I LOVE TAMIL


Friday, August 13, 2010

சூரிய சக்தியில் இயங்கும் ஏடிஎம்

மும்பையில் ஒபரா ஹவுஸ் அருகில், இன்டஸ் இன்ட் வங்கியால் நிறுவப்பட்டுள்ள ஏடிஎம் மெஷின், இந்தியாவில் சூரிய ஒளியினால் இயங்கும் முதல் ஏடிஎம் மெஷினாகும். சூரிய ஒளி சக்தியில், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. இது தவிர மீதி நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் சூரிய ஒளி சக்திக்கு தானாக மாற்றிக் கொள்ளும் வசதியையும் பெற்றுள்ளது. சூரிய ஒளியினால் ஏடிஎம் மெஷின் இயங்கும் போது, ஒரு மணி நேரத்தில் 6 யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. ஒரு ஆண்டில், 355 நாட்கள் முழுமையான சூரிய ஒளி கிடைக்கிறது. இதனால் 2 ஆயிரத்து 10 யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. 1.42 டன் கார்பன் தடை செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக ஏடிஎம் மெஷினை நிறுவுவதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் சூரிய ஒளி ஆற்றல் மூலமாக ஏடிஎம் மெஷினை நிறுவுவதற்கு 7 லட்சம் ரூபாய் செலவாகிறது. சோலார் முறையில் இயங்கினால், 5 ஆண்டுக்குள் ஏடிஎம் நிறுவிய செலவுத்தொகையை பெற்று விடலாம்.

நன்றி: www.dinamalar.com -  13 Aug 2010

No comments: