I LOVE TAMIL


Tuesday, November 24, 2009

முதல்​மு​றை​யாக இரவு நேரத்​தில் அக்னி-​2 சோதனை

பல​சூர்,​ நவ. 23: அணு ஆயு​தங்​களை ஏந்​திச் செல்​லும் திற​னு​டன் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்ள அக்னி-​2 ஏவு​க​ணைச் சோதனை முதல் முறை​யாக இரவு நேரத்​தில் திங்​கள்​கி​ழமை நடத்​தப்​பட்​டது.

   ஒ​ரி​சா​வில் பல​சூ​ரில் உள்ள ஏவு​க​ணைத் தளத்​தில் இருந்து திங்​கள்​கி​ழமை இரவு 7.50 மணிக்கு இந்த சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.
   இது குறித்து மத்​திய பாது​காப்பு மற்​றும் மேம்​பாட்டு கழக ​(டிஆர்​டிஓ)​ வட்​டா​ரங்​கள் கூறி​ய​தா​வது:​
    20 மீ. நீள​மும்,​ 17 டன் எடை​யும் கொண்ட இந்த ஏவு​கணை 2 ஆயி​ரம் கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் வகை​யில் உள்​நாட்​டி​லேயே வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு டன் எடை​யுள்ள வெடி​பொ​ருள்​க​ளைத் தாங்​கிச் செல்​லும் திறன் உடை​யது.
    இந்த ஏவு​கணை ஏற்​கெ​னவே ராணு​வத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. அக்னி-​2 ஏவு​க​ணையை முழு​மை​யாக செயல்​ப​டுத்​து​வ​தற்​கான வழி​மு​றை​யில் இந்த சோதனை முக்​கி​ய​மான நிகழ்​வா​கும்.
   சோ​தனை வெற்​றி​க​ர​மாக நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது. இதன் செயல்​பா​டு​கள் குறித்த மற்ற விவ​ரங்​கள் ஆரா​யப்​பட்டு வரு​கின்​றன என டிஆர்​டிஓ வட்​டா​ரங்​கள் தெரி​வித்​தன.
   இ​தற்கு முன்​ன​தாக,​ 700 கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் அக்னி-​1 ஏவு​க​ணை​யும்,​ 3,500 கி.மீ. தொலை​வில் உள்ள இலக்​கைத் தாக்​கும் அக்னி-​3 ஏவு​க​ணை​யும் சோதனை செய்​யப்​பட்​டுள்​ளன.


நன்றி : http://dinamani.com - 24.11.2009

No comments: