Monday, October 19, 2009
உணவுப் பற்றாக்குறை - காத்திருக்கும் ஆபத்து!
Saturday, September 26, 2009
இயற்கை வேளாண்மையில் உற்பத்தியான பழைய வெள்ளைப் பொன்னி விற்பனைக்கு தயார்!
ஏன் முடியாது?
Wednesday, September 2, 2009
தண்ணீர்... தண்ணீர்!
ஊழலின் உறைவிடம்!
அரக்கோணத்தில் ரூ. 1.90 லட்சம் பிடிபட்டதுடன், அந்த அலுவலகத்தின் இணை சார்-பதிவாளர் தன் சொந்தச் செலவில் 7 பேரை தினக்கூலிக்கு பணியமர்த்தியிருக்கிறார் என்றால், கையூட்டு எந்த அளவுக்குக் கிடைக்கிறது என்பது வெளிப்படை.
இப்படி திடீர் சோதனைகளை முடுக்கி விட்ட தமிழக அரசையும், தொடர்புடைய அதிகாரிகளையும் பாராட்டத்தான் வேண்டும். அதேநேரத்தில், இவர்கள் மீது உண்மையாகவே நடவடிக்கை எடுத்து, தண்டிக்கப்பட்டால்தான், இந்த அலுவலகங்களில் லஞ்சம் ஓரளவு கட்டுப்படும். இல்லாவிட்டால் இந்த நடவடிக்கைகள் வெறும் விளம்பரத்துக்காக என்பதாய் பிசுபிசுத்துப் போய்விடும்.
இச்சோதனைகளின் விளைவாக, எல்லா கட்டணங்களையும் வங்கி வரைவோலையாகக் கொண்டு வாருங்கள் என்று, ஏதோ பணத்தை கையால் தொடுவதற்கே கூச்சப்படுவதைப்போல, பத்திரப் பதிவகங்களில் தற்போது சொல்லப்படுகிறது. பிரச்னை, கட்டணங்கள் ரொக்கமா அல்லது வரைவோலையா என்பதல்ல. கையூட்டு வாங்குகிறார்களா இல்லையா என்பதுதான்.
பத்திரப் பதிவகங்களில் இந்த அளவுக்கு ஊழல் நடப்பதற்குக் காரணம், நில விற்பனையைப் பதிவு செய்யவும், நில உரிமையாளர் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கும், நிலத்தின் மதிப்பைக் குறைத்துப் பதிவு செய்து, பத்திரச் செலவைக் குறைக்கவும்தான். இந்திய மொத்த வருவாயில் (ஜிடிபி) தற்போது ரியல் எஸ்டேட் வணிகத்தின் பங்கு 10 சதவீதத்துக்கும் மேல். ஆகவே, பத்திரப் பதிவுகளுக்கு கையூட்டும் ஊழலும் மோசடிகளும் அதிகமாகிவிட்டன. கருப்புப் பணத்தைக் கையில் வைத்திருப்போரின் முதல் வேலை நிலம் வாங்குவதுதான். இருந்தும், நியாயமான ஆவணங்களைப் பதிவு செய்யவும் கையூட்டு இல்லாமல் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு சீர்கேடான நிலைமை பத்திரப் பதிவகங்களில் இருக்கிறது.
2004-ம் ஆண்டு உலக வங்கி ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில்தான் சொத்துப் பதிவுக்கான செலவினங்கள் மிக அதிகம். மேலும், நில ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் லஞ்சம் ஆண்டுதோறும் ரூ.123 கோடி என்ற தகவல் நிலஅதிர்வு போன்றதுதான்.
மேலும், நிலமதிப்பைக் குறைத்துப் பதிவு செய்வதன் மூலம் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு, நாட்டின் மொத்த வருவாயில் 1.3 சதவீதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 2007-ல் இந்தியாவின் மொத்த உற்பத்தி வருவாய் (ஜிடிபி) 1,21,749 கோடி அமெரிக்க டாலர் என்றால், நிலமதிப்பைக் குறைக்கும் மோசடிகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு 1,582 கோடி அமெரிக்க டாலர்கள்! அரசுக்கு வர வேண்டிய ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வருமானத்தையும் இழந்து, இவர்களுக்குச் சம்பளமும் கொடுத்து, கையூட்டும் மக்கள் கொட்ட வேண்டும் என்றால் இந்த நிலைமையை என்னவென்பது?
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலிப் பத்திர ஊழல் பல ஆயிரம் கோடி அளவுக்கு நடந்தது. அதில் சிலர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். நியாயமாக, ஒவ்வொரு சார்-பதிவாளருக்கும் இந்தக் குற்றத்தில் பொறுப்பு உண்டு. ஒரு வங்கியின் காசாளர் ஒரு நூறு ரூபாய் கள்ளநோட்டைத் தெரியாமல் வாங்கி, அது கண்டுபிடிக்கப்பட்டால், அதை வங்கிக் கணக்கில் சேர்க்க முடியாது. அந்த இழப்பை அவர்தான் செலுத்த வேண்டும். ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான போலிப் பத்திர ஊழலில் சார்-பதிவாளர்கள் தொடர்பே இல்லாதது போல, கழற்றிவிடப்பட்டார்கள்.
போலிப் பத்திரம் எந்த அளவுக்கு புழக்கத்தில் சென்றுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய, நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் பத்திரங்களை நேரில் கொண்டுவந்து மறுமுத்திரை பெற்றுச் செல்ல அறிவுறுத்தி, அந்த நேரத்தில் போலிப் பத்திரத்தைக் கண்டறிவதுடன் நில ஆவணங்களை கணினியில் ஒழுங்குபடுத்தலாம் என்ற நல்ல ஆலோசனையை அரசு முன்வைத்தபோது, அதை அப்படியே அமுக்கி, நடைமுறைப்படுத்த முடியாதபடி செய்தவர்களும் பதிவுத்துறை அதிகாரிகள்தான். காலைச் சுற்றிய பாம்பு கடித்துவிடும் என்ற அச்சம்!
பத்திரப்பதிவுக்கு வரும் வீடு அல்லது நிலத்தின் வழிகாட்டி மதிப்புக்கும், சந்தை மதிப்புக்கும் பெருத்த வேறுபாடு நிலவுகிறது. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பத்திரப்பதிவு அதிகாரிகளுக்குத் தரப்பட்டிருக்கிறது. அதனாலும் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் ஆகியவை சொத்தின் மதிப்பில் சுமாராக 7.7 சதவீதம் வருவதும்தான் இந்த ஊழல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். இதைச் சீர்செய்யாதவரை இத்துறையில் ஊழலை ஒழிக்கவே முடியாது.
ஆவணங்களை முழுமையாக கணினிமயமாக்குவதுடன், ஒவ்வொரு ஊரின் பெயர், நிலத்தின் புல எண் குறிப்பிட்டாலே, அது யார் பெயரில் உள்ளது, எந்த ஆண்டு கடைசியாக விற்பனைப் பரிமாற்றம் நடந்தது, தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு என்பதை அனைவரும் பார்க்கும் வெளிப்படைத் தன்மை இருந்தாலே போதுமானது - பதிவுத்துறை ஊழலை 99 சதவீதம் ஒழித்துவிட முடியும்
Monday, August 17, 2009
கலப்பு மின்சாரம்
கலப்பு மின்சாரம்
"கலப்பு பொருளாதாரம்' என்று பொருளாதார துறையில் பேசுவது போல ஆற்றல் உற்பத்தி துறையில் "கலப்பு மின்சாரம்' என்ற கருத்தினை சுற்றுச்சூழல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர். எல்லா வகையான மின்சார உற்பத்தி முறை களிலும் நிறைகளும் குறைகளும் பொருளாதாரக் காரணிகளும் இருப்பதால் கலப்பு மின்சார உற்பத்தியே தற்போதைய தேவை என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். நீர் மின்சார உற்பத்தியில் ஒரு மெகாவாட் உற்பத்தி செய்ய ரூ.ஒரு கோடி செலவாகிறது. சூரிய ஒளியின் மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.10 கோடி முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அனைத்து நாட்களிலும் சூரிய ஒளி கிடைப்பது இல்லை என்பதால் திருப்பதியில் சூரிய ஆற்றல், காற்றைப் பயன்படுத்தி "கலப்பு மின்சாரம்' தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 200 நாட்கள் சூரிய ஒளியை பயன்படுத்தியும், மீதி நாட்கள் காற்றைப் பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
Source : www.dinamalar.com - 17.08.2009
Friday, June 26, 2009
`பயோபின்' மக்கும் பைகள் அறிமுகம்
வெள்ளி, 26 ஜூன் 2009( 12:17 IST )
சென்னையைச் சேர்ந்த சன் ஸ்டார் டிரேடிங் நிறுவனம், பிரிட்டன் நாட்டின்தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட `பயோபின்' எனும் மக்கிப்போகும்தன்மையுடைய பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தவகை பைகள் அல்லது கவர்களால், சுற்றுச்சூழல் மாசு படுவதுபெருமளவுக்xகுத் தவிர்க்கப்படுவதாக நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜேஷ்கேதான், சி.எல். முத்தையா ஆகியோர் தெரிவித்தனர்.

இந்தியாவின் தற்போதைய முக்கியப் பிரச்சினையான `புவி வெப்பமடைதலை' ஓரளவுக்கு தவிர்க்க இந்த வகை பைகள் உதவும் என்று தெரிவித்த அவர்கள், வீடுகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இவற்றைப் பயன்படுத்துவதால் எதிர்கால சந்ததியினரை பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்றனர்.
இந்தவகை பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தடுக்கப்படுவதாக ராஜேஷ் குறிப்பிட்டார்.
மக்கும் தன்மைக்கான (ASTM 5208) ஏஎஸ்டிஎம் 5208, 5510, 5988-96, 6954-04 சான்றிதழ்களையும் இந்த பைகள் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரிட்டனின் `சிம்பொனி என்விரான்மென்ட் இங்' நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட d2W தொழில்நுட்பத்தில் `பயோபின்' பைகள் தயாரிக்கப்படுவதாக முத்தையா தெரிவித்தார்.
பல்வேறு அளவுகளில் இந்த வகை பைகள் கிடைப்பதாகவும், வழக்கமான பிளாஸ்டிக் பைகளைப் போன்றே தோற்றமளித்த போதிலும் சில மாதங்களில் மக்கும் தன்மை கொண்டவை என்பதோடு, பிளாஸ்டிக் பைகளுக்கே உரிய அனைத்து அம்சங்களும் கொண்டவை என்றார் அவர்.
மேலும் முழுக்க, முழுக்க மறுசுழற்சிக்கு ஏற்றவை. இவற்றை மறுசுழற்சி செய்யும்போது எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை.
பாலி எத்திலின் அல்லது பாலி புரோப்பிலின் முறையில் இவை தயாரிக்கப்படுவதாகவும் இயக்குனர்கள் கூறினர்.

இந்த வகை பைகளை மக்கச் செய்வதால் கார்பன் டை ஆக்ஸைடு, தண்ணீர் மற்றும் கழிவுகளாக மாறி விடும் என்றும், கழிவுகளும் மிகவும் குறைந்த அளவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதுடன், கழிவுகளின் தன்மை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பயோபின் பைகளை ஐஎஸ்ஓ 9001 -2000 தரச்சான்று பெற்ற சிம்பொனி பாலிமர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்குகிறது.
நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா நிறுவனர் எம்.பி. நிர்மல் கலந்து கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான பைகளை அறிமுகப்படுத்தியமைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
எக்ஸ்னோரா எப்போதுமே பசுமையை நோக்கியே செயல்பட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். பசுமைப் புரட்சியை நோக்கிய மற்றொரு மைல்கல்லாக `பயோ பின்' பைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
ப்ரிஸம் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்யன் பட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நன்றி : http://tamil.webdunia.com/newsworld/finance/news/0906/25/1090625091_1.htm