I LOVE TAMIL


Saturday, November 29, 2008

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

ஏராளமான மருத்துவ குணங்கள் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. வைட்டமின்-சி சத்து நிறைந்திருக்கும் எலுமிச்சம் பழம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த அருமருந்தாகிறது. கால்சியம், இருப்புச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. எலுமிச்சையின் கொழுந்து, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், விதை, மரப்பட்டை என அனைத்தும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. எலுமிச்சம் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் லெமன் பெக்டின் என்னும் பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ரத்தப் போக்கை நிறுத்தவும், புண்களை ஆற்றவும் உதவுகிறது. இனி எலுமிச்சை பல்வேறு நோய்களுக்கு எப்படி மருந்தாகிறது என்பதை காணலாம்.

சாப்பிட்டபின் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள், வாயு கோளாறு போன்ற தொல்லைகள் நீங்க வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை இலையை அரைத்து சாறு எடுத்து நீருடன் கலந்து, சிறிது உப்பையும் சேர்த்து பருகினால் வாந்தி உடனே நிற்கும். பித்தம் தணியும். உடலுக்கும் நல்லது.

சிறிதளவு சீரகத்தை அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து வெந்நீருடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் குடித்து வந்தால், நன்றாக பசி எடுக்கும்.

சிலருக்கு வாயில் தொடர்ந்து கசப்பு சுவை இருந்து கொண்டே இருக்கும். எதையும் ருசித்து சாப்பிட முடியாது. இந்த தொல்லை போக, காலையில் பல்துலக்கிய பின்பு எலுமிச்சம் பழச்சாற்றை வாயிலிட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பின்னர் துப்பிவிடலாம். இப்படி செய்து வந்தால் வாய் கசப்பு மாறும்.

மூட்டுவலி, கால்வலிக்கு எலுமிச்சை இலையை அரைத்து பத்து போட்டால் வலி குறையும்.

Source: www.dailythanthi.com - இளைஞர் மலர் - 29.11.2008

விளையாட்டு பொம்மைகள்

விளையாட்டு பொம்மைகள்

மிக மெல்லிய பிளாஸ்டிக் பைகளை (20 மைக்ரான் அளவு) பயன்படுத்தக்கூடாது என்று தடை உள்ளதால், அனைவரும் தடிமனான பிளாஸ்டிக் பைகளுக்கு மாறினோமே தவிர, பிளாஸ்டிக் தீங்கானது என்பதை உணர்ந்து செயல்படவில்லை. இதே உணர்வற்ற தன்மைதான் குழந்தைகளுக்கான பொம்மைகள் தேர்வு செய்வதிலும்!.

இந்தியாவைப் பொருத்தவரை குழந்தைகளுக்கு எந்த வகையான பொம்மைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இதுவரை அமலில் இல்லை என்பதே அதற்குச் சான்று.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பொம்மைகளில் சில ரசாயனப் பொருள்கள் கலந்திருந்தால் அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளது. இருந்தும்கூட, நடைமுறையில் அந்தச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக அங்குள்ள அமைப்புகள் குறை கூறுகின்றன. அந்நாட்டில் பொம்மை தொடர்பான விபத்துகளில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 80,000 என்கிற செய்தியைப் பார்க்கும்போது, இந்தியாவில் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தும் ஆர்வம்கூட நம்மிடம் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.

இந்தியக் குடும்பங்களில் குழந்தைகளின் முதல் உயிர்த்துடிப்பான விளையாட்டுப் பொம்மைகள் - சொன்னால் வேடிக்கையாக இருக்கும் - தாத்தா பாட்டிதான். தாத்தா பாட்டிகளை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தையும் தாய் தந்தையருடன் பழகும் விதத்தையும் எளிதாக வேறுபடுத்திவிட முடியும். இருந்தாலும் குழந்தைகளுக்கென தனியாக, வண்ணங்கள் தீட்டப்படாத மரப்பாச்சி பொம்மைகள், மரத்தால் செய்யப்பட்ட யானை மற்றும் விலங்கு உருவங்கள், மரச் சொப்புகள், பனைவோலையில் செய்யப்பட்ட கிலுகிலுப்பைகள், இப்படியாகத்தான் விளையாட்டுப் பொருளாக கொடுக்கப்பட்டன. அதுவும்கூட வயதுக்கு ஏற்ப வேறு பொம்மைகளும், நடைவண்டிகளுமாக அவர்களது விளையாட்டுப் பொருள்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால், தற்போது இவையெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. எல்லா வீடுகளிலும் குழந்தைகளுக்கு ரிமோட் கார், பல்டி அடிக்கும் யந்திர மனிதன், ஜாய் ஸ்டிக், செல்போன், ஸ்பைடர்மேன், ஏகே 47 துப்பாக்கி என வாங்கித் தரப்படுகின்றன. இவை அனைத்தும் பிளாஸ்டிக் பொருள்கள். உடைந்தால் குழந்தையை காயப்படுத்தும் தன்மை உள்ளவை. இவற்றில் வளைந்து கொடுக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்துமே அதன் ரசாயனத் தன்மை காரணமாக குழந்தையின் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை.

குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் மீது பூசப்படும் வண்ணங்களில் காரீயம் ( லெட்) அதிக அளவு இருப்பதாகக் கூறி, அமெரிக்காவில் கோடிக் கணக்கில் பொம்மைகளை அதைத் தயாரித்த நிறுவனங்களே திரும்பப் பெறும்படி செய்யப்பட்டது. குழந்தைகள் அனைவருமே தங்கள் பொம்மைகளை வாயில் வைத்து கடிக்காமல் விளையாடுவதே இல்லை என்பதால் செயற்கை வண்ணங்கள் வழியாக குழந்தைகளுக்கு காரீயம் உள்ளுக்குச் சென்று, நுரையீரல் தொடர்பான நோய்கள், குறிப்பாக ஆஸ்துமா மற்றும் புற்றுநோய்களுக்கு இடம்தருகின்றன

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு எந்தெந்த பொம்மைகளை வாங்கித் தருவது, அவர்களை எந்தப் பொருள்களுடன் மட்டும் விளையாட வைப்பது என்ற ஒரு வாரப் பயிற்சியை தாய்மார்களுக்கு அளித்த பிறகு, அவர்தம் குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடி காயமடைந்து மருத்துவமனைக்கு வருவது இல்லாமல் ஆகிவிட்டது என்ற புள்ளிவிவரம் அண்மையில் வெளியானது. அத்தகைய பயிற்சிகள்கூட இந்தியாவில் கிடையாது.

குழந்தைகள் நுரையீரல் பாதிப்பினால் இளமையிலேயே ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளாவதும், மருத்துவச் செலவுகளும் தவிர்க்கப்பட வேண்டுமானால், பொம்மைகள் விஷயத்திலும் கவனமாக இருந்தால் சாத்தியமாகும். தற்போது குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள் அவர்களை கருணையோடு தொடர்பில்லாத இயந்திரத்தனமான மனிதர்களாக மாற்றுகின்றன என்பதுதான் உளவியல் மருத்துவர்களின் கணிப்பு.

குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படும் நகைகள், உடைகள், பொம்மைகள், அதன் மேல் பூசப்படும் வண்ணங்கள், குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு, சாக்லெட், ஐஸ் கிரீம் ஆகியவற்றில் கலக்கப்படும் வண்ணங்கள் ஆகியவற்றில் தவிர்க்கப்பட வேண்டிய ரசாயனங்கள் என்னவென்று அரசு அறிவிக்க வேண்டும். இன்னமும் நம் குழந்தைகளுக்கு எது நன்மை என்று தெரியாத விளையாட்டுப் பொம்மைகளாக பெற்றோர் இருத்தல் கூடாது.

சீனாவில் பால்பவுடரில் கலப்படம் என்றதும், தமிழ்நாடு முழுவதிலும் எல்லா கடைகளிலும் விற்கப்படும் குழந்தை உணவுப் பொருள்களை அதிகாரிகள் சோதிப்பது தீவிரமாக நடைபெறுகிறது.

கவிஞர் கண்ணதாசன் பாடியதைப் போல, ""பட்டபின் அறிவதே பழக்கமென்று ஆன பின்பு, கெட்டவன் அழுகை தானே கெடுவதை நிறுத்த வேண்டும். பட்டுப் பின் தேறல்தானே "பட்டணத்தார்' வாழ்க்கை!''.

Source: www.dinamani.com - Friday November 28 2008

Traffic Rules

Saturday, November 22, 2008

கங்கை போலவே காவிரியும்!

கங்கை போலவே காவிரியும்!

கங்கையை தேசிய நதியாக அறிவிக்கத் தீர்மானித்து, அதற்காக தனி ஆணையம் அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு.

கங்கை பாயும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநில அரசுகளுடன் கலந்து பேசி, ஆணையத்தின் அதிகார வரம்புகள் விரைவில் நிர்ணயிக்கப்பட்டு, விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே, மாசுபடும் கங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் "மத்திய கங்கை ஆணையம்' உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் எதுவுமே நிறைவேறவில்லை. "கங்கையை தேசிய நதியாக மத்திய அரசு அறிவித்து, தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டால்தான் கங்கையைக் காப்பாற்ற முடியும்' என்று கூறி, துவாரகா பீடம் சங்காராசாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி பல காலமாக மத்திய அரசிடம் தொடர்ந்து கோரி வந்தார். இதற்காக இயக்கங்களும் உருவாகின. இப்போது இந்தியாவின் முதல் தேசிய நதி கங்கை என்று அறிவிக்க உள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

இத்தனை நாள்களாக இல்லாத கருணை இப்போது மட்டும் கங்கை மீது ஏன் ஏற்பட்டது என்றால், கங்கை வெறும் சாக்கடையாக மாறிவிட்டதோ என்று அச்சப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போனதுதான். சுமார் 2500 கிமீ நீளமுள்ள கங்கை நதியில் நாளொன்றுக்கு 36 லட்சம் கனஅடி அளவுக்கு தொழில்துறை கழிவுகள் கலக்கின்றன. இதுதவிர, நகர்ப்புற சாக்கடைகளும் இதைவிட பல மடங்கு கலக்கின்றன.

நதிகள் அனைத்தும், ஓடிக்கொண்டே தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் திறனை இயற்கை அளித்திருக்கிறது. ஆனால் அந்த திறனைச் செயல்படுத்த முடியாதபடி கங்கை மாசுபட்டுக் கிடக்கிறது என்பதால்தான் தேசிய நதியாக அறிவிக்க உள்ளனர். அமைக்கப்படவுள்ள ஆணையத்தின் முக்கிய நோக்கமே நதியில் ஓடும் நீரின் அளவு, தரம் இரண்டும் குறையாமல் பார்த்துக்கொள்வதுதான்.

கங்கையை மீண்டும் பழைய நிலைமைக்கு நலம் பெறச் செய்ய என்ன நடவடிக்கைகள் தேவை என்று பல சுற்றுச்சூழல் அமைப்புகளும் பல கருத்துகள் தெரிவித்துள்ளன. இவர்களில் கான்பூர் ஐஐடி சுற்றுச்சூழல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.டி அகர்வால் பரிந்துரைப்பவை: "கங்கையின் நீரோட்டத்தில் இடையிடையே மாறுபடும் நதியின் வேகம், குறையும் நீரின் அளவு, கலக்கும் கழிவுகளின் அதிகரிப்பு, பாழ்பட்ட நதிப்படுகை, சூரிய வெளிச்சத்தில் நீண்ட நேரம் தேங்குதல் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும். இதைச் செய்தால் கங்கை தானே உயிர் பெறும். சக்தி பெறும்' என்பதுதான்.

இங்கே குறிப்பிடப்படும் அனைத்து குறுக்கீடுகளுக்கும் நதியின் குறுக்கே அமையும் அணைகள்தான் காரணம். கங்கை நதியில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சுமார் 25-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியுள்ளன. புனல் மின்உற்பத்திக்குப் போதுமான நீரைத் தேக்கி வைத்து, நதியில் சிறிதளவு நீரைத்தான் விடுகின்றன. நதியில் எப்போதும் குறிப்பிட்ட கனஅடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனைகள் குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் குறைவான நீரில் கலக்கும் அதிக அளவு கழிவுகளைச் சுத்திகரிக்கும் திறன் கங்கைக்கு குறைந்துபோகிறது. பாழ்பட்டு, மணல் இல்லாமல் கிடக்கும் நதியால் தன்னைத்தானே சுத்திகரிக்க இயலாது.

கங்கை நதிக்கு என்ன கேடுகள் நேர்ந்துள்ளனவோ, எதனால் தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும் திறனை கங்கை இழந்து நிற்கிறதோ அவை அனைத்தும் இந்திய நதிகள் அனைத்துக்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக நமது காவிரி நதிக்கும் பொருந்தும்.

காவிரியைத் தடுத்துத் தடுத்து, அதன் வேகத்தை மாற்றி அமைத்து, திசை திருப்பித் தேக்கிவைத்து, காவிரி நதி முழுவதுமே மணல் இல்லாதபடி கொள்ளையடித்து, அத்தனை தொழிற் கழிவுகளையும் நகரக் கழிவுகளையும் காவிரியில் கலந்து, தஞ்சை நெற்களஞ்சியத்தில் கொண்டுபோய் சேர்க்கிறோம். ரசாயன உரங்களுடன் இந்த நஞ்சையும் உறிஞ்சியெடுத்த நெல்மணிகளைத்தான் நாம் உண்கிறோம். நஞ்சை பாய்ச்சி நஞ்சை விளைவிக்கின்றோம். கர்நாடகத்தில் விளையும் நெல்மணிகளையும் காவிரிப் படுகையில் விளையும் நெல் மணிகளையும் ஆய்வு செய்தாலே போதும், எவ்வளவு நஞ்சு கலந்துகிடக்கிறது என்பது புரியும். இந்த நஞ்சுக்குக் காரணம் கர்நாடகம் அல்ல. பெரும்பாலும் தமிழகம்தான் பொறுப்பு.

கங்கையை மட்டுமல்ல காவிரியையும் தேசிய நதியாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு குரல் கூட தமிழ்நாட்டிலிருந்து ஒலிக்கவில்லை. ஒரு வேளை இந்தப் பிரச்னையை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கினால், பெங்களூரில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து நேரும் என்ற அச்சத்தால் இருக்கலாம். மக்களவைத் தேர்தல் வரவிருப்பதால் யாருடன் கூட்டணி என்பது உறுதியாகாத நிலையில் இதைப் பற்றிப் பேசி, பின்னர் சங்கடப்பட வேண்டாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம்.

ஆனால் காவிரியைத் தேசிய நதியாக அறிவித்து, அதை முழுமையாகக் கண்காணிக்கும் பொறுப்பை மத்திய அரசின் ஆணையம் ஏற்றால்தான் காவிரி நலம் பெறுவாள். காவிரிக்கு "உயிர்' இருக்கும்போதே சிகிச்சையைத் தொடங்கிவிடுவதுதான் நல்லது.

Source: www.dinamani.com - Saturday November 22 2008

Thursday, November 13, 2008

கடன்பட அஞ்சு!

கடன்பட அஞ்சு!

கடன் அட்டை கலாசாரம் என்பது சிறு பொறியாகக் கிளம்பி இன்று பெரிய காட்டுத் தீயாக பரவிவிட்டது. கடன் அட்டைகள் என்பவை காமதேனுவோ கற்பகவிருட்சமோ அல்ல. கடன் அட்டை காட்டி எதை வாங்கினாலும் அதை வட்டியும் அசலுமாகத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும், அவை இலவசம் அல்ல.

முதல் கடன் அட்டையை வாங்குவதுதான் சிறிது சிரமம். பிறகு அந்த அனுபவத்திலேயே மேலும் மேலும் பல அட்டைகளை வாங்கிவிடுகின்றனர். ஏற்கெனவே கடன் அட்டை வைத்திருப்பதையே ஒரு தகுதியாகக் கருதி பிற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் தருகின்றன என்பது வியப்பாக இருக்கிறது.

கடன் அட்டைகளை விற்க உதவும் தரகர்களுக்கு, அவர்கள் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தரகுத் தொகை கிடைத்துவிடுகிறது. வங்கிகள் தங்களிடம் உள்ள பணத்தை அதிக வட்டி கிடைக்கும் இனங்களுக்குத் திருப்ப முடிகிறது. வணிக நிறுவனங்களுக்குத் தங்களுடைய மின்னணு சாதனங்களையும், இதர நுகர்பொருள்களையும் எளிதில் விற்று பணமாக்க முடிகிறது. கடன் வாங்குகிறவர்களுக்கோ ""வெறும் கையில் முழம்'' போட முடிகிறது. இந்த வகையில் கடன் அட்டைகள் தொழில், வணிகத் துறைகளுக்குச் சேவையைச் செய்கிறது.

கடனைப் பெற்றவரால் அதைத் திரும்ப அடைக்க முடியாமல் போகும்போதோ, தவணை தவறும்போதோதான் கடன் அட்டையின் உண்மையான சொரூபம் தெரிகிறது. கடன் அட்டைகள் மீது வாங்கப்படும் கடன்களுக்கு வருஷாந்திர அடிப்படையில் 36% முதல் 49% வரைகூட வட்டி விதிக்கப்படுகிறது.

நம் நாட்டில் இப்போது கடன் அட்டைகள் மூலம் கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கட்ட முடியாமல் நிலுவையில் இருக்கும் தொகையின் அளவு 20,000 கோடி ரூபாயை எட்டிவிட்டது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகமிகக் குறைவு என்றாலும், இந்திய வங்கிகள் அளித்த கடன் அட்டை இன கணக்கில் இது கணிசமான தொகையாகும்.

பல மத்தியதர குடும்பங்களில் கடன் அட்டைகளை வைத்து கடன் வாங்கிய பல குடும்பத்தலைவர்கள் இரவில் தூக்கத்தை இழந்து, பகலில் நிம்மதியை இழந்து ஆழ்ந்த மன உளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இந்தப் பட்டியலில் முதலிடம் பெறுகின்றனர். வீட்டுக்கடன், வாகனக் கடன், நகைக்கடன், துணிக்கடன் என்று ஒரே சமயத்தில் பல கடன்களை வாங்கியவர்களும் இருக்கின்றனர். இந்தக் கடன் சுமையிலிருந்து மீளவும், கடன்களை குறைந்த வட்டியுடனான நீண்டகாலத் தவணையுள்ள கடனாக மாற்றிக்கொள்ளவும் இப்போது வங்கிகளே தனி ஆலோசனை மையங்களைத் தொடங்கியுள்ளன. அத்தகையவர்கள் இப்போதாவது கடைப்பிடிக்க சில யோசனைகளைத் தெரிவிப்பது நல்லது என்றே தோன்றுகிறது.

முதலில் கடன் அட்டைகளின் எண்ணிக்கைகளைக் குறைத்து, குறைந்த வட்டியில் நல்லவிதமாக சேவை அளிக்கும் நிறுவனத்தின் கடன் அட்டையை மட்டும் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வருவாய் எவ்வளவு, அதில் அவசியமான செலவுகள் என்ன, தேவையற்ற செலவுகள் என்ன என்று மாதம்தோறும் ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்து, தேவையற்ற செலவுகளைப் படிப்படியாகக் குறையுங்கள். வீடு, நிலம் போன்ற உங்களுக்குச் சொந்தமான சொத்துகளின் மீதோ அல்லது தங்க நகைகளின் மீதோ குறைந்த வட்டி இனத்தில் கடனை வாங்கி, கடன் அட்டைகள் மீதான சிறு கடன்களையெல்லாம் வட்டியும் முதலுமாகச் செலுத்தி அடைத்துவிடுங்கள். ""ஒரே கடன் அட்டை, ஒரே கடன் தவணை'' என்று சுருக்கிக் கொள்ளுங்கள். மறுபடியும் புதுக் கடன் எதையும் வாங்காதீர்கள்.

உங்களுடைய வருமானத்தில் 10% தொகையை மாதந்தோறும் கட்டாயம் சேமியுங்கள். அதை சேமிப்பு என்று கருதாமல், அதையும் எதிர்காலத் தேவைக்கான ""நிரந்தரச் செலவாக''க் கருதுங்கள். அந்தத் தொகை உங்களுக்கு ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.

அதிக வட்டி செலுத்த வேண்டிய கடன்களை, குறைந்த வட்டியிலான கடனுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அப்படிச் செய்ய சில நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் முன்வரும். அவை தரும் கடனை கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடாமல், அவை விதிக்கும் நிபந்தனைகள், சட்ட அம்சங்கள் போன்றவற்றைப் படித்துப் பார்த்து முடிவுக்கு வாருங்கள்.

வாழ்க்கையில் ஆடம்பரச் செலவுகளையும், போலி கெüரவத்துக்கான செலவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆயுள் இன்சூரன்ஸ், மருத்துவ இன்சூரன்ஸ் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளையும் அவசியம் எடுங்கள். நிதி நிர்வாகம் தொடர்பாக வீட்டில் அப்பா, அண்ணன் என்று பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் பேசி ஆலோசனை பெறுங்கள். மூத்தவர்களின் அறிவுரைகள் சமயத்தில் கசப்பாக இருந்தாலும், உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் நல்ல மருந்து என்பதை மறவாதீர்கள்.

தமிழ்நாட்டின் மரபே நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் மற்றவர்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லி பண்பாடு வழுவாமல் நடப்பதைப் பார்த்துக் கொள்வதுதான். கடன் இல்லாத வீடும் நாடும் யாருக்கும் அடிமையாகாது. தனிமனித சேமிப்பு நாட்டின் சேமிப்பாக மாறும் என்பதால், சேமிக்கப் பழகுங்கள். ""ஆன முதலின் அதிகம் செலவானால் மானம் அழிந்து, மதி கெட்டு,..'' என்று எச்சரிப்பது தமிழ் மூதுரை. அதை எந்நாளும் மறவாதீர்

Source: www.dinamani.com - Tuesday November 11 2008

Tuesday, November 11, 2008

Vehicles Congestion in Chennai


Publication: The Times Of India-Chennai;Date: Nov 11, 2008; Section: Times City; Page: 3

1.24 lakh new vehicles in six months add to road congestion

Jeeva | TNN

Chennai: If you thought Chennai’s roads are becoming more congested, here are the figures to prove it: In just six months — from April to September this year — 1.24 lakh new vehicles were registered in RTOs across the city, taking the total vehicle population in the city to 27.72 lakh.

A total of 1.13 lakh new non-transport vehicles and 11,000 transport vehicles were registered in the regional transport offices (RTOs) at Ayanavaram, Vyasarpadi, Puliyanthope, Tondiarpet, K K Nagar, Thiruvanmiyur, Valasaravakkam, Anna Nagar and Alandur in the city during the first half of this financial year.

Two-wheelers top the list in the number of new vehicle registrations. According to official records, 90,000 of the new vehicles registered between April and September this year are twowheelers, while 23,000 are cars.

The records reveal that an average of 15,000 new two-wheelers and 4,000 cars drive onto the city’s roads every month — which works out to an average of 700 new vehicles (500 two-wheelers and 130 cars) every day.

While July 2008 saw the registration of 23,000 new vehicles, the highest during the six-month period, August had the lowest registration of 17,000 new vehicles.

As of October 1 this year, the city has 26.13 lakh non-transport vehicles, of which two-wheelers account for 21.2 lakh and cars 4.5 lakh. There are 1.60 lakh transport vehicles in the city, including 52,000 autorickshaws, 30,000 lorries, 3,300 MTC buses, 2,000 school buses and 1,150 ambulances.

“The numbers show that we will see more new vehicles on the roads this year as compared to 2007-08. Last year, there were 1.87 lakh non-transport vehicles and 22,000 transport vehicles registered in the city, excluding the Alandur RTO office,” said a regional transport officer. “Usually, vehicle registration is lower during the Tamil months of Margazhi and Aadi, as most people believe it is inauspicious to buy new things during these months,” he said.

At present, the total vehicle population of Tamil Nadu is 1.06 crore, including 87 lakh two-wheelers and nine lakh cars. The state saw 5.25 lakh new vehicles added to its roads from April to September 2008, including 51,000 transport vehicles, 4.1 lakh two-wheelers and 52,000 cars.

While TN ranks second for overall vehicle population in the country, it has the highest number of two-wheelers among all states. Chennai city alone accounts for one-fourth of the total number of vehicles in the state.

Saturday, November 8, 2008

மானம் இழந்த விவசாயம்

மானம் இழந்த விவசாயம்

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின் வாரிசுகள் இன்று விருந்தினர்களாக வரும் சொந்தக்காரர்களுக்குக் கூட வயிராற ஒரு வேளை சோறு போட வக்கில்லாத தரித்திர நாராயணர்களாகிவிட்டார்கள்.

"மிகவும் தவறான விவசாய விலைக் கொள்கையைப் பின்பற்றி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கிவிட்டுக் கடன் தள்ளுபடி... அது... இது... என்று ஏமாற்றுகிறார்கள். விவசாயிகள் பிச்சைக்காரர்கள் இல்லை. மானியமும் வேண்டாம். கடன் தள்ளுபடியும் வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்குரிய விலை வழங்கப்பட்டாலே போதும்' இப்படிச் சொல்வது நான் மட்டுமல்ல, விவசாயிகள் சங்கத் தலைவரான மகேந்தர் சிங் திகாயத் கூறுவதும் இதுவே.

திகாயத் மேலும் கூறுகையில், ""1966-ல் ஒரு டிராக்டர் விலை ரூ. 11,000. இன்று அதுவே ரூ. 3 லட்சமாகிவிட்டது. 40 பைசாவுக்கு விற்ற டீசல் இன்று ரூ. 34. உரம், பூச்சிமருந்து, விதை விலைகள் நூறு மடங்கு உயர்ந்துவிட்டன. 1966-ல் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்தது. இன்று வாரத்தில் 3 நாள்கள் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. 1966-ல் 100 கிலோ கொண்ட ஒரு கோதுமை மூட்டையை விற்று 5 மூட்டை சிமெண்ட் வாங்கினோம். இன்று 1 மூட்டை சிமெண்ட் வாங்க 5 மூட்டை கோதுமையை விற்க வேண்டும். 10 கிராம் தங்கம் அன்று ரூ. 250. இன்று ரூ. 11,000. அன்று கோதுமைக்கு ரூ. 760 என்றும் கரும்புக்கு ரூ. 130 (1 டன்) என்றும் நிர்ணயித்தார்கள். இன்று கோதுமைக்கு ரூ. 1,000 என்றும் கரும்புக்கு ரூ. 818 என்றும் நிர்ணயமாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த விலையேற்ற அடிப்படையில் கவனித்து கோதுமைக்குரிய விலை ரூ. 3,000 என்றும் கரும்புக்கு ரூ. 2,500 என்றும் நிர்ணயம் செய்வதுதான் நியாயம்''.

திகாயத் கூறியுள்ளதை இன்றுள்ள எதார்த்தங்களை வைத்து கவனித்தால் அவர் கூறியுள்ளதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

உலகமயமாதல் விளைவால் விற்பனைப் பொருள்களில் தடையற்ற வணிகம் என்பது ஏனோ அரிசி, கோதுமைக்கு இல்லை. அரிசிக்கும் கோதுமைக்கும் மட்டுமே கட்டுப்பாடான பொருளாதாரம் உள்ளது. அரசு, ஏகபோகமே நிகழ்கிறது. அரசு கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது. அப்படி நிர்ணயிக்கப்படும் விலைக்கும் விஷம்போல் ஏறிவரும் சாகுபடிச் செலவுக்கும் தொடர்பே இல்லை. இந்திய விவசாயிகளில் ஐந்தில் நான்கு பேர் நடுத்தர - சிறு - குறுவிவசாயிகள். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்வோரும் அடக்கம். பஞ்சாப் - ஹரியாணா போன்ற மாநிலங்களில் நிலத்தின் விலை ஏறியதாலும் குத்தகையும் ஏறியதாலும் குத்தகை விவசாயிகளுக்கு நிறைய நஷ்டம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை 2005 - 06-ம் ஆண்டில் நிகழ்த்திய ஆய்வின்படி 1 ஏக்கர் கோதுமை சாகுபடி செய்ய சுமார் ரூ. 11,000 செலவாகிறதாம். அதில் குத்தகை முன்பணம் மட்டுமே ரூ. 5,000. அதன்பின் கூலி ஆள்கள் சம்பளம் ரூ. 1,700. இயந்திரங்கள், டிராக்டர், டிரில்லர் செலவு ரூ. 2,000. விதை ரூ. 400. உரம் ரூ. 1,100. பூச்சிமருந்து ரூ. 300. வட்டி ரூ. 200. இத்யாதி. இத்யாதி.

கேரள மாநிலத்தில் 2004 - 05-ல் நிகழ்த்திய ஆய்வில் 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யவும் ஏறத்தாழ ரூ. 10,500 வரை ஆகிறதாம். இங்கு கூலி ஆள் சம்பளம் மட்டுமே ரூ. 6,000 ஆவதால் கேரள மாநிலத்தில் நெல் சாகுபடி அழிந்து வருவதுபோல் ஹரியாணாவில் கோதுமை சாகுபடி அழிந்து வருவதாக அப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வு கூறுகிறது. பசுமைப்புரட்சியில் கொடிகட்டிப் பறந்த பஞ்சாப், மேற்கு உத்திரப் பிரதேச மாநிலங்களிலும் கேரள வியாதி வந்துள்ளது. கூலிவேலை செய்ய பிகாரிகள் வருகின்றனராம். கூலி ஆள் சம்பளம் பற்றி அந்த நாள்களுடன் இந்த நாள்களை ஒப்பிட்ட திகாயத் கூறும் ஒரு கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது.

"கூலிக்கு ஆள்கள் மலிவாகக் கிட்டிய காலத்தில் கூலி ஆள்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். இன்று 1 நாள் ஆண் கூலி ரூ. 120, பெண்கூலி ரூ. 70. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. கூலியை நெல்லாகவோ கோதுமையாகவோ வழங்கப்பட்ட அந்தக் காலத்தில் வேலை இல்லாத நாள்களில் பட்டினியிருக்க மாட்டார்கள். கூலி உயர்வு இருந்தாலும், பணவீக்கம் - விலை ஏற்றம் காரணமாக கூலியாள்கள் இன்று வேலையில்லாத நாள்களில் பட்டினி கிடப்பதால் மகிழ்ச்சியாக இல்லை'. எனினும் சாகுபடிச் செலவில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் கூலிச் செலவு உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். சம்பளம் கொடுக்க வக்கில்லாத விவசாயிகளின் மானம் காற்றில் பறந்து கொண்டுள்ளது. விவசாயிகளின் மானம் மரியாதை மட்டுமல்ல; விவசாயமே மானம் இழந்துவிட்டதே. மண்ணுக்கும் மரியாதை குறைந்து வருகிறது.

உரங்களைப் பற்றிய உண்மை நிலவரம் மிகவும் கசப்பாயுள்ளது. 2002-க்குப்பின் உரத்திற்குரிய விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. உர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம் இதனால் படிப்படியாக உயர்ந்து மானியத் தேவை ரூ. 1,19,772 கோடியாக உயர்ந்தது. விவசாயிகளின் நலன் கருதி உரவிலை உயர்த்தப்படவும் இல்லை. அதேசமயம் பட்ஜெட்டில் போதுமான அளவு உரமானியம் ஒதுக்க இயலாமல் துண்டு விழுந்தது. பல உர நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் தலையில் துண்டுபோட்டுக் கொண்டன. அதாவது மூடுவிழா. யூரியா உற்பத்தியில் முதல்நிலை வகித்த ஃபர்ட்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் ஃபர்ட்டிலைசர் லிமிடெட் போன்றவை யூரியா, உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டன. உரமானியம் வழங்கப்படாத காரணத்தினால் மட்டுமல்ல, இறக்குமதி மூலப்பொருள் நாஃப்தா விலை உயர்வு காரணமாகவும் யூரியா விலை உயர்ந்தது.

இனி முழுக்க முழுக்க இறக்குமதி உரத்தை நம்பி இந்தியா வாழப் போகிறதா? இயற்கை விவசாயத்தை நம்பித்தான் வாழப் போகிறதா? இதற்குக் காலம் பதில் சொல்வது இருக்கட்டும். பூச்சிமருந்து விஷயத்தில் ஆரோக்கியமான மாற்றம் தென்படுகிறது.

பூச்சிமருந்து என்பது கொடிய நஞ்சு. அதனால் மனிதருக்கு நோய் ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல; இந்த விஷத்தின் விலையேற்றமும் (இரண்டு ஆண்டுகளில் 100 சதம்) காரணமாக மாற்றுப் பூச்சிமருந்தாக மூலிகைப்பூச்சி விரட்டி, வசம்பு, பூண்டு, மஞ்சள், திரிகடுகம், திரிபலா, வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றின் பயன் அதிகரித்துவிட்டது. ஆந்திரப்பிரதேசத்தில் பல கிராமங்களில் பூச்சிமருந்து முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. சற்றுக் கூடுதல் விலையில் பயோமருந்துகளும் அறிமுகமாகிவிட்டன.

எனினும், விவசாயம் மானம் இழக்க மற்றொரு முக்கியக் காரணம் விதை. தன்மானமுள்ள ஒரு விவசாயி காய்கறி விதைகளாகட்டும், நெல், புஞ்சைதானியம், கோதுமை, பயறுவகை விதைகளாகட்டும் சொந்தமாகத் தயாரித்துச் சேமித்தார். வீரியரக விதைகள் அறிமுகமான காலகட்டத்தில் வேளாண்மைத்துறையின் விதைவிற்பனை நிலையங்களைச் சார்ந்து நின்று, விவசாயிகள் தாங்களே அறுவடை செய்து வந்த பாரம்பரிய நெல் ரகங்களைச் சேமிக்காமல், ஐ.ஆர்.8 மற்றும் தைச்சுங் ஜீன் பொருந்திய ஏடிடி எண் வரிசைகளை நம்பி நெல்விதை சேமிக்கும் மரபை இழந்தபோதே இந்திய விவசாயம் மானம் இழந்தது.

""ஆத்தூரு கிச்சடிச்சம்பா, ஆற்காடு கிச்சடிச்சம்பா, ஆனைக்கொம்பன், வையக்குண்டான், தங்கச்சம்பா, குதிரைவால், டொப்பி போன்ற பல நூற்றுக்கணக்கான விதைநெல் யாவும் தமிழ்மண்ணில் கற்பரசிகளுக்குப் பிறந்தவை. வீரியரக நெல் விதைகள் அன்னிய மண்ணில் பிறந்தவை. வீரியரக விதை நம்மிடம் குடிகொண்டபோதே மண்ணின் மானம் கப்பலேறியது. ஜீன் மாற்று விதைகளை - அதிக விலை கொடுத்து மஹைக்கோ, மான்சென்டோ போன்ற பன்னாட்டு நிறுவன விதைகளுக்கு இந்திய விவசாயம் அடிமையாகி இந்த மண்ணின் மானம் விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்குப் போனதால் இந்திய விவசாயிகள் இன்று அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். வீரிய ரக விதைகளை கிலோ ரூ. 20க்கு வாங்கி வந்த காலம் மாறிப்போய் இன்று ஜீன் மாற்று விதைகள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 1,000 வரை விலை கொடுத்து வாங்கிப் போதிய அளவு விளைந்தும்கூட அதற்குரிய விலைகளை விற்கும்போது பெற முடியவில்லை. திகாயத் கூறுவதுபோல், கூடுதல் விலை கொடுத்து வாங்கும் இந்த விதைகளின் சாகுபடிச் செலவும் கூடுதல் என்பதை கவனித்தல் நலம்.

விவசாயிகளைச் சுரண்டும் ஒரு புதிய விதைக் கொள்கை விவசாயத்தை மானமிழக்க வைத்துள்ளது. 2004 விதைச்சட்டம் 1966 விதைச்சட்டத்தைச் செல்லாக்காசாக்கிவிட்டது. புதிய விதைச்சட்டத்தில் தனியார் ஆதிக்கம் ஓங்கிப் பொதுத்துறை கேலிக்குரியதாகிவிட்டது. இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம் அரசுப் பணத்தைக் கொண்டு விதை ஆராய்ச்சி செய்து மாநில வேளாண்மைத் துறைக்கு விதைகளை அனுப்பியது. கட்டாக், ஆடுதுறை ஆராய்ச்சி நிறுவனங்கள் எல்லாம் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்துக்குக் கட்டுப்பட்டவை. வீரியரக விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலைக்கு வழங்கப்பட்டன. ஆனால் அரசு ஏகபோகத்தை அகற்றிவிட்டுப் பன்னாட்டு விதை நிறுவனங்களைத் தூக்கி நிறுத்தி, தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டது. பன்னாட்டு விதை நிறுவனங்களின் விரிவாக்கப் பணியின் சுறுசுறுப்பு பொதுத்துறையில் இல்லாத காரணத்தால் பன்னாட்டு விதை நிறுவனங்களின் வீரிய ஒட்டு மற்றும் ஜீன் மாற்று பிடிடி விதைகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதில் மற்றொரு கொடுமை, வேளாண் விஞ்ஞானிகளின் துரோகச் செயல். அரசுத்துறையில் மக்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகப் பெற்ற இந்த விஞ்ஞானிகளைத் தனியார் - பன்னாட்டு விதை நிறுவனங்கள் ஐந்து லகர சம்பளம் கொடுத்து வாங்கின.

அரசுப் பணியிலிருந்து தனியார் விதை நிறுவனங்களுக்குச் செல்லும்போது இந்த விஞ்ஞானிகள் அரசுப்பணத்தில் ஆராய்ச்சி செய்த மூலப்பொருள் சாதனங்களையும் கொண்டு போய்விட்டனர். அரசுத்துறை ஆராய்ச்சியே தனியார் ஆராய்ச்சியாக மாறியுள்ளது. பொதுத்துறை வழங்கிய வீரிய ரக நெல், கோதுமை விதைகளை விவசாயிகள் சேமித்து அடுத்த நடவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் வீரிய ஒட்டு பி.டிடி விதைகள் ஒரு அறுவடைக்குப் பின் மலடாகிவிடும். ஆகவே, ஒரு விவசாயி தன் கையை நம்பக்கூடிய ஒரு தற்சார்பை இழந்து விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாகிவிட்டார். விஞ்ஞானிகள் துரோகிகளாகிவிட்டனர்.

இன்று பன்னாட்டு விதை நிறுவனங்கள் அளிக்கும் வீரிய ஒட்டு ஜீன் மாற்றம் - பி.டிடி ரக விதைகளை - மலட்டு விதைகளை என்று பயன்படுத்தினோமோ, அன்றே விவசாயத்தின் மானபங்கம் வெளிச்சமாகிவிட்டது. அன்று திரௌபதியின் வஸ்திரோபகர்ணத்திற்கு - அதை நிகழ்த்த முடியாதபடி கண்ணபரமாத்மா காப்பாற்றினார். ஆனால் இந்தக் கலியுகத்தில் விவசாயம் - விவசாயிகளின் வஸ்திரோபகர்ணத்தைக் காப்பாற்ற அந்தக் கண்ணபரமாத்மா வரவில்லையே, ஏன்? துரியோதனர்களின் சபைக்கூட்டம் தொடர்வதினால்தானோ!

Source: www.dinamani.com - Friday November 7 2008

தெரிந்தே செய்யும் தவறு!

தெரிந்தே செய்யும் தவறு!

கடந்த 17 ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்ட எச்சரிக்கைகள் அனைத்தும் இப்போது உண்மையாகி வருகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை அறிவிக்கப்பட்ட நேரத்தில் எழுப்பப்பட்ட முதலாவது எச்சரிக்கை, அரசின் தலையீடுகளை முழுமையாகத் தளர்த்துவதும், உலகமயம் என்கிற பெயரில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் நமது பொருளாதாரத்தை இணைப்பதும், நம்மைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதுதான். வளர்ச்சி அடைந்த நாடுகள் பொருளாதாரச் சரிவுகளை நேரிடுவதுபோல, வளரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு அதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சக்தி கிடையாது என்பதுதான் அந்த எச்சரிக்கைக்குக் காரணம்.

அமெரிக்காவில் அரசின் தலையீடு இல்லாததால் ஒரு சில தனியார் வீட்டுவசதி நிறுவனங்களும், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்த தவறுகளுக்கும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இந்தியாவும் பலியாக்கப்பட்டிருக்கிறது. இதுதான் உலகமயமாக்கலின் வேதனை தரும் தாக்கம். அமெரிக்காவின் தோளைப் பிடித்துக் கொண்டிருக்க நாம் முடிவு செய்ததால், அந்த நாடு ஆட்டம் காணும்போது நாமும் ஆட்டம் காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

தன்னுடைய நாட்டு வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் திவாலாகத் தொடங்கி, அந்த வங்கிகளுக்குக் கடன் கொடுத்திருந்த நிதிநிறுவனங்கள் மூழ்கத் தொடங்கி, அந்த நிதிநிறுவனங்களில் முதலீடு செய்திருந்த அப்பாவிப் பொதுமக்கள் தங்களது சேமிப்புகளை இழக்க நேரிட்ட நிலையில், தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் அமெரிக்க அரசு தலையிட்டு, அந்த நிதி நிறுவனங்களுக்குப் பண உதவி அளித்து மக்கள் மத்தியில் எழுந்த பீதியையும், பொருளாதாரத் தேக்கத்தையும் களைய முற்பட்டது. அப்படி எதுவுமே நடக்காமல், இந்தியாவில் திடீரென்று விலைவாசி உயர்கிறது, பங்குச் சந்தை சரிகிறது, ஏற்றுமதி குறைகிறது, அரசு தவிக்கிறது.

வரைமுறை இல்லாமல் அன்னிய முதலீடுகளைப் பங்குச்சந்தையில் அனுமதித்தால், எப்போதுமே நாம் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் முப்பெரும் பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங் - சிதம்பரம் - அலுவாலியா குழுவினர் கேட்க மறுத்தனர். அவரவர் நாட்டில் பிரச்னைகள் வரும்போதோ, நமது நாட்டின்மீது அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழக்கும்போதோ அல்லது வேண்டுமென்றே நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று நினைத்தாலோ, குறுகிய காலத்தில் அன்னிய முதலீடுகளைத் திருப்பி எடுப்பதன் மூலம் நமது பொருளாதாரம் சிதைக்கப்படும் ஆபத்து இருப்பதைத் தெரிந்தும் தெரியாததுபோல மன்மோகன்சிங்கும் சகாக்களும் இருந்தது ஏன்? புரியவில்லை.

பங்குச்சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரங்கள் எல்லாமே, சூதாட்ட மனப்போக்குள்ள பங்குத்தரகர்களின் கையில் அகப்பட்டுத் தவிக்கும் போக்கை உடையவை. அதனால்தான் நமது பழைய பொருளாதாரக் கொள்கை சேமிப்பின் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது. மக்கள் ஊதாரித்தனமாகச் செலவிடுவதை ஆதரிக்காமல், தனிநபர் சேமிப்பு, அரசுத் தரப்பில் ஆஸ்தி அதிகரிப்பு, பொதுச் சொத்துகளை அதிகப்படுத்தும் முதலீடுகள் என்று முந்தைய பொருளாதார நிபுணர்கள் திட்டமிட்டனர்.

மக்கள், அரசு வங்கிகளிலும், அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும், அரசு நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும், தங்கத்திலும் முதலீடு செய்தனர். இந்த முதலீடுகள் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்பட்டன. இப்போது, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச்சந்தை என்று மக்களின் முதலீடுகள் தனியார் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்க வழி வகுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், உலகளாவிய தாக்கங்கள் நம்மைத் தள்ளாட வைக்கின்றன.

வங்கிகள் அதிகமாகக் கடன் வசதி அளித்துப் பொருளாதாரம் தேக்கமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நிதியமைச்சகத்தின் இப்போதைய முடிவு. இதற்காக, மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 3,00,000 கோடியை அரசு வங்கிகளுக்கு அளிக்கப் போகிறது. அந்த வங்கிகள் குறைந்த வட்டிக்குக் கடன்களை வாரி வழங்கப் போகின்றன. விளைவு? பணப்புழக்கம் அதிகரிக்கும். விலைவாசியும் அதிகரிக்கும். வாராக் கடன்களும் அதிகரிக்கும். முதலில் பிரகாசமாகத் தெரியும் பொருளாதாரம் விரைவில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரும்.

தெரிந்தே தவறு செய்கிறார்கள். கேட்டால் உலகம் போற்றும் பொருளாதார மேதைகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிக்கனத்தையும் சேமிப்பையும் வற்புறுத்தாமல், கடனை வாரி வழங்கி அகலக்கால் வைக்க வழிகாட்டுகிறார்கள். வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தனா, துந்தனா, துந்தனா!

Source: www.dinamani.com - Saturday November 8 2008