I LOVE TAMIL


Tuesday, April 13, 2010

நம்பிக்கை தரும் இந்தியா

அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது போலவும், இந்தியா தான் கவனக் குறைவாக இருப்பது போலவும், இந்தியாவில் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பேசியும், எழுதியும் வருகின்றனர். ஆனால் யூகங்களும், உண்மையும் வேறுவிதமாக உள்ளன என்பதை சர்வேக்கள் காட்டுகின்றன. நில மாசுபாடுக்கு அடிப்படைக் காரணமாக பூச்சிக்கொல்லிகள் உள்ளன. இவை நிலத்தை மட்டுமின்றி நீர் நிலைகளையும் பாதிக்கின்றன. உலகில் பயன்படுத்தும் மொத்த பூச்சிக்கொல்லி மருந்துகளில், விவசாய நாடான இந்தியா, வெறும் 3 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. ஆனால் உலகில் விளையும் மொத்த தானிய உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு 16 சதவீதமாகும். அண்டை நாடான சீனா ஒரு எக்டேருக்கு 10.8 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியா ஒரு எக்டேருக்கு 380 கிராம் பூச்சிக் கொல்லி மருந்து மட்டுமே பயன்படுத்துகிறது. ஜப்பானில் ஒரு எக்டேருக்கு 16.56 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துகிறது. இந்த பட்டியலில் இந்தியா தான் கடைசியில் உள்ளது என்பது ஆறுதலான விஷயம்.

No comments: