I LOVE TAMIL


Saturday, November 29, 2008

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

ஏராளமான மருத்துவ குணங்கள் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. வைட்டமின்-சி சத்து நிறைந்திருக்கும் எலுமிச்சம் பழம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த அருமருந்தாகிறது. கால்சியம், இருப்புச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. எலுமிச்சையின் கொழுந்து, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், விதை, மரப்பட்டை என அனைத்தும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. எலுமிச்சம் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் லெமன் பெக்டின் என்னும் பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ரத்தப் போக்கை நிறுத்தவும், புண்களை ஆற்றவும் உதவுகிறது. இனி எலுமிச்சை பல்வேறு நோய்களுக்கு எப்படி மருந்தாகிறது என்பதை காணலாம்.

சாப்பிட்டபின் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள், வாயு கோளாறு போன்ற தொல்லைகள் நீங்க வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை இலையை அரைத்து சாறு எடுத்து நீருடன் கலந்து, சிறிது உப்பையும் சேர்த்து பருகினால் வாந்தி உடனே நிற்கும். பித்தம் தணியும். உடலுக்கும் நல்லது.

சிறிதளவு சீரகத்தை அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து வெந்நீருடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் குடித்து வந்தால், நன்றாக பசி எடுக்கும்.

சிலருக்கு வாயில் தொடர்ந்து கசப்பு சுவை இருந்து கொண்டே இருக்கும். எதையும் ருசித்து சாப்பிட முடியாது. இந்த தொல்லை போக, காலையில் பல்துலக்கிய பின்பு எலுமிச்சம் பழச்சாற்றை வாயிலிட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பின்னர் துப்பிவிடலாம். இப்படி செய்து வந்தால் வாய் கசப்பு மாறும்.

மூட்டுவலி, கால்வலிக்கு எலுமிச்சை இலையை அரைத்து பத்து போட்டால் வலி குறையும்.

Source: www.dailythanthi.com - இளைஞர் மலர் - 29.11.2008

No comments: