I LOVE TAMIL


Saturday, September 26, 2009

இயற்கை வேளாண்மையில் உற்பத்தியான பழைய வெள்ளைப் பொன்னி விற்பனைக்கு தயார்!


வேலூர், செப். 22: ரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளைப் பொன்னி அரிசி விற்பனைக்கு உள்ளதாக இந்திய அரசின் சேவை அமைப்பான இயற்கை வேளாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது.

இதன் ஆலோசகர் கோ. புருஷோத்தமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்கள் பலவித நோய்களால் குறிப்பாக நீரிழிவு, புற்று நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இவற்றுள் மூலகாரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுதான்.

அரிசி, காய்கறிகள், பழங்கள் முதலியன ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இட்டு பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுள் பூச்சி மருந்துகள் தங்கி உணவுப் பொருள் நஞ்சாகின்றன என்று 1980-ம் ஆண்டிலேயே உலக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிவித்தனர்.

இதன்பின் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து இடாமல் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்து மக்களுக்கு அளிக்க வேண்டுமென திட்டமிட்டு செயல்பட தொடங்கியுள்ளன.

இந் நிலையில் வேலூரில் செயல்பட்டு வரும் இயற்கை வேளாண்மை இயக்கம், ஜவ்வாது மலை கிராமங்களில் இயற்கை முறையில் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து இடாமல் மலை வாழை, சாமை, மா, பலா, சிறு தானியங்கள் மற்றும் அரிசி உற்பத்தியை உழவர்கள் மூலம் மேற்கொண்டுள்ளது. இதை மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக இயற்கையில் விளைந்த, நஞ்சு இல்லாத பழைய வெள்ளைப் பொன்னி அரிசி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரிசி சமைத்த மறுநாள் வரை சாதம் கெடாமல் உள்ளது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்ண ஏற்ற அரிசியான இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

இந்த அரிசியை வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

முகவரி: கோ. புருஷோத்தமன், இயற்கை வேளாண்மை இயக்கம், 15, மூன்றாவது நெடுஞ்சாலை, அண்ணா நகர் மேற்கு, வேலூர் (தொலைபேசி எண்: 0416-2234898, மொபைல்: 9894784863).

Thanks to : www.dinamani.com - 23 Sep 2009

No comments: