conciliation. If it fails, the ombudsman will give its award or reject the complaint.
The ombudsman may order compensation for the loss suffered by the complainant as a direct consequence of the commission or omission of the bank or may give a direction to the bank. It will not exceed Rs 10 lakhs.
If it is a credit card complaint, the ombudsman can take into account the loss of complainant’s time, expenses incurred by the complainant and also the financial loss, harassment and mental anguish suffered by the complainant while giving the compensation. The Appellate Authority for BO is the Deputy Governor of RBI.
The consumer may state in plain paper or in the form downloaded from www.rbi.org, the name and address of the bank or branch, his own name and address, then state the grievance in detail with supporting documents, if any, of the nature and extent of loss and specifying the relief he seeks.
After the amendment in 2006, the complaints increased four-fold. In 2006-07, BO all over the country has received nearly 40,000 complaints and the Chennai BO, 2387. The online submission and inclusion of credit cards have boosted the figure.
In one case, for damaging a card holder’s reputation by wrongly classifying him as a defaulter, the BO directed the
credit card issuer to pay Rs 25, 000 as compensation for the inconvenience, mental agony and loss of prestige caused by their error in reporting. The BO should look at complaints as feedback and not as workload.
In the UK, the financial services ombudsman has replaced the BO, covering mortgage endowments, insurance, and other financial services in 1999. Out of over six lakh queries received over phone, mail and in writing, one-sixth became cases and 94% of them were settled informally. For compensations including repayment of deposits, there is a separate scheme.
The BO is inexpensive and an expeditious mechanism compared to consumer fora. If non-banking finance companies are also covered, as in the UK, it would offer better protection to unwary consumers.

Source : Times Of India - 03.10.2008
http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQ0gvMjAwOC8xMC8wMyNBcjAwNjAx&Mode=HTML&Locale=english-skin-custom

Radiation from mobile towers wipes out birds

Radiation from mobile towers wipes out birds
World Wildlife Week: Common Birds Turn Rare In Cities While Efforts Continue To Save Green Space
Arun Ram | TNN

Chennai: Set a bird song as your mobile ringtone. For that may soon be the only way you get to hear from our winged friends — studies show that the increasing number of cell phone towers in cities is bringing down bird population.
While studies in Spain and Belgium have established the ill-effects of electromagnetic radiation (EMR) emitted by cell phone masts on birds, a study to be published next month by a team in Panjab University has found that EMR can damage bird eggs and embryos. The study, conducted in Chandigarh, is applicable to all Indian cities where cell phone masts are proliferating. Chennai has 4,000 cell phone towers, compared to about 200 in Chandigarh.
Researchers at the Salim Ali Centre for Ornithology and Natural History (SACON), Coimbatore, say there are enough reasons to attribute bird mortality to such radiation. “Cell phones and towers emit a very low frequency of 900 or 1,800 MHz, called microwaves. Studies have found that they can cause thin skulls of chicks and thin egg shells,” says Dhanya R, a researcher at SACON.
The team at the Centre for Environment and Vocational Studies of Panjab University, headed by RK Kohli, exposed 50 eggs to EMR for durations of five minutes to 30 minutes. “All the 50 embryos were damaged. It’s almost like being microwaved,” Kohli told TOI.
Chennai-based zoologist Ranjit Daniels says four of the 200-odd Chennai birds — house sparrow (Passer domesticus), redwhiskered bulbul (Pycnonotus jocosus), brahmini kite (Haliastur indus) and spotted dove (Streptopelia chinensis) — have virtually disappeared. “Birds are known to be sensitive to magnetic radiation. Microwaves can interfere with their sensors and misguide them while navigating and preying,” says Daniels. WORLD WILDLIFE WEEK Where have all the birds gone? Sparrows, Brahminy Kites, Red-Whiskered Bulbuls And Spotted Doves Have Disappeared From City Skies
Chennai: Early in 2005, a friend threw a challenge at R K Kohli, coordinator of Centre for Environment and Vocational Studies, Panjab University: “Can you show me one sparrow on the campus?” Thinking it would be an easy task, Kohli agreed. “I won the bet, but it took me several days,” says Kohli.
So, when the centre decided to study in December 2005, the impact of electromagnetic radiations (EMR), Kohli decided to include sparrows in the list of organisms that the radiations affect. Three years later, the study found microwaves (300 MHz to 300 GHz) emitted by cell phone towers and handsets responsible for damaging eggs and embryos. And
that is just one of the urban factors driving out several species of birds out of the cities.
Chennai is no exception. According to zoologist R a n j i t Daniels, at least four of the 200-odd species of birds of Chennai are fast disappearing. On their way out are house sparrows, redwhiskered bulbuls, brahminy kites and spotted doves. “These are birds which have always been around. Now they are nowhere to be seen,” says Daniels, attributing it to an increase in population of rodents which steal eggs, disappearing open grasslands, rising temperature and modern bird-unfriendly architecture. “House sparrows used to live in crevices of buildings. The new glass houses don’t leave any space for them,” he says.
P A Azeez, senior principal scientist at Salim Ali Centre for Ornithology and Natural History, concurs: “Urban birds have the habit of finding an urban analogue for their wild nests. Pigeons, which are multiplying in large numbers in cities, find ventilators an analogue to their natural rocky confines. Whichever bird finds an analogue survive.” That perhaps explains the case of the disappearing brahminy kites which nest only on very tall trees.
Azeez also blames the supermarket culture. “Gone are the days of malligai kadais (old provisions stores) where birds came to feed on food grains. Today everything is packaged. The colourful plants in city gardens do not offer enough nectar or fruits for these birds,” he says. His
research student Dhanya R adds another cultural dimension to the food scarcity when she notes that bird feeding, once a regular ritual in Tamil Nadu homes, is no longer in vogue.
Daniels adds an unusual angle when he holds trees planted by urban planners as villains. “Originally, Chennai was a coastal area with bushes suited for several birds. Big trees with large canopies are
not suited for birds like the bulbul and sparrows. With the expansion of city, many of these birds are migrating to the suburbs or farther,” he says.
Since man domesticated chicken some 6,000 years ago, several birds have learnt to share his habitat, but now, modernisation is driving them out. Daniels says the kind of birds will keep changing with the urban habitat. “Sparrows might have come to Indian cities only in the last century. The Bible has repeated references of sparrows, indicating that they were in abundance in the Middle East 2,000 years ago. Tamil folklore has reference to chittukuruvi, but the word could mean any small bird,” says Daniels. The message: Birds may come and go for a few centuries, which is just a miniscule span in the evolutionary cycle. As cities continue to grow, some birds, mainly scavengers like crows would proliferate at the expense of other birds. Experts may be divided on the reasons for the disappearance of birds, but everyone agrees on one bad news: Once gone, these b i rd s would never be back.

RARE SIGHT: Birds such as sparrows are becoming rare in cities


Scientific name: Pycnonotus jocosus Common name: Red-whiskered bulbul Local name: Thondaikoluthi
Characteristics: The
red-whiskered bulbul
has a brown
plumage on its head with a black pointed crest. It has red tufts behind its eyes, a dark collar, white underparts and crimson red undertail coverts. Both the male and female red-whiskered bulbuls look alike
Habits: They are usually found in pairs. Redwhiskered bulbuls are largely sedentary and do not move around much. They feed on insects and fruits
Habitat: Red-whiskered bulbuls inhabit trees, bushes and gardens in human settlements. They usually nest in bushes
Reason for disappearance:
Shrinking bushes and gardens are the reasons for the disappearance of the red-whiskered bulbul


Scientific name: Streptopelia chinensis Common name: Spotted dove Local name: Manippura
Characteristics: The spotted dove is approximately the same size as as mynah. It’s upper parts are pinkish brown with a grey tint. It has a spotted back with white chessboard pattern from its hind neck. It has a dark brown tail with a white border, white belly and white undertail. It has magenta legs and feet. Both male and female spotted doves look alike Habits: Spotted doves feed on grains. They nest on a small platform of twigs on trees with sparse canopy like babool and acacia
Habitat: Spotted doves are usually seen in pairs and occasionally in small flocks in cultivated areas, gardens and terraces
Reason for disappearance:
Dense planting of trees and shrinking open spaces


Scientific name:
Haliastur Indus
Common name:
Brahminy kite
Local names:
Chemparunthu, Garudan
Characteristics: The brahminy kite is the same size as an eagle. It has a chestnut-coloured body with white head, neck and breast and brown abdomen. Its wings are black at the tips. The young ones are brownish in colour. Both male and female brahminy kites look alike Habits: They feed on fish, frog, reptiles and small birds Habitat: They usually stay on coconut palms near water bodies
Reason for disappearance:
The changing urban landscape is the main reason for their disappearance


Scientific name: Passer domesticus Common name: House sparrow Local name: Oorkuruvi
Characteristics: The house sparrow is the same size as a bulbul. Male: The male house sparrow has a grey crown. The space between its eye and bill is black and so are the sides of crown behind its eye. Its upper back is chestnut in colour. It has black streaks on its chestnut coloured back. The male house sparrow also has a white patch on its shoulder, a dark brown tail and black breasts. The centre of its throat is also black while the sides are white. The rest of its under belly is grey. It has a dark brown bill and fleshy brown legs and feet.
Female: It has a dark brown back with greyish brown streaks, a brownish white under side and a pale brown bill.
Habits: House sparrows usually keep in pairs or in noisy flocks. They feed on grass, weeds, fruits and insects
Habitat: House sparrows inhabits all human habitations
Reason for disappearance:
Increasing heat in cities and changing urban architecture

Source : Times Of India - 03.10.2008

Thursday, October 2, 2008

சூரிய சக்திக்கு மாறும் ரயில்வே

சூரிய சக்திக்கு மாறும் ரயில்வே

புது தில்லி, அக். 1: ரயில்வே அலுவலகங்கள் சூரிய சக்திக்கு மாறும் வகையில் புதிய செயல் திட்டத்தை அத்துறை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, ரயில்வே மண்டல அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் ரயில்வே அமைச்சக தலைமையகத்தில் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அந்த அலுவலகங்களின் பெரும்பாலான பகுதிகள் சூரிய சக்தியால் ஒளிருவதாகவும், வெகுவிரைவில் புதிதாக 44 வட்டார ரயில்வே அலுவலகங்களும் சூரிய சக்திக்கு மாறும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இவைத் தவிர ரயில்வே மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போது சில ரயில்வே கிராசிங்கிலும் சூரிய சக்தி பயன்படுத்தப்படுவதாகவும், இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சகம் சார்பில் ரூ.60 கோடி செலவில் கன்னியாகுமரியில் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. 14 மைல் வேகத்தில் வீசும் காற்றை மின்சாரமாக மாற்ற முடியும் என்றும், ஒரு காற்றாலை விசிறி மூலம் 300 வீடுகளில் விளக்கேற்ற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரயில்வே துறை, நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி செலவாகிறது. இந்த செலவை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தை தடுக்கவும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரயில்வே துவங்கியுள்ளது.

இதற்காக பல்வேறு திட்டங்களில் ரூ.28 கோடியை ரயில்வே அமைச்சகம் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 440 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source : www.dinamani.com - 02.10.2008

Tuesday, September 30, 2008

MOBILE SIGNAL POWER

Very imp. 4 u, Pl read it

1) Don't put your mobile closer to your ears until the recipient answers, Because directly after dialing, the mobile phone would use it's maximum signaling power, which is: 2watts = 33dbi. Please Be Careful. Please use left ear while using cell (mobile), because if you use the right one it may affect brain directly. This is a true fact from Apollo medical team.

2) Do not drink APPY FIZZ. It contains cancer causing agent.

3) Don't eat Mentos before or after drinking Coke or Pepsi coz the person will die immediately as the mixture becomes cyanide..

Source : my friend email - gmageshkumar@yahoo.com

Thursday, September 25, 2008

Rain Water Harvesting




Source : http://www.chennaimetrowater.tn.nic.in/rwh/RWH2210/rain1.jpg

Rain Water Harvesting

Source : http://www.chennaimetrowater.tn.nic.in/rwh/rainwaterwhy.htm

1.What is Rain Water Harvesting
The concept of rain water harvesting lies in tapping the rain water where it falls. A major portion of rainwater that falls on the earth's surface, runs-off from streams to rivers and finally to the sea. An average of 8% of the total rainfall recharges the ground water aquifers. Therefore, most of the rainfall goes waste in the form of surface run-off. The technique of rainwater harvesting involves catching the rain from localized catchment surfaces such as roof of a house, plain and sloping ground surface etc. The rainwater that falls on these catchment is diverted into dugout ponds, vessels or underground tanks to store for long periods. Construction of small barriers across small streams to check and store the running water is also an example of small catchment water harvesting.

Water harvesting means to understand the value of rain and to make optimum use of rain water at the place where it falls. In scientific terms, water harvesting (broadly) refers to collection and storage of rain water and also other activities such as harvesting surface water, extracting ground water prevention of losses through evaporation and seepage.
In general, water harvesting is the activity of direct collection of rain water. The rain water collected can be stored for direct use or can be recharged into the ground water.
2. Why Rainwater Harvesting?
Rain is the first form of water that we know in the hydrological cycle, hence it is a primary source of water for us. Rivers, lakes and ground water are all secondary sources of water In present times, we depend mainly on such secondary sources of water. In the process, it is forgotten, that rain is the ultimate source that feeds all these secondary sources and remain ignorant of its value. Water crisis situation occurs only because, effective collection and storage of rain water has been ignored. The potential of rain to meet water demand is tremendous. Unless people are involved in conserving rain water from individual households to big industries/institutions, it would be very difficult to meet the looming water crisis.

We get a lot of rain, yet we do not have water. Why? Because we have not realised the value of each drop of rain. Ironically, even Cherrapunji which receives about 11,000 mm of rainfall annually suffers from acute shortage of drinking water. This is because the rain water is not conserved but allowed to drain away. Thus it does not matter how much rain we get, if we don't capture or harvest it.

Chennai situation:

Chennai City receives rainfall during North-East Monsoon (Oct - Dec) and South-West Monsoon (June - September). A major portion of the rainfall is during North-East Monsoon. Some times the city also receives rainfall during January and Februuary, but that is quite rare.

The annual rainfall in Chennai is in the range of 1200 - 1300 mm. This is higher compared to the India's average rainfall of 800 mm. However, this rainfall occurs in short spells of a few days - on an average we receive rainfall for 300 hours throughout the year. The characteristics of our rainfall demands not only to conserve large quantity of rainwater during these few days but also to store wherever it rains in Metropolitan cities like Chennai, preferably for direct use and alternatively as ground water. Failure to do so results in flooding of low lying areas and wastage by means of run-off into the sea during rainy season and water scarcity during summer months. Also, due to the fast rate of urbanisation, the city has become a concrete jungle and it is very difficult to find open surfaces which would enhance the recharge of ground water. Even the open space left is paved with concrete or bitumen which does not allow the natural recharge of ground water. This highlights the need to implement measures to ensure that the rain falling over a region is tapped as fully as possible through appropriate water harvesting techniques for recharging the ground water aquifers as well as for direct storage and use of rain water.

How much water can be harvested?

The total amount of water that is received in the form of rainfall over an area is called the rain water catchment / endowment of that area. Out of this, the amount that can be effectively harvested is called the water harvesting potential. The collection efficiency accounts for the fact that all the rain water falling over an area cannot be effectively harvested.

Illustration 1

Consider a building with a flat terrace area of 100 sq.m. The average annual rainfall in Chennai is approximately 1300mm. In simple terms, this means that if all the rain that falls on the terrace is retained, then in one year there will be rain water on the terrace floor to a height of 1300mm.

Area of Terrace :100 sq.m.
Height of rainfall :1.30m (1300 mm)
Volume of rainfall over the Terrace Area x Height of Rainfall
100 sq.m. x 1.30 m
:130 cu.m. (1,30,000 litres)

Assuming that 60% of the total rainfall is effectively harvested.
Volume of water harvested = 1,30,000 x 0.6 = 78,000 litres

That means ( 78,000 / 365 ~ ) 213 litres of water per day will be available for the household. That much quantity of water is enough to meet the drinking and cooking needs of a household having around 8 to 10 members.

Illustration 2;
Take example of a multi-storied building with a terrace area of 500 sq.m.

For the annual rainfall of 1300 mm, assuming that 60% of the rain water is harvested, the total rainwater harvesting potential for this building will be :

500 x 1.3 x 0.6 cu.m.= 390 cu.m.= 3,90,000 litres

If there are 16 flats in the building the per day water availability per flat will be 67 litres/day.

Illustration 3:
Name of the building : School campus/building
Terrace area :3,500 sq.m
Annual rainfall 1300 mm
Quality of rain water harvesting potential assuming that 60% of the rainfall can be harvested : 3,500 x 1.3 x 0.6=2730 cu.m.=27,30,000 litres
Water availability per student per day : 365 xNo.of students

From the above illustration it is quite clear that the rain water harvesting has a vast potential to meet the water needs of individual house holds and institutions.
If we take the Chennai Metropolitan area for knowing the rain water harvesting potential

Area = 173 sq.km. = 173 x 106 m²
Rain fall = 1.30 m

Quantity of water which can be harvested (assuming 60% rain fall can be harvested) = 173 x 106 x 1.30 x 0.6 = 135 x 106 m2
= 135000 ML = 370 MLD

In the following table the monthly average rainfall data of Chennai and the possible rainwater collection in percentage from the terrace area of 100 sq.m is detailed below :

How to harvest Rainwater ?
Harvesting rain water is very simple. When it rains we have to collect this water and not to allow it to run away. There are various techniques to do it. Broadly, rain water can be harvested for two purposes.

1. Stored for ready use in containers above ground or below ground.
2. Charged into the ground for withdrawal later (ground water recharging).

As indicated above rain water falling on the terrace can be collected through pipelines/drains and stored in a storage tank for direct use or diverted into a well for ground water recharge. Rain fall over the open spaces around the building may also be diverted for recharge purpose.

The details of various RWH techniques are described in the Chapter "Different methods of Rainwater Harvesting".

Back

Thursday, September 4, 2008

தேவை, மீண்டும் ஒரு பசுமைப்புரட்சி

தேவை, மீண்டும் ஒரு பசுமைப்புரட்சி

உ .ரா. வரதராசன்

இந்திய - அமெரிக்க அணுமின் ஒப்பந்தம், இடதுசாரிகள் ஆதரவு விலக்கல், நம்பிக்கை வாக்கெடுப்பு "வெற்றி'யின் வேடிக்கைகள், மக்களவைத் தேர்தல் ஆரூடங்கள், கூட்டணி மாற்றங்கள் என்ற பரபரப்பான செய்திகளுக்கு இடையில், சற்றும் தொய்வே இல்லாமல் விலைவாசி ஏறிக் கொண்டேயிருக்கிறது. பணவீக்கம் ஒற்றைப்படை இலக்கைத் தாண்டி, 13 ஆண்டுகால "வரலாற்று' உயர்வை எட்டியுள்ளது. அரசு கணக்கிடும் மொத்த விலைவாசிக் குறியீட்டெண் அளவீட்டில் பணவீக்கம் 12 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டாலும், அன்றாடம் காய்கறியும், மளிகைச் சாமான்களும் வாங்கப் போகையில், சந்தையில் நிலவும் விலைவாசி என்பது, சாதாரணக் குடும்பங்களைத் திகிலடைய வைப்பதாக உள்ளது.

இந்த விலைவாசி உயர்வு இவ்வளவு கடுமையான எல்லையை எட்டியிருப்பது, இந்தியாவில் இதுவரை இருந்திராத அளவு உணவு தானிய உற்பத்தியில் மிகப்பெரும் உயர்வு ஏற்பட்டுள்ள கட்டத்தில்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

மத்திய அரசின் வேளாண்மைத்துறை அமைச்சகம் தரும் விவரங்கள் இதோ:

2006 - 07-ம் ஆண்டு உணவு தானிய மொத்த உற்பத்தி 21.73 கோடி டன். அதுவே 2007 - 08-ம் ஆண்டில் 23.07 கோடி டன்னாக உயர்ந்து ஒரு புதிய மைல்கல்லைத் தொட்டது. சதவிகிதக் கணக்கில் இது 6.2 உயர்வாகும்.

