I LOVE TAMIL


Friday, March 12, 2010

புத்தாண்டைப் புரிந்துகொள்வோம்

ஆங்கிலப் புத்தாண்டு என்றதுமே இன்றைய இளைஞர்களுக்கு நினைவுக்கு வருவது கேளிக்கைகளும், கொண்டாட்டங்களும் தான் புத்தாண்டு ஒவ்வொரு நாட்டிலும் வெவ் வேறு நாள்களில் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகளால் ஜனவரி 1-ம் தேதியே புத்தாண்டாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
ஜனவரி 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது பழமையான வரலாறு. கி.மு. 46-ல் ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசர் ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவித்தார்
ஜனுஸ் என்பவர் ரோமானியர்களின் வாயில் கடவுள் (காட் ஆஃப் கேட்). அவருக்கு முன்னும் பின்னுமாக இரண்டு முகங்கள் உண்டு. பின்னால் இருக்கும் முகம் பழைய விஷயங்களையும், முன்னால் இருக்கும் முகம் எதிர்காலத்தையும் குறிப்பதாக இருந்தது புது வருஷத்துக்குள் பிரவேசிக்க உதவும் கடவுளாக அவரை ரோமானியர்கள் வழிபட்டனர்.
ஜனுஸ் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டே ஜனவரி என்று ஆண்டின் முதல் மாதத்துக்கு ஜூலியஸ் சீசர் பெயர் சூட்டினார் ஆனால் முதல் புத்தாண்டு கொண்டாட் டத்திலேயே சீசர் மிகப்பெரிய வன்முறையை அரங்கேற்றினார். புரட்சியில் ஈடுபட்ட யூதர் களுக்கு எதிராக தனது படையை ஏவிவிட்டு தெருக்களில் ரத்த ஆறு ஓடச் செய்தார்.
பின்னர் வந்த புத்தாண்டுகள் கேளிக்கை தினமாகவே கொண்டாடப்பட்டன
கிறிஸ்தவ மதம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய காலகட்டத் தில் அந்நாடுகளில் அறிவிப்பு நாள் (அனவுன் ஷியேசன் டே) என்று கூறப்படும் மார்ச் 25-ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி, "கடவுளின் அருளால் ஏசு கிறிஸ்து உனது கருவில் உருவாவார்' என்று மேரி மாதாவுக்கு தேவதூ தர் கேபிரியல் மார்ச் 25-ம் தேதி அறிவித்தார் என்று கூறப்படுகிறது
1066-ம் ஆண்டு இங்கிலாந்தின் மன்னரான வில்லியம், ஜூலியஸ் சீசரைப் பின்பற்றி ஜனவரி-1 ம் தேதியைத்தான் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட் டார். எனினும் அவரது காலத்துக்குப்பின் ஜனவரியை நிராகரித்து மார்ச் 25-ம் தேதி மீண்டும் புத்தாண்டாக ஏற்கப்பட்டது
பின்னர் சுமார் 500 ஆண்டுகளுக்குப்பின் 1582-ம் ஆண்டு போப் எட்டாவது கிரிகோரி, மீண்டும் ஜனவரி ஒன்றை புத்தாண்டாக பிரகடனப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை ஜனவரி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது
ஆனால் அவரும் யூதர்களுக்கு எதிரான போக்கைக் கைவிடவில்லை. 1577-ல் புத் தாண்டு தினத்தன்று, ரோமில் உள்ள அனைத்து யூதர்களும் கண்டிப்பாக கத்தோலிக்க மதவழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு அடுத்த புத்தாண்டில் யூதர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதற்காக யூதர்கள் மீது சிறப்பு வரி விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்
1581-ம் ஆண்டு புத் தாண்டு தினத்தில் யூதர்களின் மத புத்தகங்களைக் கைப்பற்றி அழிக்குமாறு படையின ருக்கு போப் கிரிகோரி உத்தரவிட்டார். இதனை அமல்படுத்த முயன்றபோது ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற காரணங்களால்தான் யூதர்களின் நாடான இஸ்ரேலில் இன்றும் ஜனவரி 1-ம் தேதி பொது விடுமுறை கிடையாது. காலண்டரில் மாற்றம் கொண்டு வந்த போப் கிரிகோரி, லீப் ஆண்டைக் கணக் கிட்டு, காலண்டரில் பத்து நாள்களை அதிகப் படுத்தி, 1582-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதியை, அக்டோபர் 15-ம் தேதி என்று கடைப்பிடிக்க உத்தரவிட்டார். அவர் அங்கீக ரித்த காலண்டர் அவரது பெயரிலேயே "கிரி கோரியன் காலண்டர்' என்று அழைக்கப்படு கிறது
தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் போப் கிரிகோரியால் அங்கீகரிக்கப்பட்ட காலண்டர் பின்பற்றப்படுகிறது
பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உள்பட்ட இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அத னைப் பின்பற்றி ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. ஆங்கிலேயர்களால் எப்போதோ இந்தியா வுக்கு கொண்டு வரப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் இன்று பல கோடிகள் புரளும் வணிகமாகி விட்டது
நவயுவ இளைஞர்கள், இளைஞிகளையும், மேல் தட்டுமக்களையும் மையமாகக் கொண்டே ஹோட்டல்களிலும், விடுதிகளிலும், வணிக நிறுவனங்கள் ஆங்கிலப் புத் தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளைச் செய்கின்றன என்பது கண்கூடான உண்மை
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது விற்பனை உச்சத்தை எட்டுவது வருந்தத்தக்க விஷயம் கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவங்கள் எவரும் எளிதில் மறந்துவிட முடியாது
மும்பையில் இரண்டு இளம்பெண்கள் குடிபோதையில் இருந்த கும்பலால் பலாத்காரத் துக்கு உள்ளானார்கள். சென்னை ஹோட்டலில் நீச்சல் குளத்துக்கு மேல் அமைக்கப்பட் டிருந்த மேடை சரிந்ததில் இருவர் உயிரிந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினர் மனதில் மட்டுமல்லாமல் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் வலியை ஏற்படுத்தி விடுகிறது
இதற்காக கொண்டாட்டத்தை முற்றிலுமாக நிறுத்திவிட வேண்டும் என்று கூறுவதற் கில்லை. கொண்டாட்டத்தில் ஈடுபவர்கள் நிதானத்தையும், கட்டுப்பாட்டையும் தவறவி டக் கூடாது என்பதே முக்கியம்.
புத்தாண்டு பிறப்பு வழக்கமான ஒன்று என்றாலும் இலக்கை நிர்ணயித்து அதை எட்ட முயல்வதற்கான வரையறையாகக் கொண்டால் ஒவ்வொரு புத்தாண்டும் வாழ்க்கையின் ஏணிப்படியாகத்தான் அமையும்.

Thanks - www.dinamani.com - 27.12.2008

No comments: