I LOVE TAMIL


Wednesday, January 18, 2023

நேர்மறை எண்ணங்களை

எந்த பிரச்னையிலும் அதற்கான தீர்வுகளை அலசாமல் எனக்கு எதுவும் சரியாக நடப்பது இல்லை என்றே சொல்லக் கூடியவராக ஒருவர் இருந்தால், அவர் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், எதெல்லாம் சரியாக இல்லை என்று சொல்வதற்காக அந்த மாதிரியான விஷயங்களையே மனம் தேடி பிடிப்பது மட்டுமல்லாமல் அதை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுவதற்காக மனதில் பாதுகாப்பாக சேர்த்தும் வைத்துக் கொள்ளும். 

ஒருவர் அவர் மனதில் இது போல் எதிர்மறையான எண்ணங்களை எடுத்துக் கொள்ளும் அதே நேரம் அவர் மூளையின் பகுதியில் இருக்கும் சுரப்பிகள் தங்கள் வேலையை செய்யத் தொடங்கி அதன் தாக்கத்தை உடலில் ஏற்படுத்தி விடும்.
 
உண்மையில் ஒரு நாளைக்கு 60,000 எண்ணங்கள் சராசரியாக ஒருவர் மனதில் எழுகிறது. இதில் பெரும்பாலும் ஒரே மாதிரியான எண்ணங்களே திரும்பத் திரும்ப சுழன்று வரும். அந்த எண்ணங்களை கொஞ்சம் கவனத்தோடு கையாண்டு நேர்மறை எண்ணங்களை மட்டும் தனக்குள் இருத்திக் கொள்ளும்போதுஆரோக்யமும் மகிழ்ச்சியும் வாழ்வை நிறைக்கும். 

எது வேண்டும் நமக்கு?!
WhatsApp - Thanks.