அரிசி - கோதுமை உற்பத்தி 3 சதவிகிதத்தைத் தாண்டி உயர்ந்துள்ளபோது, இதர உணவு தானியங்கள், பருப்பு வகைகள், இதனினும் அதிகமாக உற்பத்தியாகியுள்ளன. எண்ணெய் வித்துகள் உற்பத்தியோ சுமார் 19 சதவிகிதம் உயர்வு; பருத்தி சாகுபடி 14 சதவிகிதம் உயர்வு.

ஒரு சிறிய அளவு (4 சதவிகித) வீழ்ச்சியைச் சந்தித்தது கரும்பு உற்பத்தி மட்டுமே!

இவற்றில் சமையல் எண்ணெய் உற்பத்தி மட்டுமே நம் உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்ய இயலாத குறைவான அளவு உள்ளது. இதனால்தான் ஆண்டுதோறும் சமையல் எண்ணெயை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

இந்த விவரங்கள் அலட்சியப்படுத்த முடியாத ஒரு கேள்வியை எழுப்புகின்றன. கிட்டத்தட்ட உணவுதானியங்கள் அனைத்திலுமே சுயதேவைப் பூர்த்திக்கு வழிவகுத்துள்ள உற்பத்தி உயர்வு உள்நாட்டிலேயே நடைபெற்று இருக்கிறபோது அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை அதீதமாக உயர்ந்தது ஏன்? என்பதே அந்தக் கேள்வி.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதற்கான விலை உயர்த்தப்பட்டிருந்தால், அது உணவுதானிய வகைகளின் விலை உயர்வுக்கு ஒரு நியாயமான காரணமாக அமையக்கூடும். ஆனால், இன்று விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்பதாலேயே, விவசாயம் ஒரு லாபகரமான தொழில் அல்ல என்று அதைக் கைவிடும் சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. நியாயமான விலையும் கிடைப்பதில்லை, விதைகள் - உரம் - பூச்சி மருந்து போன்ற விவசாய இடுபொருள்களின் விலையும் கடுமையாக உயர்வு, தாங்க முடியாத கடன் சுமை, கந்து வட்டிக்காரர்களின் நெருக்குதல் வேறு. இதனாலேயே விவசாயத்தைக் கைவிடும் நிலை.

அமோக விளைச்சல்; விவசாயிக்கும் நிறைவளிக்கக் கூடிய கொள்முதல் விலை இல்லை; வாங்கி உபயோகிக்கும் மக்களும் கொடுக்க வேண்டிய விலையோ பல மடங்கு உயர்வு - இவை ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நேரிட்டது என்றுதானே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு காலத்தில் இந்திய உணவுக் கழகத்தின் கிட்டங்கிகள் எல்லாம் நிரம்பி வழிந்து, வெட்டவெளியில் தார்ப்பாய் போட்டு நெல் - கோதுமை மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்த காட்சியைக் காண முடிந்தது. ஆனால் உபரிக் கையிருப்பு என்று சொல்லி, வெளிநாட்டுக்கு உணவு தானியங்களை - உள்நாட்டுக் கொள்முதல் விலைக்கும் குறைவான விலையில் - ஏற்றுமதி செய்ததன் விளைவாக, அவற்றின் கையிருப்பு குறைந்தது. மத்திய அரசு அரிசியையும் கோதுமையையும் சர்வதேசச் சந்தையில் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய நேரிட்டது; அந்த பேரங்கள் தொடர்பான கேள்விகளும் எழுந்தன.

1970 முதல் 1990 வரையிலான இருபதாண்டுகள் "பசுமைப்புரட்சி' நடைபெற்ற காலகட்டம். அப்போது இந்தியாவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, மக்கள்தொகை உயர்வை விடக் கூடுதலாக உணவுதானிய உற்பத்தி உயர்வு இருந்தது. ஆனால் 1990-ம் ஆண்டுக்குப் பிறகு உணவு தானிய உற்பத்தி உயர்வு, மக்கள்தொகை உயர்வு சதவிகிதத்தை விடக் குறைந்து போனது.

மக்களின் உணவுத் தேவைகளுக்கான உணவு தானிய உற்பத்தியை, பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக, தாவர எரிபொருள் உற்பத்திக்காக அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ச்சியடைந்த நாடுகள் திருப்பிவிட்டன. இது சர்வதேசச் சந்தையில் உணவு தானியங்களின் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியது; அதீத விலை உயர்வுக்கும் இட்டுச் சென்றது.

இந்த நிலைமையில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் தொலைநோக்கோடு செயல்பட்டிருந்தால் இன்றைய விலைவாசி உயர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஒரு சில நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஒன்று, உள்நாட்டில் உணவு தானியங்களின் கொள்முதலை அதிகப்படுத்தி, மத்திய அரசின் கையிருப்பைக் கூட்டியிருக்கலாம்; இரண்டு, சர்வதேசச் சந்தை விலைகள் உயர்வதற்கு முன்பாக உணவு தானிய இறக்குமதியைச் செய்து முடித்திருக்கலாம்; மூன்று, உணவுதானிய வர்த்தகத்தில் புரண்ட பணப்புழக்கத்தை முன்கூட்டியே குறைத்திருக்கலாம். இவை எதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேயில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

இங்கே, இன்றைய மத்திய அரசு நியமித்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை முழுமையாகச் செயல்படுத்த மறுத்துப் புறக்கணித்ததும் இன்றைய விவசாயத்துறை நெருக்கடியைக் கடுமையாக்கிவிட்டது என்பதையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

ஆனால், இன்றைய நிலைமையிலேயும் நம் நாட்டில் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏராளம் என்பது தான் உண்மை. சீனா வளர்ச்சியில் படைத்து வரும் சாதனைகளைச் சுட்டிக்காட்டும் நமது ஆட்சியாளர்கள் சீனத்தின் வளர்ச்சியை இந்தியா எட்டிப் பிடிக்க வேண்டும் என்று வாய்ப்பந்தல் போடுவதைக் காண்கிறோம். ஆனால், விவசாயத்துறையைப் பொருத்தவரையில் சீனாவுக்கு இன்றிருப்பதை விட அதிகமாகவே இந்தியாவுக்கு வளர்ச்சிக்கான அடிப்படைகள் உள்ளன என்பதை, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

""பயிர் சாகுபடிக்கு ஏற்ற நிலத்தின் பரப்பளவு இந்தியாவில் 16 கோடி ஹெக்டேருக்கு மேல்; இது சீனாவில் 13 கோடி ஹெக்டேர் மட்டுமே! இதில் நீர்ப்பாசன வசதி பெற்ற நிலப்பரப்பு இந்தியாவில் 5.58 கோடி ஹெக்டேர்; சீனாவில் இது 5.45 கோடி ஹெக்டேர் மட்டுமே! விவசாயிகள் கையில் உள்ள சராசரி நில அளவு இந்தியாவில் 1.4 ஹெக்டேர்; சீனாவில் 0.4 ஹெக்டேர் மட்டுமே!'' என்பன அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள்.

ஆனால் நம்மைவிடக் குறைந்த அடிப்படை வளங்களைப் பெற்றுள்ள சீனாவில் ஒரு ஹெக்டேருக்கு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் எல்லாமே சராசரியாக உற்பத்தியாகும் அளவு இந்தியாவைப் போல இரண்டு மடங்காக உள்ளன.

இன்றைய விலைவாசிக் கொடுமையின் சூட்டைத் தணிக்க வேண்டுமானால், புழக்கத்தில் உள்ள பணத்தைக் கட்டிப்போட்டு வைக்கும் ரிசர்வ் வங்கியின் பணவீக்கம் தொடர்பான நடவடிக்கைகள் பலனளிக்கும் வாய்ப்பு மிகக் குறைவே; நீண்ட கால அடிப்படையில் இன்றைய கிராமப்புற அவலங்களைத் துடைத்து விவசாயத் துறையை மேம்படுத்தப் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

மீண்டும் ஒரு பசுமைப்புரட்சியை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

Source : www.dinamani.com - Monday September 1 2008